செய்திகள் :

சொந்தமாக பணமோ விமான நிலையமோ இல்லை..ஆனால் கோடீஸ்வர நாடு! எது தெரியுமா?

post image

சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்ட்ரியா நாடுகளை தனது அரணாகக் கொண்டிருக்கும் நாடு லிச்டென்ஸ்டெய்ன். ஐரோப்பியாவின் மிகப் பணக்கார நாடாக மின்னிக் கொண்டிருக்கிறது இது.

இதன் மிகச் சிறிய அளவு மட்டுமல்ல, இது பல்வேறு விஷயங்களால் மற்ற நாடுகளிலிருந்து தனித்து இருக்கிறது. அதாவது சொந்தமாக இந்த நாட்டுக்கு என்று தனி விமான நிலையம் கிடையாது, சொந்தமாக பணமோ நாணயமோ வெளியிட்டது இல்லை. அவ்வளவு ஏன், உள்ளூர் மொழி என்று எதையும் அறிவித்ததில்லை.

ஆனால், உலகிலேயே லிச்டென்ஸ்டெய்ன் நாடு தான், மிகவும் பணக்கார நாடாகவும் பாதுகாப்பான நாடாகவும் அறியப்படுகிறது.

இன்னமும் அரண்மனைகளில் வாழும் தேவதைகளின் கதைகளைப் பேசிக்கொண்டும், மலைப்பாங்கான நிலப்பரப்பில் எழில் கொஞ்சும் காட்சிகளை ரசித்தபடியும் குற்றச் சம்பவங்களுக்கு இடம்கொடாமல் இருக்கிறது அந்த நாடு. அது மட்டுமா பல வீடுகளுக்கு இங்கே பூட்டுகளே இல்லை.

மிகச் சிறப்பான வங்கித் துறை, உற்பத்தித் துறையில் முன்னோடி, வளர்ச்சி என்பது சமுதாயம் சார்ந்ததாக மாற்றப்பட்டிருக்கும் நிலை, வாழும் முறையில் ஏற்பட்ட நாகரீகப் பாங்கு என அனைத்தும் இந்த நாட்டை பணக்கார நாடாக மாற்றியிருக்கிறது.

அண்மையில் வெளியான இன்ஸ்டாகிராம் விடியோ மூலமாகத்தான் இந்த நாட்டின் பல விஷயங்கள் உலகின் வெளிச்சத்துக்கு வந்து வைரலாகியிருக்கிறது.

இந்த விடியோவைப் பார்க்கும் பலரும், எப்படி இப்படி ஒரு நாடு உலகின் பல மோசமான விவகாரங்களிலிருந்து தொலைவில், இன்னமும் இந்த உலகத்தில் விட்டுவைக்கப்பட்டிருக்கிறது என்று மக்கள் ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள்.

பாலஸ்தீன் தனி நாடாக செப்டம்பரில் அங்கீகரிக்கப்படும்: இஸ்ரேலுக்கு பிரிட்டன் எச்சரிக்கை!

பாலஸ்தீன் தனி நாடாக அங்கீகரிக்கப்படும் என்று இஸ்ரேலுக்கு பிரிட்டன் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ. நா. அவையில் பாலஸ்தீன் தனி நாடாக செப்டம்பரில் அங்கீகரிக்கப்படும் என்று பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மெர்... மேலும் பார்க்க

ஆஸ்கர் வென்ற ஆவணப் படத்தில் பணியாற்றிய ஆர்வலர் சுட்டுக்கொலை!

மேற்கு கரைப் பகுதியில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளரால், பாலஸ்தீன ஆர்வலர் மற்றும் ஆசிரியரான ஒடேஹ் முஹம்மது ஹதாலின் சுட்டுக்கொல்லப்பட்டார். பாலஸ்தீன சமூகத்தின் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் ராணு... மேலும் பார்க்க

இம்ரான் கானின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு!

பாகிஸ்தானில் மே 9ல் நடைபெற்ற வன்முறை வழக்குகள் தொடர்பாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தாக்கல் செய்த ஜாமீன் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு ஒத்... மேலும் பார்க்க

கனடாவில் சிறிய விமானம் விபத்து: இந்திய இளைஞர் பலியானது உறுதி!

கனடா நாட்டில் சிறிய ரக விமான விபத்தில், இந்திய இளைஞர் ஒருவர் பலியானது உறுதியாகியுள்ளதாக, அந்நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. நியூ ஃபவுண்ட் லேண்ட் மாகாணத்தின், டீர் லேக் பகுதியில் கடந்த ஜூல... மேலும் பார்க்க

நைஜீரியா: பணம் கொடுத்தும் 35 பிணைக் கைதிகள் கொலை! கடத்தல் கும்பல் வெறிச் செயல்!

நைஜீரியா நாட்டில், பணம் கொடுக்கப்பட்டபோதிலும், சுமார் 35 பிணைக் கைதிகளை கடத்தல்காரர்கள் சுட்டுக்கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஸம்ஃபரா மாநிலத்தின், பங்கா எனும் கிராமத்தில் இருந்து, கடந்த மார... மேலும் பார்க்க

மெஸ்ஸி.. மெஸ்ஸி..! இந்த முறை கோல்டு பிளே ‘கிஸ் கேம்’மில்..!

அமெரிக்காவில் நடைபெற்ற கோல்டு பிளே இசை நிகழ்ச்சியில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது மனைவி அன்டோனெலா மற்றும் குழந்தைகளுடன் கலந்துகொண்டார்.உலகில் பல்வேறு நாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகள், வ... மேலும் பார்க்க