செய்திகள் :

2025ல் இந்தியாவிற்கான பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னாக இருக்கும்: இந்தோனேசியா

post image

புதுதில்லி: இறக்குமதி வரிகளைக் குறைக்க இந்தியா முடிவு செய்ததையடுத்து 2024ஆம் ஆண்டில் 4.8 மில்லியன் டன்களிலிருந்து 2025ஆம் ஆண்டு பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னுக்கு அதிகமாக இருக்கும் என மூத்த தொழில்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2025-26 ஆம் ஆண்டுக்குள் பனை சாகுபடி 1 மில்லியன் ஹெக்டேராக விரிவுபடுத்தும் தெற்காசிய நாட்டின் லட்சியத் திட்டத்தை ஆதரிப்பதற்காகவும், அதே வேளையில் இந்த ஆண்டு சுமார் 1,00,000 முளைத்த பனை விதைகளை இந்தியாவிற்கு அனுப்ப உள்ளதாக இந்தோனேசிய பனை எண்ணெய் சங்கத்தின் தலைவர் எட்டி தெரிவித்தார்.

இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்ட பிறகு, இந்தோனேசியாவின் பாமாயில் இறக்குமதி 2025 ஆம் ஆண்டில் அதிகரிக்கும். இது 5 மில்லியன் டன்களுக்கு மேல் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

உள்நாட்டில் கிடைக்கும் சமையல் எண்ணெய் தன்மையை அதிகரிக்கவும் விலைகளைக் கட்டுப்படுத்தவும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, கச்சா பாமாயிலுக்கான அடிப்படை சுங்க வரியை இந்தியா 20 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாகக் குறைத்தது.

இந்தியாவிற்கான பாமாயில் ஏற்றுமதி 2024ஆம் ஆண்டு 4.8 மில்லியன் டன்களாகக் இருந்தது. இது 2023ல் 6 மில்லியன் டன்களாக இருந்தது. 2024ஆம் ஆண்டின் பெரும்பகுதியில் சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்களுடன் ஒப்பிடும்போது பாமாயில் விலைகள் அதிகமாக இருந்ததே ஒரு காரணம்.

இருப்பினும், ஏப்ரல் 2025 முதல் பாமாயில் விலைகள் சோயாபீன் எண்ணெயை விடக் குறைவாக வர்த்தகமானது.

இந்த ஆண்டு விலை குறித்த எந்தப் பிரச்சினையும் இல்லை. 2025ல் இந்தியாவிற்கான ஏற்றுமதியை அதிகரிப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்தியா 2025-26 ஆம் ஆண்டுக்குள் தற்போதைய 3,50,000 ஹெக்டேரிலிருந்து 1 மில்லியன் ஹெக்டேராக சாகுபடியை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2023 மற்றும் 2024ல் இந்தியா சுமார் 5,00,000 விதைகளை வாங்கியது. இந்த ஆண்டும் 1,00,000 அதிகமான விதைகளை வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாக எட்டி தெரிவித்தார்.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.86.82 ஆக நிறைவு!

Indonesia Palm Oil Exports to India to Exceed 5 Million Tonnes in 2025

ஏசியன் பெயிண்ட்ஸ் முதல் காலாண்டு லாபம் 6% சரிவு!

புதுதில்லி: ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 5.87 சதவிகிதம் குறைந்து ரூ.1,117.05 கோடியாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அலங்கார பெயிண்டிற்கான தேவை குறைந்ததே இதற்குக் முக்கிய... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.86.82 ஆக நிறைவு!

மும்பை: எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு டாலர் தேவை அதிகரித்ததால் இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.86.82 ஆக நிறைவடைந்தது. இந்... மேலும் பார்க்க

3 நாள் சரிவுக்குப் பிறகு மீண்ட பங்குச் சந்தை; சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வு!

மும்பை: ப்ளூ-சிப் பங்குகளான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் ஏற்றத்தால், மூன்று நாள் சரிவு முடிவடைந்து பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மீண்டன.இன்றைய கா... மேலும் பார்க்க

அமேசான் சுதந்திர தின சலுகை ஜூலை 31 முதல் தொடக்கம்! என்னென்ன வாங்கலாம்?

இணைய விற்பனை தளமான அமேசானில் சுதந்திர தினத்தையொட்டிய சலுகைகள் ஜூலை 31ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. கடந்த மாதம், பிரைம் பயனர்களுக்காக மட்டுமே சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து தரப... மேலும் பார்க்க

நீருக்குள் கூட புகைப்படம் எடுக்கலாம்: ஆக. 4-ல் அறிமுகமாகிறது விவோ ஒய் 400!

விவோ நிறுவனம் ஒய் 400 5ஜி என்ற புதிய ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அறிமுக தேதி அறிவிக்கப்பட்டதையொட்டி, புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்த தகவலும் வெளியாகிய... மேலும் பார்க்க

தொடர்ந்து குறையும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தில் விலை விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,200-க்கும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.9,150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த நிலையில், வ... மேலும் பார்க்க