செய்திகள் :

வருகிறது செயற்கை தங்கம்! இனி தங்கம் விலை என்னவாகும்?

post image

பெரும்பாலான வேதியியல் விஞ்ஞானிகளின் கனவாக இருப்பது செயற்கை தங்கம்தான். ஆனால் அது கனவாகவே இருந்துவிடுமா? நிஜமாகுமா என்ற கேள்விக்கு அமெரிக்க புத்தாக்க நிறுவனம் ஒன்று பதில் அளித்துள்ளது.

நாள்தோறும் பலரும் பார்க்கும் முக்கிய தலைப்புகளில் தங்கம், வெள்ளி விலை நிலவரமும் ஒன்று. வாங்குகிறோமோ இல்லையோ, தங்கம் விலை ஏறினால் கவலைப்படுவதும், குறைந்தால் மகிழ்ச்சி அடைவதும் மக்களின் மனப்பான்மையாக மாறிவிட்டது.

இந்த நிலையில்தான் செயற்கை தங்கம் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் அமைந்துள்ள புத்தாக்க நிறுவனமான மாரதான் ஃபியூஷன், பாதரசத்தைக் கொண்டு செயற்கை தங்கம் உருவாக்கும் நுட்பத்தைக் கண்டுபிடித்திருப்பதாக அறிவித்துள்ளது.

அதாவது, கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான மராத்தான் ஃபியூஷன் மிகவும் வித்தியாசமான நுட்பத்தை முன்மொழிகிறது.

அணுக்கரு இணைவு உலையில் உள்ள நியூட்ரான் துகள்களிலிருந்து வரும் கதிரியக்கத்தன்மையைப் பயன்படுத்தி ஒரு வடிவத்தில் உள்ள பாதரசத்தை மற்றொரு வடிவமாக மாற்றுவதன் மூலம் பாதரசம்-197 என்பதை உருவாக்கலாம்.

இது பின்னர் நிலையான தங்க வடிவுக்கு சிதைக்கப்படும். இதுதான். தங்கம்-197. இந்த துகள் சிதைவு செயல்முறையில் ஒரு துணை அணு துகள் தானாகவே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இலகுவான துகள்களாக மாறுகிறது.

மாரத்தான் ஃபியூஷனைச் சேர்ந்த ஒரு குழு கூறுவது என்னவென்றால், ஒரு இணைவு மின் நிலையம், ஒரு ஆண்டு முழுவதும் இயக்கப்பட்டால் ஒரு ஜிகாவாட் வெப்ப மின்சாரத்தின் மூலம் பல டன் தங்கத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று நம்பப்படுவதாகக் கூறுகிறது.

இந்த நிறுவனம் சொல்லும் அளவுக்கு தங்கம் உற்பத்தி செய்யப்பட்டால், உலகளவில் தங்கத்தின் மதிப்பு குறைந்து, அதன் விலை கடுமையான சரிவை அடையும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், காலத்தில் எத்தனையோ மாற்றங்கள் இருந்தாலும் தங்கம் விலை மற்றும் அதன் மதிப்புக்கு மட்டும் இன்று வரை ஆபத்து ஏற்படவில்லை. அவ்வப்போது விலை குறையலாமே தவிர, குறைந்தேப் போனதில்லை.

அந்த வகையில்தான் இந்த செயற்கைத் தங்கம் குறித்து வெளியான மற்றொரு தகவலும் அமைந்துள்ளது. அதாவது செயற்கை தங்கத்தில் கதிரியக்க அபாயம் இருக்கலாம் எனறும், செயற்கைத் தங்கத்தை உருவாக்கினால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வரை அதனை தனித்து வைத்திருந்தால் மட்டுமே பயன்படுத்தும் நிலைக்கு வரும் என்று கூறுகிறார்கள்.

அப்படியிருந்தால் நிச்சயம் தற்போதிருக்கும் தங்கத்துக்கு மதிப்பும் குறையாது, விலையும் குறையாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை!

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,200-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.9,150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Artificial gold is the dream of most chemists. But will it remain a dream? Will it become a reality? An American innovation company has answered the question.

இதையும் படிக்க.. அழையா விருந்தாளி! ஜூலை 30ல் பூமியை நெருங்கும் விண்கல்! நாசா எச்சரிக்கை!!

2025-ல் மட்டும் நிலுவையிலுள்ள நுகர்வோர் வழக்குகள் எண்ணிக்கை 12,000!

2025 ஆம் ஆண்டில் இதுவரை நிலுவையிலுள்ள நுகர்வோர் வழக்குகளின் எண்ணிக்கை 12 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக இணை அமைச்சர் பி.எ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் எதிர்காலத்திலும் தொடரும்! - மக்களவையில் மோடி

ஆபரேஷன் சிந்தூர் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் இன்று(ஜூலை 29) நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:கா... மேலும் பார்க்க

டிரம்ப் பேசியது பொய் என மோடி கூறவில்லை: ராகுல் காந்தி கருத்து

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியது பொய் என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகக் கூறவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில்... வங்கிகளில் உரிமைகோரப்படாத வைப்புத்தொகை ரூ. 52,174 கோடி!

பொதுத் துறை வங்கி மற்றும் தனியார் வங்கிகளில் கடந்த மூன்று நிதியாண்டுகளாக உரிமை கோரப்படாத வைப்புத்தொகை பணம், ரூ. 52,174 கோடியை எட்டியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வங்கிகளில் உள்ள வைப்புத்தொகை ரூ. 42... மேலும் பார்க்க

இந்திரா காந்தியின் துணிச்சல் மோடிக்கு இல்லையா? -மக்களவையில் அனல் பறக்க விவாதம்

இந்திரா காந்தியின் துணிச்சல் மோடிக்கு இல்லையா? என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.ராகுல் காந்தி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளில் பிரதமர் மோட... மேலும் பார்க்க

யாரும் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை; பாகிஸ்தான்தான் கதறியது: பிரதமர் மோடி

இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது வெறும் 3 நாடுகள் மட்டுமே பாகிஸ்தானை ஆதரித்தன், 190 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மட்டும் கிடைக்கவில்லை என மக்களவையில் பிரதமர... மேலும் பார்க்க