செய்திகள் :

`மாறுவேடத்தில் மத்திய அரசு; குடியரசுத் தலைவருக்கே அனுப்புங்க’ - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு

post image

தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு அதிகபட்சம் மூன்று மாதம் வரை கால வரம்பை நிர்ணயித்து தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதற்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக இந்த தீர்ப்பு குறித்து 14 கேள்விகளை முன்வைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் கடிதம் எழுதி இருந்தார்

இந்த கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு தனி மனுவாக மாற்றிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தான் அங்கம் வகிக்கும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை விசாரணைக்காக அமைத்திருந்தார்.

குடியரசுத் தலைவர்

இந்த வழக்கை விசாரிக்க கூடாது என ஆரம்பத்திலேயே தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், இந்த விவகாரத்தில் அனைத்து மாநிலங்களின் கருத்தையும் நாங்கள் கேட்க வேண்டியிருக்கிறது எனக்கூறி மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகள் பதில் அளிக்க கடந்த வாரம் நோட்டீஸ் பிறப்பித்து இருந்தார்கள். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பலாம்.!

எட்டு பக்கங்களைக் கொண்ட அந்த பதில் மனுவில், ``மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் கால நிர்ணயம் செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அனைத்து சட்ட விதிகளையும் அலசி ஆராய்ந்து கொடுக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கும் அந்த தீர்ப்பிலேயே பதில் என்பது கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த விவகாரத்தை தொடர்ச்சியாக அரசியல் சாசன அமர்வு விசாரிக்க எந்த அவசியமும் இல்லை. எனவே குடியரசுத் தலைவரின் கடிதத்தை அவருக்கு உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பலாம்.

நடைமுறையில் இருக்கக்கூடியது அல்ல!

உச்ச நீதிமன்றம் ஒரு விவகாரத்தில் முடிவெடுத்து தீர்ப்பு வழங்கியதற்கு, பிறகு அதில் சந்தேகம் இருக்கிறது என யாரும் கேட்க முடியாது. அதில் நடைமுறை சாத்தியம் இல்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை சீராய்வு மனு எதையும் தாக்கல் செய்யாத நிலையில், மத்திய அரசும் இதனை ஏற்றுக் கொண்டது என்று தான் பொருள். எனவே குடியரசுத் தலைவரின் கடிதத்தின் அடிப்படையில் இந்த விவகாரத்தை மீண்டும் முழு மறு விசாரணைக்கு உட்படுத்துவது என்பது நடைமுறையில் இருக்கக்கூடியது அல்ல.

நேரடியாக இந்த விவகாரத்தில் மனுதாக்கல் செய்யாத மத்திய அரசு, குடியரசுத் தலைவர் கடிதத்தின் மூலம் மாறுவேடம் அணிந்து கொண்டு உச்ச நீதிமன்றத்தில் குறுக்கு வழியில் விசாரணையை நடத்த திட்டமிட்டு இருக்கிறது” என விமர்சித்துள்ள தமிழ்நாடு அரசு, குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால வரம்பு நிர்ணயித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது உச்ச நீதிமன்றத்திற்கு என்றே இருக்கும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி வழங்கப்பட்டது. அதை மறுபரிசீலனை செய்ய எந்த அவசியமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`மக்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் தான்..!’ - OTP விவகாரத்தில் திமுக மேல்முறையீடு

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை அணுகும் வகையில் `ஓரணியில் தமிழ்நாடு' என்னும் பெயரில் திமுக உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வந்தது. இதன் ஒரு பகுதி... மேலும் பார்க்க

தொடர்ந்து அதிகரிக்கும் நாய்க்கடி சம்பவங்கள்... தாமாக முன்வந்து கையிலெடுத்த உச்ச நீதிமன்றம்!

குழந்தைகள் முதல் வயதானவர்கள் பலரும் தெருநாய்க்கடி சம்பவங்களால் பாதிக்கப்படுவதும், சில சமயங்களில் உயிரிழப்பதும் அனைத்து மாநிலங்களிலும் பெரும் பிரச்னையாக இருக்கிறது.இந்த நிலையில், தெருநாய்க்கடி விவகாரத்... மேலும் பார்க்க

மா.சுப்பிரமணியன் மீதான வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் முடிவா?

கடந்த 1995 ஆம் ஆண்டு சிட்கோ திட்டத்தின் கீழ் அதில் பணிபுரிந்த தொழிலாளியான கர்ணன் என்பவருக்கு அரசு தொழிலாளர்களுக்கான இடத்தை தமிழ்நாடு அரசு ஒதுக்கியிருந்தது.அரசு ஊழியருக்கு ஒதுக்கும் இடத்தை வேறு யாருக்க... மேலும் பார்க்க

`அவர் மீதான வழக்கில் அவரே நீதிபதியாக இருப்பதை எவ்வாறு அனுமதிப்பது?' - மேனாள் நீதியரசர் அரி பரந்தாமன்

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடி வருபவர். பயிற்சி பெற்ற அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி, திருப்பரங்குன்றம் மலை விவ... மேலும் பார்க்க

7 ஆண்டுகள் சிறை தண்டனை (அ) ஆயுள் தண்டனை... ஆப்ஷன் கொடுத்த உச்ச நீதிமன்றம் - ஒரு சுவாரஸ்ய வழக்கு!

நீதி தாமதமாக நிலைநாட்டப்படும் வழக்குகளை பார்த்திருப்போம். அப்படிப்பட்ட ஒரு கவனிக்கத்தக்க வழக்கில் கல்லூரி படிக்கும்போது செய்த குற்றத்துக்காக குற்றவாளிக்கு 67 வயதில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதி... மேலும் பார்க்க

Haryana: பாலியல் வழக்கில் சிறைக்கு சென்ற எம்.பி மகனுக்கு `துணை அட்வகேட் ஜெனரல்' பதவி

ஹரியானாவில் பாஜக எம்.பி சுபாஷ் பரலாவின் மகன் விகாஷ் பரலாவை அம்மாநில அரசு துணை அட்வகேட் ஜெனரலாக நியமித்திருக்கிறது. இந்த விகாஷ் பரலா, காரில் பெண் ஒருவரை துரத்திச் சென்று தொந்தரவு செய்த விவகாரத்தில் பால... மேலும் பார்க்க