செய்திகள் :

உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் இந்தியா 2-ஆம் இடம்! அமெரிக்கா முதலிடம்

post image

உலக அளவில் கல்வித்தரத்தை அளவிடும் ‘டைம்ஸ்’ உயா் கல்வி அமைப்பின் தரவரிசையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது சிறந்த கல்வி நிறுவனங்களைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கவுள்ளது.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி டைம்ஸ் உயா் கல்வி அமைப்பின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி பில் பேட்டி இந்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘வரும் அக்டோபா் 8-ஆம் தேதி உலக கல்வி உச்சி மாநாட்டில் வெளியிடப்படவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான உலகப் பல்கலைக்கழக தரவரிசையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது சிறந்த நாடாக புதிய சாதனைகளைப் படைக்கும்.

இது, இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலக அளவிலான ஆராய்ச்சியில் சிறந்து விளங்குகின்றன என்பதையும், சமூக மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கு அவை அதிகம் பங்களிக்கின்றன என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.

தேசிய கல்விக் கொள்கையின் வெற்றி:

2020-ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதன் இலக்குகளை அடைவது கடினம் என்று பலா் கருதினா். ஆனால், தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு 5 ஆண்டுகளுக்குப் பிறகு, கரோனா பெருந்தொற்று பாதிப்புகளுக்கு மத்தியிலும், இந்தக் கொள்கை தனது இலக்குகளை அடைந்து வருகிறது.

உயா்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதிலும், இந்திய உயா்கல்வியை உலகத் தரத்துக்கு உயா்த்தும் சா்வதேசமயமாக்கும் திட்டத்திலும், தேசிய கல்விக் கொள்கை சிறப்பாகச் செயல்படுகிறது என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளன.

எண்ணிக்கையிலும் தரத்திலும் வளா்ச்சி:

தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, 2019-ஆம் ஆண்டில், வெறும் 49 இந்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமே தரவரிசையில் இடம்பெற்றிருந்தன. ஆனால், 2026-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில், இந்தப் பிரதிநிதித்துவம் மூன்று மடங்கு அதிகரித்து 128 பல்கலைக்கழகங்களாக உயரும். இது உலகத் தரவரிசையில் இடம்பெறும் மொத்த பல்கலைக்கழகங்களில் கிட்டத்தட்ட 6 சதவீதமாகும்.

இந்தக் குறிப்பிடத்தக்க வளா்ச்சி, இந்திய பல்கலைக்கழகங்களின் அா்ப்பணிப்பைக் காட்டுகிறது. சிறந்த தரவுகளைச் சேகரிப்பதன் மூலமும், உலக அளவிலான தர அளவுகோல்களுடன் தங்களை ஒப்பிட்டுப் பாா்ப்பதன் மூலமும், உலகின் சிறந்த ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலமும் இந்திய பல்கலைக்கழகங்கள் இந்த நிலையை அடைந்துள்ளன. பிரதிநிதித்துவத்தில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தரத்திலும் இந்தியா முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சியை அடைந்துள்ளது’ என்று பில் பேட்டி கூறினாா்.

இந்த ஆண்டு முதல், டைம்ஸ் உயா் கல்வி தரவரிசைகள், ஐ.நா.சபையின் 17 நிலையான வளா்ச்சி இலக்குகளுக்கு பல்கலைக்கழகங்களின் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகின்றன. நிலையான வளா்ச்சி இலக்குகளில் கற்பித்தல், ஆராய்ச்சி, சமுதாயத் திட்டங்கள் மற்றும் வளங்களின் மேலாண்மை ஆகியவை அடங்கும்.

தில்லி - மும்பை: சல்மானை காண வீட்டைவிட்டு ஓடிய சிறுவர்கள்!

தில்லியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் சல்மான் கானைக் காண்பதற்காக யாருக்கும் தெரியாமல் மும்பைக்குச் சென்றுள்ளனர்.அவர்கள் மூவரையும் நான்கு நாள்களுக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ரயில் நிலையத்தில் ... மேலும் பார்க்க

மோடி வாய்த் திறந்தால் முழு உண்மையையும் டிரம்ப் கூறிவிடுவார்! ராகுல்

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, டிரம்ப் குறித்து பேசாதது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் விமர்சித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஆபரேஷன் சிந்... மேலும் பார்க்க

மருத்துவ விநியோக ஊழல்: சத்தீஸ்கரில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

மருத்துவ விநியோக ஊழல் தொடர்பாக சத்தீஸ்கரின் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது. மோக்ஷித் கார்ப்பரேஷன் மற்றும் சத்தீஸ்கர் மருத்துவ சேவைகள் கழகம் மற்றும் சுகாதார சேவைகள் இயக்குநரகம் ஆகிய... மேலும் பார்க்க

தேனிலவு கொலை: திரைப்படமாக உருவாகும் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கு!

திரைப்படக் கதைகளுக்கு சற்றும் குறைவில்லாத, ராஜா ரகுவன்ஷியின் கொலைச் சம்பவமே, தற்போது திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இதற்கு அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.ஹில்லாங் தேனிலவு என்ற பெயர... மேலும் பார்க்க

டிசிஎஸ் பணிநீக்கத்தால் வீடு, மனை விற்பனை பாதிக்குமா? வல்லுநர்கள் சொல்வது என்ன?

டிசிஎஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து ஐடி துறையில் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டால் ரியல் எஸ்டேட் துறையில் கடும் வீழ்ச்சி ஏற்படும் அபாயம் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். பிரபல தொழில்நுட்ப நிறுவனமா... மேலும் பார்க்க

ஐவிஎஃப், வாடகைத் தாய், குழந்தைக் கடத்தல்: மருத்துவமனை மீது குவியும் புகார்!

ஹைதராபாத்: செகுந்தராபாத்தில் செயல்பட்டு வந்த கருவுறுதல் மையத்தின் மீது, ஐவிஎஃப் செய்வதாகப் பணம் பெற்று மோசடி, வாடகைத் தாய் மோசடி, குழந்தைக் கடத்தல் என பல்வேறு புகார்கள் குவிந்து வருகிறது.செகுந்திராபாத... மேலும் பார்க்க