செய்திகள் :

`தமிழ்நாட்டுடன் வர்த்தக உறவை மேம்படுத்திக்கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்!' - சென்னையில் பெரு தூதர்

post image

தென் அமெரிக்க நாடான பெரு தன் 204-வது விடுதலை நாளை கொண்டாடி வருகிறது. இந்த நேரத்தில் பெரு நாட்டின் சுதந்திர தினம் சென்னையிலும் கொண்டாடப்பட்டது.

சுரங்கம், ஆட்டோமொபைல், தகவல் தொடர்பு துறை, விவசாயம் ஆகிய துறைகளில் இந்தியா - பெரு ஆகிய இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

1963 ம் ஆண்டு முதலே இந்தியாவுக்கும் பெருநாட்டுக்கும் இடையே இருதரப்பு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

தென் அமெரிக்க மற்றும் கரிபியன் நாடுகளை மட்டும் கணக்கில் கொண்டால் இருநாடுகளுக்கான வர்த்தகத்தில் பெரு, மூன்றாம் இடத்தில் இருக்கிறது. அதாவது 2019-20 ஆண்டில் 234 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்த இரு நாட்டு வர்த்தகம் 2023-24 ஆண்டு 403 கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற இந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். "தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருநாடுகளுக்கு இடையே தற்போது தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் மரபுசார சக்தியினால் இயங்கக்கூடிய வாகனங்கள் துறை, மருத்துவ துறை, மின்னியல் தொழில்நுட்பம் என பல துறைகளிலும் இருநாடுகளுக்கு இடையே வர்த்தம் மேலும் மேம்படும்" என்றார் பெருநாட்டின் கெளரவ தூதராகச் செயல்படும் TVS Supply Chain Solutions தினேஷ்.

இவ்விழாவில் கலந்து கொண்ட பெருநாட்டின் தூதரான Javier Manuel Paulinich Velarde பேசுகையில், ``பெரு நாட்டின் சுதந்திர தினம் முதன்முதலாக சென்னையில் கொண்டப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவுடன் குறிப்பாக தொழில் துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டுடன் வர்த்தகம் மற்றும் பண்பாட்டு உறவுகளை மேம்படுத்திக்கொள்ள பெரு ஆர்வமாக இருக்கிறது" என்றார்.

இந்நிகழ்வில் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான பழனிவேல் தியாகராஜன் உட்பட பல நாடுகளின் தூதரக அதிகாரிகள் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள்.

`இதில் அரசியல் இல்லை..!’ - பிரதமர் மோடி நிகழ்சியில் திருமாவளவன் பங்கேற்றது குறித்து வன்னிஅரசு

இரண்டுநாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்த மோடி, சனிக்கிழமை துத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட புதிய விமான நிலைய முனையத்தைத் திறந்து வைத்தார். நேற்று கங்கை கொண்ட சோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திர சோழனின் ப... மேலும் பார்க்க

Top News : பிரதமர் மோடியின் தமிழ்நாடு விசிட் டு முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் | ஜூலை 27 ரவுண்ட்அப்

இன்றைய நாளின் (ஜூலை 27) முக்கியச் செய்திகள்!பீகாரில் ஊர்க்காவல் படை தேர்வில் கலந்துக்கொண்டப் பெண் ஒருவர் மயங்கிய நிலையில், அவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்போது கூட்டு பாலியல் வன்கொடு... மேலும் பார்க்க

பிரதமர் மோடி திறந்து வைத்த தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம்! - Event Coverage Album

பிரதமர் மோடி திறந்து வைத்த தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம்.! மேலும் பார்க்க

PM Modi TN Visit: கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி; இளையராஜாவின் புதிய இசைத் தொகுப்பு வெளியீடு

தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வந்திருக்கும் பிரதமர் மோடி நேற்று துத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட புதிய விமான நிலைய முனையத்தைத் திறந்து வைத்தார். இதையடுத்து இன்று கங்கை கொண்ட சோழபுரத்தில் மாமன்ன... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்... பரபரக்க வைத்த மர்ம நபர்!

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைசுற்றல் காரணமாக கடந்த திங்கட்கிழமை (ஜூலை 21), சென்னை, ஆயிரம் விளக்குப் பகுதி கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு ஆஞ்சியோ ப... மேலும் பார்க்க

கர்ப்பிணிக்கு காலாவதி குளுக்கோஸ் விநியோகம்; அரசு மருத்துவமனை முற்றுகை - திருப்பூரில் நடந்தது என்ன?

திருப்பூர் மாநகர் சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் முனியன். இவரது மனைவி பானுமதி. 5 மாத கர்ப்பிணியான இவர், திருப்பூர் அவிநாசி சாலை பங்களா ஸ்டாப் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வரும் டி. எ... மேலும் பார்க்க