செய்திகள் :

விவசாயிகளின் வருமானம் இரு மடங்கு அதிகரிப்பு: மத்திய அமைச்சர் சௌஹான்

post image

வேளாண் துறையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கை விட அதிகரித்துள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.

விவசாயிகளின் வருமானத்தை 2022ஆம் ஆண்டுக்குள் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எம்.பி. மக்களவையில் கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்து வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அரசு வேளாண் விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் சாதனை அளவுக்கு கொள்முதல் செய்துள்ளது; விவசாயிகளுக்கு உரங்களை மானிய விலையில் கிடைக்கச் செய்துள்ளது. மேலும் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு ரூ. 1.83 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு எடுத்த இந்த நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கைவிட அதிகரித்துள்ளது என்பதை என்னால் நம்பிக்கையுடன் கூறமுடியும்.

வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளிப்பது தொடர்பாக எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையம் அளித்த பரிந்துரையை அமல்படுத்துவதற்கான முன்மொழிவை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிராகரித்தது. எனினும், அந்த ஆணையம் அளித்த பரிந்துரைகளை மோடி அரசு ஏற்றுக்கொண்டது. அதன்படி விவசாயிகள் மேற்கொள்ளும் உற்பத்திச் செலவுக்கும் கூடுதலாக 50 சதவீத லாபத்தை வைத்து விளைபொருள்களுக்கு தற்போது குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படுகிறது.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்துவது சந்தைகளை பாதிக்கும் என்று முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தெரிவித்தது என்று சிவராஜ் சிங் சௌஹான் கூறினார்.

மத்திய வெளியுறவுத் துறை செயலாளரை சந்தித்த நேபாள எம்.பிகள்!

தில்லியில் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை, நேபாளத்தின் அனைத்துக் கட்சிக் குழுவினர் நேரில் சந்தித்துள்ளனர். நேபாளத்தின் அனைத்துக் கட்சிக் குழுவிலான, அந்நாட்டின் எம்.பிகள் இந்தியா வந்... மேலும் பார்க்க

மக்களவையில் எதிரொலித்த வயநாடு விவகாரம்: சீரமைப்பில் மத்திய அரசு மெத்தனப்போக்கு! -பிரியங்கா

வயநாடு நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதில் மத்திய அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கிறது என்று மக்களவையில் அத்தொகுதிக்கான எம்.பி. பிரியங்கா காந்தி பேசினார்.கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் கடந... மேலும் பார்க்க

சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை ரத்தாகுமா? மான் வேட்டை வழக்கு மீண்டும் விசாரணை!

சல்மான் கான் மீதான மான் வேட்டை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.கடந்த 1998-ஆம் ஆண்டு சட்டவிரோதமாக மான்களை வேட்டையாடியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கானை குற்றவாளி என ஜோத்... மேலும் பார்க்க

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30) மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்ப... மேலும் பார்க்க

2004 - 2014 வரை அமாவாசை இருள்; 2014 - 2025 வரை பௌர்ணமி நிலவு! -மாநிலங்களவையில் அனல் பறக்க விவாதம்

2004 - 2014 வரை அமாவாசை இருளாகவும், 2014 முதல் இன்று வரை பௌர்ணமி நிலவாகவும் இருப்பதாக ஜெ.பி.நட்டா உருவகப்படுத்தி ஒப்பிட்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்து மாநிலங்களவையில் பேசியுள்ள... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை மீது நம்பிக்கை இல்லை! - உச்சநீதிமன்றம்

நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை மீது நம்பிக்கை ஏற்படவில்லை என்றும் அவர் நீதிபதி பதவியில் நீடிப்பது குறித்து நாடாளுமன்றம் முடிவு செய்யப்பட்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.தில்லி உயர்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க