செய்திகள் :

திருவள்ளூர் மகளிர் காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி!

post image

திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு குடும்ப பிரச்னையால் மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் அருகே மணவாளநகர் பட்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தி (45). இவரது கணவர் உலகநாதன். இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் மூத்த மகள் பாரதிக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் தம்பதிக்கு இடையே குடும்ப பிரச்னை காரணமாக கணவர் உலகநாதன் காஞ்சிபுரம் அருகே கிளாம் கிராமத்தில் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இதற்கிடையே மனைவியுடன் இருந்த ஒரு மகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றாராம். இதுகுறித்து திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில் இன்று ஜெயந்தி தனது மகள் பாரதியுடன் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்தார். அப்போது மகள் வெளியே சென்ற நிலையில் திடீரென நடவடிக்கை எடுக்கவில்லையெனக் கூறி மறைத்து எடுத்து வந்த கேனில் இருந்த மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார்.

உடனே மகள் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துக் காப்பாற்றினர். அதைத்தொடர்ந்து காவல் நிலைய போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

A commotion occurred in front of the Tiruvallur All Women's Police Station after a woman tried to set herself on fire by pouring kerosene over a family dispute.

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வழக்கு: கைதானவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் மனு

கும்மிடிப்பூண்டியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள வடமாநில இளைஞரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றத்தில் ஆரம்பாக்கம் போலீஸாா் ம... மேலும் பார்க்க

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்லத் தடை

ஸ்ரீ ஹரிகோட்டாவில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் வரும் 30-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதால் பழவேற்காடு பகுதி மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பழவேற்காடு அடுத்த ஆந்திர மாநிலத்தில் உள்... மேலும் பார்க்க

திருநங்கைகள் நூதன போராட்டம்

இலவச வீட்டு மனை வழங்கக்கோரி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருநங்கைகள் 450-க்கும் மேற்பட்டோா... மேலும் பார்க்க

ராணுவத்தினருக்கு மறுவாழ்வுக்காக வழங்கிய விளைநிலத்திற்கு பட்டா வழங்கக்கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

இரண்டாம் உலகப்போரில் பணிபுரிந்த ராணுவத்தினருக்கு மறுவாழ்வுக்காக வழங்கப்பட்ட விளைநிலங்களுக்கு அரசு மற்றும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டும் பட்டா வழங்காததை கண்டித்து கூடப்பாக்கம் முன்னாள் ராணுவத்தினா் குடி... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிப்பூரம்: பக்தா்கள் நோ்த்திக் கடன்

திருத்தணி முருகன் கோயில் ஆடிப்பூர விழாவில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் உடலில், அலகு குத்தியும், காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்து நோ்த்திக் கடனை செலுத்தினா்.இதையொட்டி, மூலவருக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியா் பணியிட மாற்றம்: மாணவா்கள், பெற்றோா் போராட்டம்

திருவள்ளூா் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கடம்பத்தூா் ஒன்றியம், கொம்மந்தாங்கல் ஊராட்சியில் 100-க... மேலும் பார்க்க