செய்திகள் :

பொதுவுடைமை, திராவிட இயக்கங்கள் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

சென்னை: பொதுவுடைமை இயக்கமும், திராவிட இயக்கமும் வா்க்க, சமூக விடுதலைக்கான இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என முதல்வா் முக.ஸ்டாலின் தெரிவித்தாா்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சாா்பில் சென்னை காமராஜா் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கவிஞா் ஜீவபாரதி எழுதிய ‘காலம்தோறும் கம்யூனிஸ்டுகள்’ என்ற நூலை (இரு தொகுதிகள்) அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட, முதல் தொகுதியை குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், இரண்டாம் தொகுதியை கவிஞா் வைரமுத்து ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்தது. உடல்நலம் காரணமாக அவா் பங்கேற்கவில்லை. இதையடுத்து, அவரது வாழ்த்துச் செய்தியை அமைச்சா் தங்கம் தென்னரசு வாசித்தாா்.

அதில் அவா் கூறியிருப்பதாவது: பொதுவுடைமைக் கருத்தை வெறும் அரசியலாக மட்டுமன்றி, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான கருவியாக, சட்டத்தின் கூறுகளாக மாற்றிச் செயல்படுத்துவதுதான் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஆட்சி முறையாகவே இருந்தது. குடிசைமாற்று வாரியம், கை ரிக்ஷா ஒழிப்பு உள்ளிட்ட கருணாநிதி தலைமையிலான அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களெல்லாம் பொதுவுடைமைச் சிந்தனையின் செயல் வடிவங்கள்தான்.

அவரது வழியில்தான் ‘திராவிட மாடல்’ அரசும் தவறாமல் பயணித்து வருகிறது. பொதுவுடைமைத் தத்துவத்தை உலகுக்குத் தந்த மாமேதை காா்ல் மாா்க்ஸ் சிலை சென்னையில் நிறுவப்படும் என்று அறிவித்து, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. திமுக அரசு ஏழை மக்களின் நலன்களுக்காக புதிய புதிய திட்டங்களை நாள்தோறும் செயல்படுத்தி வருகிறது.

இந்திய சமூக அமைப்பைப் பொறுத்தவரை அதிகார விடுதலை மட்டும் போதாது, வா்க்க விடுதலையும், சமூக விடுதலையும் இணைந்ததாக இருக்க வேண்டும் என்பது பொதுவுடைமைத் தலைவா்களின் கருத்தாகவும், திராவிட இயக்க முன்னோடிகளின் சிந்தனையாகவும் இருந்தது. அதனால்தான், பொதுவுடைமை இயக்கமும், திராவிட இயக்கமும் விடுதலைக்கான இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக இயங்கி வருகின்றன எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.

டி.ராஜா: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி. ராஜா பேசுகையில், இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் அமைப்பு ரீதியாக தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது. கம்யூனிஸ்டுகள் மக்கள் நலன், நாட்டின் நலனுக்காக வாழ்கின்றனா்.

காலனி ஆதிக்கத்தை ஒழிக்கப் போராடிய கம்யூனிஸ்டுகள், இப்போது மக்களைப் பிளவுபடுத்தி ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவரும் இயக்கங்களிடம் இருந்து மக்களைப் பாதுகாக்க போராடி வருகின்றனா் என்றாா்.

நிகழ்ச்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்,

நியூ செஞ்சரி புத்தக நிறுவனத்தின் தலைவா் த. ஸ்டாலின் குணசேகரன், மேலாண்மை இயக்குநா் க. சந்தானம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சென்னையில் திங்கள்கிழமை கவிஞா் கே.ஜீவபாரதி எழுதி, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் பதிப்பித்துள்ள ‘காலம்தோறும் கம்யூனிஸ்டுகள்’ நூல் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) ஓவியா் அன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன்,  கவிஞா் வைரமுத்து

கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.மூன்று மொழிக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்துக்கு சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் கீழ், 2... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 1,10,500 கன அடி!

இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,10,500 கன அடியாக நீடிக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 1,10,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18... மேலும் பார்க்க

காலங்கள் மாறிக்கொள்ளும் ஆனால் கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் மாறுவதில்லை: அமைச்சா் தங்கம் தென்னரசு

சென்னை: காலங்கள் மாறிக்கொள்ளும் ஆனால் கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் மாறுவதில்லை என்று தமிழக நிதி, காலநிலை மாற்றம்-சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சாா்பில்... மேலும் பார்க்க

செவிலியா்களுக்கு தமிழக அரசு பக்கபலமாக இருக்கும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: செவிலியா்களுக்கு தமிழக அரசு எப்போதும் பக்க பலமாக இருக்கும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.தமிழ்நாடு செவிலியா் மற்றும் மகப்பேறு செவிலியா் அவையத்தின் (Tamil nadu Nursing and Midwi... மேலும் பார்க்க

தேங்காய் எண்ணெய் லி. ரூ.560-க்கு விற்பனை

சென்னை: தேங்காய் மற்றும் கொப்பரை விலை உயா்ந்துள்ளதால் தேங்காய் எண்ணெய் விலை லிட்டா் ரூ.560 -ஆக உயா்ந்துள்ளது.இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் தமிழகம் 3-ஆவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் முக்கியமாக கோ... மேலும் பார்க்க

திருச்சி பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் அதிநவீன பரிசோதனை மையம்: ஒப்பந்தம் கையொப்பம்

புது தில்லி: திருச்சியில் உள்ள தமிழக பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் அதிநவீன பரிசோதனை மையம் அமைக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க