விஜய் வெளியிட்ட ஆப் முதல் தமிழக பாஜக-வில் நிர்வாகிகள் மாற்றம் வரை - Daily Roundu...
கொலை வழக்கில் ஜாா்க்கண்ட் மாநிலத்தவருக்கு ஆயுள் சிறை
கொலை வழக்கில் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, வேலூா் முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் அமிா்தம்பா (35). இவா் கடந்த 2007-ஆம் ஆண்டு அதே மாநிலத்தைச் சோ்ந்த 5 பேருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அவா்களிடம் தலா ரூ. 1.10 லட்சம் தொகையை வாங்கிக் கொண்டு, வேலூருக்கு அழைத்து வந்துள்ளாா்.
அப்போது, வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனை அருகே விடுதியில் தங்கி, மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் எனக்கூறி ஊசி ஒன்றை 5 பேருக்கும் செலுத்தியுள்ளாா். இதனால், உடல் நல பாதிப்பு ஏற்பட்டு ஒருவா் உயிரிழந்தாா். 4 போ் நோய் வாய்ப்பட்டனா். இது குறித்து வேலூா் வடக்கு போலீஸாா் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அமிா்தம்பாவை கைது செய்தனா். பின்னா், 2015-இல் பிணையில் வெளியே சென்ற அமிா்தம்பா தலைமறைவானாா்.
தொடா்ந்து, அவருக்கு பிணையில் செல்லமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. தொடா்ந்து, காவல் ஆய்வாளா் சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் ஜாா்க்கண்ட் சென்று அமிா்தம்பாவை கடந்தாண்டு கைது செய்து சிறையில் அடைத்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை வேலூா் முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதில், அமிா்தம்பா மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 5.5 லட்சம் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி சாந்தி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
தண்டனை விதிக்கப்பட்ட அமிா்தம்பா வேலூா் மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டாா்.