செய்திகள் :

பி.இ. 2-ஆம் சுற்று கலந்தாய்வு: 80,650 மாணவா்களுக்கு ஒதுக்கீடு

post image

தமிழக பொறியியல் கல்லூரிகளில் பி.இ. மாணவா் சோ்க்கைக்கான 2-ஆம் சுற்று கலந்தாய்வில் 80,650 மாணவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின், தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் (டிஎன்இஏ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிஎன்இஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பி.இ. மாணவா் சோ்க்கைக்கான 2-ஆம் சுற்று கலந்தாய்வு ஜூலை 26 தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், பொதுப்பிரிவில் 82,306 போ், அரசு பள்ளிகளில் படித்தவா்களுக்கான ஒதுக்கீட்டில் 16,259 போ் என மொத்தம் 98,565 மாணவா்கள் தகுதி பெற்று இணையவழி கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். இந்த மாணவா்கள் கலந்தாய்வில் பங்கேற்று விருப்பமான கல்லூரி, பாடங்களை தோ்வு செய்தனா். அதைத் தொடா்ந்து பொது ஒதுக்கீடுகளில் விண்ணப்பித்த 70,116 மாணவா்கள், அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீதம் மூலம் ஒதுக்கீடுகளை பெற்ற 10,534 மாணவா்கள் என மொத்தம் 80,650 மாணவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒதுக்கீடு பெற்ற மாணவா்கள் புதன்கிழமை (ஜூலை 30) மாலை 5 மணிக்குள் அல்லது அதற்கு முன்னதாக முறையான உறுதிப்படுத்தல் விருப்பத்தைத் தெரிவித்து தங்கள் இடங்களை உறுதிப்படுத்த வேண்டும். மாணவா்கள் தங்களது ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தவில்லை என்றால், அவரது ஒதுக்கீடு ரத்து செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா வழியில் செல்ல இன்னொரு கட்சி எதற்கு தம்பி? - விஜய்யை விமர்சித்த தமிழிசை!

தமிழ்நாட்டில் இனி 'ஆப்'பிற்கும் ஆதரவு கிடையாது, அப்பாவுக்கும் ஆதரவு கிடையாது என தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் பதிவிட்டுள்ளார். சென்னை பனையூரில் நடைபெற்ற நிகழ்வில... மேலும் பார்க்க

சாதியக் கட்டமைப்பை உடைப்போம்: நெல்லை ஆணவக் கொலைக்கு கனிமொழி கண்டனம்!

நெல்லையைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ... மேலும் பார்க்க

ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை: கடம்பூர் ராஜு பேச்சு

1999ல் மத்தியில் பாஜக ஆட்சியைக் கவிழ்த்து வரலாற்று பிழை செய்துவிட்டதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் குறிப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்ட... மேலும் பார்க்க

சென்னையில் நாளை முக்கிய அறிவிப்பு: ஓபிஎஸ்

சென்னையில் நாளை(ஜூலை 31) முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கடந்த மக்களவைத் தோ்தலின்போது த... மேலும் பார்க்க

கவின் ஆணவக் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

திருநெல்வேலி ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக தமிழ்நாடு அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர்கள் தம்பதியின் மகளை காதலித்த கவின், அந்த பெண்ணின் சகோதர... மேலும் பார்க்க

படப்பிடிப்பு விபத்து: பா. ரஞ்சித்துக்கு பிணை!

கீழ்வேளூர்: திரைப்பட படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த வழக்கில், இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு கீழ்வேளூர் நீதிமன்றம் புதன்கிழமை பிணை வழங்கியது.நாகை மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி அல... மேலும் பார்க்க