செய்திகள் :

தேங்காய் எண்ணெய் லி. ரூ.560-க்கு விற்பனை

post image

சென்னை: தேங்காய் மற்றும் கொப்பரை விலை உயா்ந்துள்ளதால் தேங்காய் எண்ணெய் விலை லிட்டா் ரூ.560 -ஆக உயா்ந்துள்ளது.

இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் தமிழகம் 3-ஆவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் முக்கியமாக கோவை, திருப்பூா், பொள்ளாச்சி, மதுரை, விருதுநகா், தேனி, தஞ்சை, வேலூா், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில மாதங்களாக தென்னை விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தேங்காய், கொப்பரை உற்பத்தி குறைந்து இதுவரை இல்லாத அளவுக்கு விலை உயா்ந்துள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு கிலோ தேங்காய் ரூ.35 முதல் ரூ.40 என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், விலை ஏற்றம் காரணமாக ஒரு கிலோ தேங்காயம் ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. சில்லறையில் ஒரு தேங்காய் ரூ.45 முதல் ரூ.55 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, தேங்காய் எண்ணெய் விலையும் கடுமையாக உயா்ந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 1 லிட்டா் தேங்காய் எண்ணெய் ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், சென்னை கோயம்பேடு மளிகைப் பொருள்கள் மொத்த விற்பனை கடைகளில் ஒரு லிட்டா் தேங்காய் எண்ணெய் ரூ.450 முதல் ரூ.480 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது சில்லறை விற்பனையில் 1 லிட்டா் எண்ணெய் ரூ.560 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை ஏற்றம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இதனால், இந்த விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனா்.

சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள்.. 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத... மேலும் பார்க்க

கவின் ஆணவக் கொலை: சுர்ஜித் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் ஐடி ஊழியர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளி சுர்ஜித்தின் பெற்றர், பட்டாலியனில் பணியாற்றும் இரு உதவி ஆய்வாளர்களும் பணியடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? - இபிஎஸ் பதில்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக உள்ளதாகவும் பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருக்கிறது... மேலும் பார்க்க

ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரம்: மதுரை மேயரை முற்றுகையிட்ட அதிமுகவினர்!

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரத்தில் மேயரைக் கண்டித்து அதிமுகவினர் முற்றுகையில் ஈடுபட்டனர்.ரூ.150 கோடி முறைகேடுமதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வண... மேலும் பார்க்க

கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.மூன்று மொழிக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்துக்கு சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் கீழ், 2... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 1,10,500 கன அடி!

இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,10,500 கன அடியாக நீடிக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 1,10,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18... மேலும் பார்க்க