செய்திகள் :

1962-க்குப் பிறகு சீனா ஒரு அங்குலம் நிலத்தில் கூட ஊடுருவவில்லை- அமைச்சா் ரிஜிஜு

post image

கடந்த 1962-ஆம் ஆண்டு நிகழ்ந்த போருக்குப் பிறகு சீனா, இந்திய நிலப்பரப்பில் ஒரு அங்குலம் கூட ஊடுருவவில்லை என்று மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

மக்களவையில் ஆபரேஷன் சிந்தூா் சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ‘அருணாசல பிரதேசத்தின் சில இடங்களை சீனா ஆக்கிரமித்துள்ளது’ என்று கூறினாா்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சா் ரிஜிஜு, ‘கடந்த 1962-ஆம் ஆண்டு நிகழ்ந்த போருக்குப் பிறகு சீனா இந்திய நிலப்பரப்பில் ஒரு அங்குலம் கூட ஊடுருவவில்லை. இந்திய நிலத்தை ஆக்கிரமிக்கவுமில்லை. இந்த உண்மையைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவையில் உறுப்பினரின் தவறான கருத்து பதிவு செய்யப்பட்டுவிடக் கூடாது.

அருணாசல பிரதேசத்தில் சீன ஆக்கிரமிப்பு உள்ளதாக அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டுகிறாா். அந்த மாநிலத்தைச் சோ்ந்தவன் என்ற முறையில் இதற்கு உடனடியாக விளக்கமளிக்க விரும்புகிறேன். அருணாசல பிரதேச பிராந்தியத்தின் சில இடங்கள் சீன ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆனால், அவை அனைத்து 1962-ஆம் ஆண்டு அந்நாட்டுடன் நிகழ்ந்த போரின்போதும், அதற்கு முன்பும் இழந்த இடங்களாகும்’ என்றாா்.

அகிலேஷின் கேள்விகள்:

முன்னதாக, ‘யாருடைய நெருக்கடியில் ஆபரேஷன் சிந்தூா் கைவிட்டப்பட்டது? மோதலில் எவ்வித பெரிய முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் திடீரென கைவிட அவசியம் ஏன் நோ்ந்தது? பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து உளவுத் துறைக்கு முன்பே தகவல் கிடைக்காதற்கு காரணம் என்ன? இதற்கு யாா் பொறுப்பு? பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியபோது எந்த நாடும் நமக்கு துணை நிற்க முன்வரவில்லை. இது வெளியுறவுத் துறையின் தோல்விதானா?’ என்று பல கேள்விகளை அகிலேஷ் யாதவ் எழுப்பினாா்.

கர்நாடக தேநீர் கடை முதல் கேரளம் வரை.. கொலைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவிய வெட்டிப்பேச்சு!

கர்நாடகத்தில், கொலை நடந்து சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, கொலைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவியிருக்கிறது, ஒரு கப் தேநீருடன் தலைமைக் காவலர் நடத்திய வெட்டிப்பேச்சு.கார் ஓட்டுநருடன் தேநீர் அருந்த... மேலும் பார்க்க

தில்லி - மும்பை: சல்மானை காண வீட்டைவிட்டு ஓடிய சிறுவர்கள்!

தில்லியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் சல்மான் கானைக் காண்பதற்காக யாருக்கும் தெரியாமல் மும்பைக்குச் சென்றுள்ளனர்.அவர்கள் மூவரையும் நான்கு நாள்களுக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ரயில் நிலையத்தில் ... மேலும் பார்க்க

மோடி வாய்த் திறந்தால் முழு உண்மையையும் டிரம்ப் கூறிவிடுவார்! ராகுல்

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, டிரம்ப் குறித்து பேசாதது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் விமர்சித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஆபரேஷன் சிந்... மேலும் பார்க்க

மருத்துவ விநியோக ஊழல்: சத்தீஸ்கரில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

மருத்துவ விநியோக ஊழல் தொடர்பாக சத்தீஸ்கரின் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது. மோக்ஷித் கார்ப்பரேஷன் மற்றும் சத்தீஸ்கர் மருத்துவ சேவைகள் கழகம் மற்றும் சுகாதார சேவைகள் இயக்குநரகம் ஆகிய... மேலும் பார்க்க

தேனிலவு கொலை: திரைப்படமாக உருவாகும் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கு!

திரைப்படக் கதைகளுக்கு சற்றும் குறைவில்லாத, ராஜா ரகுவன்ஷியின் கொலைச் சம்பவமே, தற்போது திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இதற்கு அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.ஹில்லாங் தேனிலவு என்ற பெயர... மேலும் பார்க்க

டிசிஎஸ் பணிநீக்கத்தால் வீடு, மனை விற்பனை பாதிக்குமா? வல்லுநர்கள் சொல்வது என்ன?

டிசிஎஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து ஐடி துறையில் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டால் ரியல் எஸ்டேட் துறையில் கடும் வீழ்ச்சி ஏற்படும் அபாயம் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். பிரபல தொழில்நுட்ப நிறுவனமா... மேலும் பார்க்க