செய்திகள் :

ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை: 9 லட்சம் பேர் வெளியேற்றம்!

post image

ரஷியாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், சுனாமி பாதிக்கும் என கணிக்கப்படும் பகுதிகளில் இருந்து 9 லட்சம் பேரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ரஷியாவின் கம்சாட்கா தீபகற்ப பகுதிக்கு அருகில் புதன்கிழமை காலை 8.25 மணிக்கு பூமிக்கு அடியில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ரஷியா மட்டுமின்றி, ஜப்பான், ஹவாய், அலாஸ்கா ஆகிய பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் கடலோர பகுதிகளில் 3 அடி உயரத்திற்கு கடலலைகள் எழும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் 1 மீட்டர் வரை சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் வடக்கு திசையில் உள்ள தீவான ஹொக்கைடோவின் தெற்கு கரையில் அமைந்துள்ள டோகாச்சியில் 40 சென்டிமீட்டர் (சுமார் 1.3 அடி) அளவுக்கு அலைகள் மேலேழும்பியதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுனாமி எச்சரிக்கைக்கு தொடர்ந்து ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் உள்ள ஹொக்கைடோ முதல் ஒகினாவா வரை 133 நகராட்சிகளில் உள்ள 9 லட்சத்துக்கும் அதிகமானோரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இஷினோமாகியில் 50 சென்டிமீட்டர் (1.6 அடி) அளவுக்கு அலைகள் மேலெழும்பியதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tsunami warning: 900,000 under evacuation in Japan

இதையும் படிக்க :ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரஷியா, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!

ரூ. 8,757 கோடி சம்பளம்! மெட்டாவை உதறித் தள்ளிய பெண்மணி!

மெட்டாவில் ஒரு பில்லியன் டாலர் சம்பளத்துடன் கூடிய வேலையை ஓபன்ஏஐ-யின் முன்னாள் ஊழியர் மீரா முராட்டி நிராகரித்தார்.மெட்டா நிறுவனத்தின் செய்யறிவு (செயற்கை நுண்ணறிவு) பிரிவான சூப்பர் இன்டெலிஜன்ஸ் குழுவில்... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ் அதிபர் ஆக.4-ல் இந்தியா வருகை!

பிலிப்பின்ஸ் நாட்டின் அதிபர் ஃபெர்டினாண்டு ஆர். மார்கோஸ் ஜூனியர், வரும் ஆகஸ்ட் 4 முதல் 8 ஆம் தேதி வரை அரசு முறைப் பயணமாக இந்தியா வருவதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிலிப்பின்ஸ... மேலும் பார்க்க

இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 166 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை! பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியைச் சேர்ந்த 166 உறுப்பினர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக... மேலும் பார்க்க

சீனாவில் தலாய் லாமா குறித்த பாடல்... கைதான திபெத்திய கலைஞர்களின் நிலை என்ன?

சீனாவில் தலாய் லாமாவை புகழ்ந்து பாடல் வெளியிட்ட திபெத்திய கலைஞர்கள் 2 பேர், அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களது நிலைக்குறித்து மிகப் பெரியளவில் கவலை எழுந்துள்ளது.திபெத்திய புத்த... மேலும் பார்க்க

உக்ரைனில் தொடரும் ரஷியாவின் தாக்குதலில் 8 பேர் பலி! 10 குழந்தைகள் உள்பட 82 பேர் படுகாயம்!

உக்ரைன் தலைநகர் கீவ் மீது நள்ளிரவில் ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில், 6 வயது சிறுவன் உள்பட 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கீவ் நகரத்தின் மீது நேற்று (ஜூலை 30) நள்ளி... மேலும் பார்க்க

சீன தலைநகரில் கடும் வெள்ளம்: 80,000 பேர் வெளியேற்றம்! இருளில் மூழ்கிய 136 கிராமங்கள்!

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகப் பெய்து வரும் கனமழையால், 44 பேர் பலியானதுடன், 9 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் மாகாணத்தில், கடந்த வாரம் முதல் பெய்த... மேலும் பார்க்க