செய்திகள் :

ஐபிஎல் கூட்ட நெரிசல்: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட பெங்களூரு காவல் ஆணையருக்கு மீண்டும் பணி! கர்நாடக அரசு உத்தரவு

post image

பெங்களூரு காவல் ஆணையரை பணியிடைநீக்கம் செய்த உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக கர்நாடக அரசு திங்கள்கிழமை(ஜூலை 28) வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பாராட்ட பெங்களூரில் கடந்த ஜூன் 4-ஆம் தேதி வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க பெருங்கூட்டம் திரண்டது. அதில் இளம் பருவ ஆண், பெண்களே அதிகம்.

முறையான திட்டமிடலின்றி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் உண்டானது. அதில் 11 உயிர்கள் பறிபோயின. இந்தச் சம்பவம் நாடெங்கிலும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து, பெங்களூரு காவல் ஆணையர் உள்பட முக்கிய அதிகாரிகள் சிலர் பனியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.

இந்தநிலையில், பெங்களூரு காவல் ஆணையர் பி. தயானந்தாவை பணியிடைநீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கர்நாடக அரசு திங்கள்கிழமை(ஜூலை 28) திரும்பப் பெற்றுள்ளது. அவருடன் சேர்த்து காவல் துறை துணை ஆணையர் ஷேகர் எச். தெக்கனவர் (ஐபிஎஸ்), உதவி ஆணையர் சி. பாலகிருஷ்ணா, காவல் ஆய்வாளர் கே. கிரீஷ் என மொத்தம் நான்கு காவல் துறை அதிகாரிகளின் சஸ்பெண்ட் உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில், ஓய்வுபெற்ற கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் மாநில அரசின் உத்தரவின்கீழ் விசாரணையை நடத்தியது.

அந்த ஆணையம் விசாரணையை நிறைவு செய்துவிட்டதாகவும், விரிவானதொரு அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கண்ட அதிகாரிகளும் தங்கள் பணியிடைநீக்கம் உத்தரவை ரத்து செய்ய கேட்டுக்கொண்டுள்ளனர். இவற்றின் அடிப்படையில், அவர்கள் தங்களது பணியில் உடனடியாக இணைய உத்தரவிடப்படுகிறது என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Bengaluru police commissioner suspension has been revoked by the Karnataka government

ஆபரேஷன் மகாதேவ்: பஹல்காம் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவர் கொலை

பஹல்காம் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஹாஸிம் மூஸா ஃபெளஜி, ஆபரேஷன் மகாதேவ் பெயரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் வெளியி... மேலும் பார்க்க

கர்னல் சோஃபியாவுக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து பேசாத ராஜ்நாத் சிங்: சு.வெங்கடேசன்

ஆபரேஷன் சிந்தூரில் முக்கியப் பங்காற்றிய கர்னல் சோஃபியாவுக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசாதது ஏன்? என மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். பஹ... மேலும் பார்க்க

மணிப்பூரில் தோண்டத்தோண்ட கிடைக்கும் ஆயுதங்கள்! பாதுகாப்புப்படை தீவிர சோதனை

மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சூரசந்த்பூர், கேங்க்போக்பி, பேர்ஸ்வால், டெங்க்நௌபால், சண்டெல் ஆகிய மலைப்பிரதேச மாவட்டங்களில் கடந்த சில ந... மேலும் பார்க்க

அமெரிக்காவின் தலையீடு இல்லை என திட்டவட்டமாக மறுக்கவில்லை: பிரியங்கா

ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாகக் கூறவில்லை என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட கால இ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி பேசவில்லை - ஜெய்சங்கர்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசவில்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு... மேலும் பார்க்க

‘ஐ லவ் யூ’ சொல்வதெல்லாம் பாலியல் குற்றமாகாது! -உயர் நீதிமன்றம்

ராய்பூர் : ‘ஐ லவ் யூ’ சொல்வதெல்லாம் பாலியல் குற்றமாகாது என்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற போக்சோ வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்குள்பட்ட இளம் பெண் ஒருவரிடம் ‘ஐ லவ் யூ’ சொன்ன காரணத... மேலும் பார்க்க