செய்திகள் :

Modi: "பாகிஸ்தானின் விமான தளங்கள் ICU-ல் இருக்கின்றன" - மக்களவையில் பிரதமரின் `நறுக்' வசனங்கள்!

post image

நாடாளுமன்றத்தில் ஆப்பரேஷன் சிந்தூர் பற்றி நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் கலந்துகொண்டு மக்களவையில் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.

முன்னதாக பேசிய ராகுல் காந்தி முதலான எதிர்க்கட்சித் தலைவர்கள் பல்வேறு கோணங்களில் பாஜக அரசின் மீது விமர்சனங்களை வைத்திருந்த நிலையில், மோடியின் உரையில் எல்லாவற்றுக்கு பதில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், "நான் இங்கே இந்தியாவின் பக்கத்தை முன்வைக்கவும், அதைப் பார்க்க மறுப்பவர்களுக்கு ஒரு கண்ணாடியைக் காட்டவும் வந்து நிற்கிறேன்" எனக் குறிப்பிட்டார் மோடி.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ராணுவத்தைப் பாராட்டி பேசிய மோடி, காங்கிரஸ் அரசியல் செய்வதிலேயே கவனமாக இருந்ததாக சாடியிருந்தார். மோடி பேச்சில் வெளிப்பட்ட சில `நறுக்'-குகளை இங்கே காணலாம்.

`நறுக்'-குகள்

எங்கள் ஆயுதப் படை ஏப்ரல் 22-ம் தேதி (பஹல்காம் தாக்குதல்) 22 நிமிடங்களுக்குள் துல்லியமான தாக்குதல்களுடன் பழிவாங்கின.
இன்று பாகிஸ்தானின் விமான தளங்கள் ஐசியுவில் இருக்கின்றன.
நாங்கள் புதிய இயல்பை நிலைநிறுத்தியிருக்கிறோம்: பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கினால், இந்தியா துரத்தி வரும் என்பதைத் தெரிந்துகொண்டுள்ளனர்.
சிந்தூர் முதல் சிந்து (நதி) வரை நாம் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
எங்களுக்கு உலகளாவிய ஆதரவு கிடைத்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, என் நாட்டின் துணிச்சலான வீரர்களின் வீரத்திற்கு, காங்கிரஸின் ஆதரவு கிடைக்கவில்லை

``இந்திரா காந்தியின் தைரியத்தில் 50% இருந்தால் கூட..!" - பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல் காந்தி

"எந்த உலத் தலைவரும் இந்தியாவை போரை நிறுத்துமாறு கூறவில்லை" (ட்ரம்ப் பெயரைக் குறிப்பிடாமல் பேசினார்).
பயங்கரவாதிகள் அழுகிறார்கள், அவர்களின் மூளையாக இருப்பவர்கள் அழுகிறார்கள், அவர்கள் அழுவதைப் பார்த்து, சிலர் இங்கேயும் அழுகிறார்கள்.
ஒருபக்கம் இந்தியா தன்னிறைவை நோக்கி நகர்கிறது, துரதிர்ஷ்டவசமாக காங்கிரஸ் அரசியல் செய்வதற்கு பாகிஸ்தானிடமிருந்து பிரச்னைகளை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறது.
இப்போது காங்கிரஸ் பாகிஸ்தான் ரிமோட் கன்ட்ரோல் பிடியிலிருக்கிறது; பாகிஸ்தான் சொல்வதை மட்டும்தான் நம்புகிறது!

``காங்கிரஸ் இப்போது பாகிஸ்தானின் ரிமோட் கன்ட்ரோலில் செயல்படுகிறது" - பிரதமர் மோடி முழு உரை - லின்க்

`இந்தியாவின் மீது 20 - 25 சதவிகித பரஸ்பர வரியா?' - ட்ரம்பின் பதில் என்ன?

ஏப்ரல் 9-ம் தேதி அமலுக்கு வரவிருந்த அமெரிக்காவின் பரஸ்பர வரியை, 'ஒப்பந்தம் பேசலாம்' என்று 90 நாள்களுக்கு ஒத்தி வைத்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்தப் பரஸ்பர வரி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அம... மேலும் பார்க்க

Pahalgam: இந்திய பணம் டு பாகிஸ்தான் சாக்லேட்; தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டவை - வெளியான லிஸ்ட்

ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் நேற்று ஜம்மு காஷ்மீரில் ஆபரேஷன் மகாதேவ் என்ற நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய உள்து... மேலும் பார்க்க

நெல்லை ஆணவக் கொலை: `அலட்சியம்; தனிச்சட்ட கோரிக்கை புறக்கணிப்பு...' - திமுக-வைச் சாடும் பா.ரஞ்சித்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஐடி ஊழியர் கவின், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டின் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் பிரமுகர்களும், இய... மேலும் பார்க்க

சூட்டைக் கிளப்பிய பஹல்காம் விவாதம் `டு' மத்திய அரசைக் கண்டித்த ஓபிஎஸ் - Daily Roundup 29-07-2025

``இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்ததை செய்ததாக 26 முறை அமெரிக்க அதிபர் தெரிவித்திருக்கிறார். அதிபர் ட்ரம்ப் பொய் சொல்கிறார். அவர் ஒரு பொய்யர் என்று மட்டும் சொல்லுங்கள் பார்க்கலாம்" என நாடாளும... மேலும் பார்க்க

Edappadiயின் செயல் - டென்ஷனான BJP; கடுகடுக்கும் ADMK நிர்வாகிகள்| Off The Record

எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டிருக்கும் சுற்றுப் பயணத்தில் நடந்த அரசியல், குளறுபடிகள், உட்கட்சி அரசியல் குறித்தும் விவரிக்கிறது இந்த Off The Record. மேலும் பார்க்க