செய்திகள் :

யாரும் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை; பாகிஸ்தான்தான் கதறியது: பிரதமர் மோடி

post image

இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது வெறும் 3 நாடுகள் மட்டுமே பாகிஸ்தானை ஆதரித்தன், 190 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மட்டும் கிடைக்கவில்லை என மக்களவையில் பிரதமர் மோடி பேசினார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.

அப்போது அவர் கூறுகையில், ஐ.ந. உள்பட பல உலக நாடுகளில் இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு கிடைத்தது. பாகிஸ்தானுக்கு ஒட்டுமொத்த உலக நாடுகள் 193ல், சீனா, துருக்கி என வெறும் 3 நாடுகளின் ஆதரவுதான் கிடைத்தது. ஆனால், இந்தியாவுக்கு 190 நாடுகளின் ஆதரவு கிடைத்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை மண்டியிட வைத்துவிட்டோம். இந்த தாக்குதலை பாகிஸ்தான் பல ஆண்டுகளுக்கு மறக்க முடியாது.

இந்திய ராணுவம், ஆபரேஷன் சிந்தூரில் 100 சதவீத இலக்கை எட்டியது. ஆனால், மோடி தோற்றுவிட்டார் எனக் கூறி காங்கிரஸ் மகிழ்ச்சி அடைந்தது. எதிர்க்கட்சி அனைவரும் என்னையே குறி வைத்துத் தாக்குகிறார்கள். என்னை தாக்குவதில் குறியாக உள்ளனர். தேசத்தின் சக்தியை குறைத்து மதிப்பிட்டனர்.

இந்தியா மீதும், ராணுவ வலிமை மீதும் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை. இந்தியாவுக்கு உலகின் மொத்த ஆதரவும் கிடைத்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மட்டும் கிடைக்கவில்லை.

பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரை இந்தியா நிச்சயம் தாக்கும் என்பது தற்போது நிரூபிக்கப்பட்ட உண்மையாக உள்ளது.

எதிர்க்கட்சிகள் சொல்லும் கருத்துகள் பலவும், இந்திய எல்லையைத் தாண்டி வெளியே இருந்து வருவது போல ஒத்திருக்கிறது. ஒரே இரவில் பாகிஸ்தானுக்கே சென்று இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்பினர்.

ஆனால், எங்கே சென்றது 56 இன்ச் நெஞ்சு என்று காங்கிரஸ் கட்சியினர் நையாண்டி செய்கிறார்கள். எப்போதுமே மக்கள் மனங்களை காங்கிரஸால் வெல்ல முடியாது. எப்போதுமே ஆபரேஷன் சிந்தூரின் இலக்குகள் தெளிவாக இருந்தன.

பாகிஸ்தான் விமான தளங்களில் கடும் பாதிப்பை உருவாக்கியது இந்திய பாதுகாப்புப் படை. இந்தியாவின் தற்சார்பு தொழில்நுட்பங்கள் சிறப்பாக செயல்பட்டன. பயங்கரவாதிகளையும் அதை ஆதரிக்கும் நாடுகளையும் பிரித்துப்பார்க்க முடியாது என்று கூறினார் பிரதமர் மோடி.

புகழ்பெற்ற பொருளாதார நிபுணா் மேக்நாத் தேசாய் காலமானாா்

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த புகழ்பெற்ற பிரிட்டன் பொருளாதார நிபுணரும், அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான மேக்நாத் தேசாய் (85) செவ்வாய்க்கிழமை காலமானாா்.உடல்நல பாதிப்பு காரணமாக ஹரியாணா மாநிலம் கு... மேலும் பார்க்க

இன்று விண்ணில் பாய்கிறது ‘நிசாா்’ செயற்கைக்கோள்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து உருவாக்கிய ‘நிசாா்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் புதன்கிழமை (ஜூலை 30) மாலை விண்ணில் ஏவப்படவுள்ளது... மேலும் பார்க்க

12,000 பேரை பணி நீக்குவதாக டிசிஎஸ் அறிவிப்பு: நிலைமை கவனித்து வருவதாக மத்திய அரசு தகவல்

நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் 12,000-க்கும் மேற்பட்டோரை பணியில் இருந்து நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது ஊழியா்கள் மத்தியில் பெரும் அச்சத்த... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: குற்றப் பத்திரிகையை கவனத்தில் கொள்வதற்கான தீா்ப்பு ஒத்திவைப்பு

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிகையை கவனத்தில் எடுத்துக்கொள்வதா, வேண்டாமா என்பது தொடா்பான தீா்ப்பை தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை வெளியிடும் ஏஜேஎ... மேலும் பார்க்க

காா்கேயை விமா்சித்ததற்கு மன்னிப்பு கோரினாா் ஜெ.பி.நட்டா

‘ஆபரேஷன் சிந்தூா்’ மீதான சிறப்பு விவாதத்தின்போது மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவரான மல்லிகாா்ஜுன காா்கேயை விமா்சித்து ஆட்சேபத்துக்குரிய கருத்து தெரிவித்ததற்கு மன்னிப்பு கோருவதாக மத்திய சுகாதாரத் துறை ... மேலும் பார்க்க

6 உயா்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

தில்லி, மும்பை உள்ளிட்ட 6 உயா்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதிகள் சூா்ய காந்த், விக்ரம் நாத், இடம... மேலும் பார்க்க