செய்திகள் :

ஐவிஎஃப், வாடகைத் தாய், குழந்தைக் கடத்தல்: மருத்துவமனை மீது குவியும் புகார்!

post image

ஹைதராபாத்: செகுந்தராபாத்தில் செயல்பட்டு வந்த கருவுறுதல் மையத்தின் மீது, ஐவிஎஃப் செய்வதாகப் பணம் பெற்று மோசடி, வாடகைத் தாய் மோசடி, குழந்தைக் கடத்தல் என பல்வேறு புகார்கள் குவிந்து வருகிறது.

செகுந்திராபாத் உள்ளிட்ட மூன்று இடங்களில் செயல்பட்டு வந்த தனியார் கருவுறுதல் மையத்தின் மருத்துவர் டாக்டர் நம்ரதா உள்ளிட்டோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இது தொடர்பான செய்திகளைப் பார்த்து பலரும் காவல்நிலையங்களில் புகார் அளித்து வருகிறார்கள். இவர்கள் மீது 2020ஆம் ஆண்டு முதலே அங்கொன்றும் இங்கொன்றுமாக புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், மருத்துவர் மற்றும் மருத்துவமனையில் பணியாற்றியவர்கள் வெறும் குழந்தைகளைக் கடத்தி, விற்பனையும் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிலர், மருத்துவமனையில் ஐபிஎஃப் முறையில் குழந்தைப் பெற்றுக் கொள்ள லட்சக் கணக்கில் பணம் செலுத்தி, விந்தணு, கருமுட்டைகளை அளித்த பிறகு, அவர்களுக்கு மருத்துவமனை தரப்பில் எந்த விளக்கமும் கொடுக்காமல் விடப்பட்டதாகவும் புகார்கள் பதிவாகியிருக்கிறது.

குழந்தை இல்லாத தம்பதி சிலர் வாடகைத் தாய் முறையில் குழந்தைப் பெற்றக் கொள்ள 10 முதல் 20 லட்சம் வரை மருத்துவமனைக்குக் கட்டணம் செலுத்தியதாகவும், ஆனால், குழந்தையைக் கொடுக்கவில்லை என்றும் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

ஏழை கர்ப்பிணிகளிடம், குழந்தைப் பிறக்கும் முன்பே, பணத்தைக் கொடுத்து குழந்தையை விலைக்கு வாங்கிய கொடூரமும் நிகழ்ந்திருப்பதகவும், சில பெண்கள் குழந்தை பிறந்ததும் கொடுக்க மறுத்தால், குழந்தை கடத்திச் சென்றிருப்பதகாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, ஐவிஎஃப் முறையில், வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்ள விரும்பிய தம்பதியை ஏமாற்றிய வழக்கின் மூலம், இந்த மருத்துவமனை செய்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஒரு ஏழைக் குடும்பத்திடமிருந்து பிறந்த குழந்தையை ரூ.90,000க்கு வாங்கி, அதனை நகரப் பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு, வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தை என்று ஏமாற்றி ரூ.35 லட்சம் பெற்ற சம்பவம் குறித்து காவல்துறை விசாரிக்கத் தொடங்கியது.

அதாவது, தம்பதிக்கு, வாடகைத் தாய் மூலம் அவர்களது விந்தணு, கருமுட்டையைக் கொண்டு குழந்தையைப் பெற்றுக்கொடுப்பதாக உறுதி அளித்த மருத்துவமனை, அவ்வாறு செய்யாமல், ஏழைப் பெண்ணிடமிருந்து குழந்தையை வாங்கி, குழந்தையில்லாத இந்தத் தம்பதிக்குக் கொடுத்து ஏமாற்றியிருக்கிறது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான இரண்டு மருத்துவர்கள் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அளிக்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டது. இந்தக் கும்பல் நடத்திய வந்த மூன்று மருத்துவமனைகளும் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.

கைதான மருத்துவர் மீது ஏற்கனவே, அமெரிக்க தம்பதி வாடகைத் தாய் முறையில் பெற்ற குழந்தை, அவர்களது குழந்தை இல்லை என்பதை மரபணு பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்ட நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகள் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டதும், இதுபோன்று மற்றொரு வழக்கிலும் அவரது பெயர் இடம்பெற்றிருந்ததும் தற்போது தெரிய வந்துள்ளது.

இவர்கள் பெயரில் ஏற்கனவே மூன்று இடங்களில் பத்து வழக்குகள் பதிவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த செய்திகளைப் பார்த்து ஏமாற்றப்பட்ட பலரும் காவல்நிலையங்களில் புகார் அளித்து வருகிறார்கள்.

Various complaints have been filed against a fertility center operating in Secunderabad, including fraud, surrogacy scams, and child trafficking.

இதையும் படிக்க.. செயற்கை நுண்ணறிவால் காத்திருக்கும் பயங்கர ஆபத்து: ஜெஃப்ரி ஹிண்டன்

பஹல்காம் தாக்குதல்: திமுக வலியுறுத்தல்

நமது நிருபர் பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் முழு உண்மையையும் மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தியது.இது தொடர்பாக மாநிலங்களவையில் இரண்டாம் நாளாக புதன்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகம் தொடர்புடைய பிரச்னைகள் மற்றும் கேள்விகளை தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பினர். அவற்றின் விவரம் வருமாறு:-மக்களவையில்...எம்.பி. தொகுதி நிதி ரூ. 5 கோடி; ஆனா... மேலும் பார்க்க

ஆகஸ்டில் 46 டிஎம்சி காவிரி நீர்: உறுதிப்படுத்த தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபர்உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் ஆகஸ்ட் மாதத்துக்குரிய 45.95 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆ... மேலும் பார்க்க

குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விசாரிக்க கிரிக்கெட் மைதானம்தான் தேவைப்படும்: செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

நமது நிருபர்முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளில் 2,000-க்கும் மேற்பட்டவர்களை குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்த்ததற்காக தமிழக அரசை உச்சநீதிமன்றம் புதன்கிழமை கடிந்து கொண்டது.மேலும், ... மேலும் பார்க்க

தில்லியில் எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழா: ஆக. 7- இல் பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழாவை மத்திய அரசுடன் இணைந்து தில்லியில் இரு நாள்கள் கொண்டாடப்பட இருப்பதாகவும், இந்த விழாவை ஆக. 7-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளதாகவும... மேலும் பார்க்க

புலந்த்ஷஹா் வன்முறையில் 38 போ் குற்றவாளிகள்: உ.பி. நீதிமன்றம் தீா்ப்பு

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷஹா் மாவட்ட வன்முறை வழக்கில், 38 போ் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.கடந்த 2018-ஆம் ஆண்டு புலந்த்ஷஹரில் உள்ள சயானா பகுதியில், பசு வதைக்கப்பட்டு கொ... மேலும் பார்க்க