செய்திகள் :

2025-ல் மட்டும் நிலுவையிலுள்ள நுகர்வோர் வழக்குகள் எண்ணிக்கை 12,000!

post image

2025 ஆம் ஆண்டில் இதுவரை நிலுவையிலுள்ள நுகர்வோர் வழக்குகளின் எண்ணிக்கை 12 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக இணை அமைச்சர் பி.எல். வர்மா எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில்,

நாடு முழுவதும் ஜூலை 22 வரை 76,318 நுகர்வோர் புகார்கள் பதிவாகியுள்ளன. இதில், கடந்த ஆண்டுகள் பதிவான வழக்குகள் உள்பட 64,297 புகார்களுக்கு நுகர்வோர் நீதிமன்றங்களில் இந்த ஆண்டு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் மட்டும் ஜூலை 22 வரையிலான காலகட்டத்தில் புதிதாக 12,021 நுகர்வோர் வழக்குகள் பதிவாகியுள்ளன.

2024-ல் மட்டும் 1,73,160 நுகர்வோர் வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இதில், அதற்கு முந்தைய ஆண்டு பதிவான வழக்குகள் உள்பட 1,58,290 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டதாகவும் கூறினார்.

இதேபோன்று, 2022 ஆண்டில் 1,75,676 நுகர்வோர் வழக்குகளும், 2023ஆம் ஆண்டு 1,74,278 வழக்குகள் பதிவானதாகவும் குறிப்பிட்டார். 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் தீர்வு காணப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை முறையே 1,82,870 மற்றும் 1,85,777 எனத் தெரிவித்தார்.

அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 79 மாவட்ட நுகர்வோர் மன்றங்கள் செயல்படுவதாகவும், இதற்கு அடுத்தபடியாக மத்தியப் பிரதேசத்தில் 48 நுகர்வோர் மன்றங்கள் செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | பிரபல நடிகைக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்: கன்னட நடிகரின் ரசிகர்கள் மீது போலீஸில் புகார்!

Number of pending consumer cases has risen by 12,021 in 2025 so far Rajya Sabha was informed

விவசாயிகளின் வருமானம் இரு மடங்கு அதிகரிப்பு: மத்திய அமைச்சர் சௌஹான்

வேளாண் துறையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கை விட அதிகரித்துள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.விவசாயிகளின் வ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள பதில் வருமாறு:சொந்த வருவாய்க்காக கிராம பஞ்சாயத்துகளுக்கு உதவும் மத்திய திட்டங்கள... மேலும் பார்க்க

"ஆபரேஷன் சிந்தூர்': இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் அதிருப்தி

நமது சிறப்பு நிருபர்ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை விவகாரத்தில் மத்திய அரசு நடந்து கொள்ளும் விதத்துக்கு தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அத... மேலும் பார்க்க

புகழ்பெற்ற பொருளாதார நிபுணா் மேக்நாத் தேசாய் காலமானாா்

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த புகழ்பெற்ற பிரிட்டன் பொருளாதார நிபுணரும், அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான மேக்நாத் தேசாய் (85) செவ்வாய்க்கிழமை காலமானாா்.உடல்நல பாதிப்பு காரணமாக ஹரியாணா மாநிலம் கு... மேலும் பார்க்க

இன்று விண்ணில் பாய்கிறது ‘நிசாா்’ செயற்கைக்கோள்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து உருவாக்கிய ‘நிசாா்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் புதன்கிழமை (ஜூலை 30) மாலை விண்ணில் ஏவப்படவுள்ளது... மேலும் பார்க்க

12,000 பேரை பணி நீக்குவதாக டிசிஎஸ் அறிவிப்பு: நிலைமை கவனித்து வருவதாக மத்திய அரசு தகவல்

நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் 12,000-க்கும் மேற்பட்டோரை பணியில் இருந்து நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது ஊழியா்கள் மத்தியில் பெரும் அச்சத்த... மேலும் பார்க்க