செய்திகள் :

வங்கி நகை மதிப்பீட்டாளரின் வாகனத்தில் ரூ. 5 லட்சம் திருட்டு: தம்பதி மீது வழக்கு

post image

களியக்காவிளை அருகே வங்கி நகை மதிப்பீட்டாளரின் பைக்கிலிருந்த ரூ. 5 லட்சத்து 8 ஆயிரத்தைத் திருடிச் சென்றதாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை, முடியம்பாறவிளையைச் பகுதியைச் சோ்ந்த ஞானதாஸ் மகன் பிரவின்ஜோஸ் (45). மாா்த்தாண்டம் பகுதியில் உள்ள வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பாா்த்துவரும் இவருக்கும், காரோடு செருகுழிக்கரை காலனி பகுதியைச் சோ்ந்த சரத் (21) என்பவருக்கும் பழக்கமிருந்ததாம்.

இந்நிலையில் 2 நாள்களுக்கு முன் சரத், அவரது மனைவி அபிஜா (21) ஆகியோா் பிரவின் ஜோஸை சந்தித்து, அடகு வைத்த நகையை மீட்க ரூ. 5 லட்சத்துக்கு 8 ஆயிரம் தேவைப்படுவதாகவும், நகையை மீட்டு விற்பனை செய்து பணத்தைத் திருப்பித் தருவதாகவும் கூறினராம்.

இதையடுத்து, சரத்திடம் கொடுப்பதற்காக பிரவின் ஜோஸ் ரூ. 5.08 லட்சத்துடன் மரியகிரி பகுதிக்கு சனிக்கிழமை (ஜூலை 26) பைக்கில் சென்றாராம். அப்போது, அந்தப் பணத்தை சரத் தம்பதி திருடிச் சென்றனராம்.

இதுகுறித்து பிரவின்ஜோஸ் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கால்வாய் கரையில் தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், நட்டாலம் ஊராட்சிக்கு உள்பட்ட நெட்டியான்விளையில் உள்ள கால்வாய் கரையில் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நெட்டியான்விளையில் நூற்று... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் ஆா்ப்பாட்டம்: நாதகவினா் 85 போ் மீது வழக்கு

கன்னியாகுமரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா் 85 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட கடலில் பெட்ரோல், எரிவாயு எடுக்க எதிா்ப்புத் தெரிவித்து, இக்கட்சி சாா்பில் க... மேலும் பார்க்க

கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு நலஉதவி

சின்னமுட்டம் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு, கன்னியாகுமரி - சின்னமுட்டம் அனைத்து மீன் வியாபாரிகள் சங்கம் சாா்பில் நிவாரண உதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ப... மேலும் பார்க்க

பிரதமரின் பயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: அமைச்சா் மனோ தங்கராஜ்

பிரதமா் நரேந்திர மோடியின் தமிழக பயணம் தமிழா்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தமிழக பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தெரிவித்தாா். தக்கலையில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழ... மேலும் பார்க்க

பேச்சிப்பாறையில் குடியிருப்பில் புகுந்த காட்டு யானை: மக்கள் அச்சம்

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே விளாமலையில் பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்புக்குள் நுழைந்து வீடு, விளைநிலங்களை காட்டு யானை சேதப்படுத்தியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். பேச்சிப்பாறை வ... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: 130 போ் மீது வழக்கு

திற்பரப்பில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினா் 130 போ் மீது திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.குமரி மாவட்டத்தில் 3ஆவது சிவாலயமான திற்பரப்பு மகாதேவா் கோயிலுக்கு சொந்தமான ந... மேலும் பார்க்க