செய்திகள் :

புகழ்பெற்ற பொருளாதார நிபுணா் மேக்நாத் தேசாய் காலமானாா்

post image

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த புகழ்பெற்ற பிரிட்டன் பொருளாதார நிபுணரும், அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான மேக்நாத் தேசாய் (85) செவ்வாய்க்கிழமை காலமானாா்.

உடல்நல பாதிப்பு காரணமாக ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரின் குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

குஜராத்தில் பிறந்த அவா், பிரிட்டனில் உள்ள லண்டன் பொருளாதார கல்லூரியில் 1965 முதல் 2003-ஆம் ஆண்டு வரை பேராசிரியராகப் பணியாற்றினாா். 1971-ஆம் ஆண்டு அந்நாட்டில் உள்ள தொழிலாளா் கட்சியில் சோ்ந்தாா். கடந்த 2008-ஆம் ஆண்டு மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதைப் பெற்றாா்.

பிரதமா் மோடி இரங்கல்: பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘புகழ்பெற்ற சிந்தனையாளா், எழுத்தாளா் மற்றும் பொருளாதார நிபுணருமான மேக்நாத் தேசாயின் மறைவு வேதனை அளிக்கிறது. அவா் இந்தியா மற்றும் இந்திய கலாசாரத்துடன் எப்போதும் தொடா்பில் இருந்தாா். இந்தியா-பிரிட்டன் உறவை வலுவாக்குவதில் அவா் பெரும் பங்கு வகித்தாா்’ என்று தெரிவித்தாா்.

பயங்கரவாதம் ஒருபோதும் காவி நிறத்தில் இருந்ததில்லை, இனியும் இருக்காது: ஃபட்னவீஸ்

"பயங்கரவாதம் ஒருபோதும் காவி நிறமாக இருந்ததில்லை, இனியும் இருக்காது" என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினார்.2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜகவின் முன்னாள் எம்பி பிரக்யா சிங் உள்பட... மேலும் பார்க்க

நமஸ்தே டிரம்ப், நம் பக்கம் டிரம்ப் என்றீர்களே? இதுதான் அந்த வெகுமதியா? மோடிக்கு கார்கே கேள்வி

புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டையை நிறுத்தியது தான்தான் என டிரம்ப் கூறிவருவது குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌன விரதத்தையே கடைப்பிடி... மேலும் பார்க்க

பால்டால் வழியாக அமர்நாத் யாத்திரை தொடக்கம்: இதுவரை 3.93 லட்சம் பேர் தரிசனம்!

பால்டால் பாதை வழியாக அமர்நாத் யாத்திரை செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஜம்முவிலிருந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஜூலை 3-ஆம் தேதி தொடங்... மேலும் பார்க்க

அதானிக்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது! ராகுல்

தொழிலதிபர் அதானிக்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அரசு அழித்துவிட்டது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை விமர்சித்துள்ளார்.இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாததால... மேலும் பார்க்க

தெலங்கானாவில் 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

தெலங்கானா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக 4 வழக்குரைஞர்கள் பதவியேற்றுக் கொண்டனர். உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங் புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு கூடுதல் நீத... மேலும் பார்க்க

ம.பி.யில் 23,000 பெண்கள், சிறுமிகளைக் காணவில்லை!

மத்தியப் பிரதேசத்தில் குறைந்தது ஒரு மாதம் முதல் ஒன்றரை ஆண்டுகளாக சுமார் 23,000 சிறுமிகள் மற்றும் பெண்களைக் காணவில்லை என மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது. மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் மழைக்காலக் கூட... மேலும் பார்க்க