செய்திகள் :

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு நேருவே காரணம்! அமித் ஷா

post image

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு நேருவின் போர் கொள்கையே காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நடைபெற்று வரும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்த விவாதத்தில் பங்கேற்று அமித் ஷா இன்று உரையாற்றினார்.

அப்போது, முந்தைய போர்களில் காங்கிரஸின் செயல்பாடுகள் குறித்து அவர் விமர்சித்துப் பேசியதாவது:

”முப்படைத் தளபதிகள் கூட்டத்தில் பதிலடி கொடுக்க மோடி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இந்திய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கெஞ்சியதால்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இந்திய படைகள் பாகிஸ்தானின் போர் விமானங்கள் இயக்க முடியாத வகையில், விமான தளங்களை அழித்ததே, அவர்கள் தாமாக போர் நிறுத்தத்துக்கு முன்வர காரணாமாக அமைந்தது. தற்போது நடப்பது மோடி ஆட்சி, மன்மோகன் சிங் ஆட்சி அல்ல.

பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதலை அமைதியாக வேடிக்கை பார்க்க மாட்டோம். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த தாக்குதலுக்கும் நாங்கள் பதிலடி கொடுத்துள்ளோம்.

உரி, புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் துல்லிய தாக்குதலை நடத்தினோம். தற்போது பல கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளை அழித்துள்ளோம்.

இந்த சமயத்தில் முந்தைய போர் குறித்து குறிப்பிட விரும்புகிறேன். தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு நேருவின் போர் கொள்கையே காரணம். அவரின் ஆட்சியில் சிந்து நதியின் பகிர்வு 80 சதவிகிதம் பாகிஸ்தானுக்கு வழங்கி ஒப்பந்தம் செய்யப்பட்டது.

1971 போரில் நாடே இந்திரா காந்திக்கு ஆதரவாக இருந்தது. பாகிஸ்தானை இரண்டாகப் பிரித்தது வரலாற்றில் எப்போதும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றாமல் சிம்லா ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போதே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைப் பெற்றிருந்தால், இன்று பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்துவதற்கு அவசியமே இருந்திருக்காது.

நீங்கள் பாகிஸ்தானுக்கு நற்சான்று அளித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு கேள்வி கேட்க என்ன உரிமை உள்ளது? எவ்வித அதிகாரமும் இல்லை.

சீனாவுடனான போரின் போது 30,000 க்கும் மேற்பட்ட சதுர கிலோ மீட்டர் நேரு ஆட்சியில் சீனாவுக்கு வழங்கப்பட்டது. நேரு, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி என மூன்று தலைமுறைகளைக் கடந்து அவர்களுக்கு சீனாவின் மீது அனுதாபம் உள்ளது.

உரக்கப் பேசுவதால் உண்மையை மறைத்துவிட முடியாது.” எனத் தெரிவித்தார்.

Union Home Minister Amit Shah has said that Nehru's war policy is the reason for the existence of Pakistan-occupied Kashmir.

இதையும் படிக்க : பஹல்காம் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்! அமித் ஷா

ஆபரேஷன் சிந்தூர் எதிர்காலத்திலும் தொடரும்! - மக்களவையில் மோடி

ஆபரேஷன் சிந்தூர் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் இன்று(ஜூலை 29) நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:கா... மேலும் பார்க்க

டிரம்ப் பேசியது பொய் என மோடி கூறவில்லை: ராகுல் காந்தி கருத்து

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியது பொய் என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகக் கூறவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில்... வங்கிகளில் உரிமைகோரப்படாத வைப்புத்தொகை ரூ. 52,174 கோடி!

பொதுத் துறை வங்கி மற்றும் தனியார் வங்கிகளில் கடந்த மூன்று நிதியாண்டுகளாக உரிமை கோரப்படாத வைப்புத்தொகை பணம், ரூ. 52,174 கோடியை எட்டியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வங்கிகளில் உள்ள வைப்புத்தொகை ரூ. 42... மேலும் பார்க்க

இந்திரா காந்தியின் துணிச்சல் மோடிக்கு இல்லையா? -மக்களவையில் அனல் பறக்க விவாதம்

இந்திரா காந்தியின் துணிச்சல் மோடிக்கு இல்லையா? என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.ராகுல் காந்தி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளில் பிரதமர் மோட... மேலும் பார்க்க

யாரும் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை; பாகிஸ்தான்தான் கதறியது: பிரதமர் மோடி

இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது வெறும் 3 நாடுகள் மட்டுமே பாகிஸ்தானை ஆதரித்தன், 190 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மட்டும் கிடைக்கவில்லை என மக்களவையில் பிரதமர... மேலும் பார்க்க

மதத்தின் பெயரில் நடந்த சதியே பஹல்காம் தாக்குதல் : மக்களவையில் மோடி உரை

பஹல்காம் தாக்குதலில் மதத்தின் பெயரால் சதி நடந்ததாகவும், ஆனால், இந்திய மக்களின் ஒற்றுமை அதனை முறியடித்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை ஆபரேஷன் சிந்தூர்... மேலும் பார்க்க