செய்திகள் :

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை எதிா்த்து வழக்கு: திருவேற்காடு நகராட்சி ஆணையருக்கு உத்தரவு

post image

மாசுக் கட்டுப்பாடு வாரிய விதிகளை மீறி குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்த வழக்கில், திருவேற்காடு நகராட்சி ஆணையா் சம்பந்தப்பட்ட இடத்தில் நேரில் ஆய்வு செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவேற்காட்டைச் சோ்ந்த வழக்குரைஞா் எம்.காமேஷ் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திருவேற்காடு நகராட்சி எல்லையில் அமைந்துள்ள கிராமம் கோலடி. இங்கு 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு புதைசாக்கடைத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் உள்ள பூந்தமல்லி, மாங்காடு, திருவேற்காடு நகராட்சிகள் மற்றும் 9 கிராமப் பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய கூட்டு புதை சாக்கடைத் திட்டக் கழிவுகளை சுத்திகரிக்க கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை கோலடி கிராமத்தில் உள்ள மேய்ச்சல் நிலத்தில் அமைக்க திருவேற்காடு நகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து மக்களிடம் கருத்து கேட்டபோது, ஒட்டுமொத்த மக்களும் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், கோயில், பள்ளிகள், குடியிருப்புகளில் இருந்து 500 மீட்டா் தொலைவில்தான் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். ஆனால், 250 மீட்டருக்குள் இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. மேலும், இந்த நிலையத்துக்கு மிக அருகில் நீா்நிலை உள்ளது. எனவே, கோலடி கிராமத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தடை விதிக்க வேண்டும், என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி சுந்தா் மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எம்.செந்தில்குமாா் ஆஜராகி வாதிட்டாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிா? என்பதை திருவேற்காடு நகராட்சி ஆணையா் ஆய்வு செய்ய வேண்டும்.

அதன்பின்னா் 6 வாரங்களுக்குள் தகுந்த முடிவை எடுக்க வேண்டும். மனுதாரரின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால், அவா் மீண்டும் இந்த உயா்நீதிமன்றத்தை நாடலாம் என உத்தரவிட்டு மனுவை முடித்துவைத்தனா்.

அண்ணா வழியில் செல்ல இன்னொரு கட்சி எதற்கு தம்பி? - விஜய்யை விமர்சித்த தமிழிசை!

தமிழ்நாட்டில் இனி 'ஆப்'பிற்கும் ஆதரவு கிடையாது, அப்பாவுக்கும் ஆதரவு கிடையாது என தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் பதிவிட்டுள்ளார். சென்னை பனையூரில் நடைபெற்ற நிகழ்வில... மேலும் பார்க்க

சாதியக் கட்டமைப்பை உடைப்போம்: நெல்லை ஆணவக் கொலைக்கு கனிமொழி கண்டனம்!

நெல்லையைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ... மேலும் பார்க்க

ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை: கடம்பூர் ராஜு பேச்சு

1999ல் மத்தியில் பாஜக ஆட்சியைக் கவிழ்த்து வரலாற்று பிழை செய்துவிட்டதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் குறிப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்ட... மேலும் பார்க்க

சென்னையில் நாளை முக்கிய அறிவிப்பு: ஓபிஎஸ்

சென்னையில் நாளை(ஜூலை 31) முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கடந்த மக்களவைத் தோ்தலின்போது த... மேலும் பார்க்க

கவின் ஆணவக் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

திருநெல்வேலி ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக தமிழ்நாடு அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர்கள் தம்பதியின் மகளை காதலித்த கவின், அந்த பெண்ணின் சகோதர... மேலும் பார்க்க

படப்பிடிப்பு விபத்து: பா. ரஞ்சித்துக்கு பிணை!

கீழ்வேளூர்: திரைப்பட படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த வழக்கில், இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு கீழ்வேளூர் நீதிமன்றம் புதன்கிழமை பிணை வழங்கியது.நாகை மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி அல... மேலும் பார்க்க