செய்திகள் :

Doctor Vikatan: வழுக்கை தலையில் முடி வளரச் செய்யுமா சின்ன வெங்காயச்சாறு?

post image

Doctor Vikatan: என்னுடைய தோழி  அடிக்கடி சின்ன வெங்காயத்தை அரைத்துச் சாறு எடுத்துத் தலையில் தடவிக் குளிக்கிறாள். அது அவளுக்கு முடி வளர்ச்சிக்கு உதவுவதாகச் சொல்கிறாள். சின்ன வெங்காயச் சாற்றுக்கு வழுக்கைத் தலையில் கூட முடி வளரச் செய்யும் ஆற்றல் உள்ளதாகச் சொல்கிறார்களே... அது உண்மையா... எல்லோரும் இதைப் பின்பற்றலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை ஆலோசகரும் அரோமாதெரபிஸ்ட்டுமான கீதா அஷோக்.

கீதா அஷோக்

சின்ன வெங்காயச் சாறு தடவுவதால், 'ஆண்ட்ரோஜெனடிக் அலோபேஷியா' (Androgenetic alopecia) எனப்படும் வழுக்கை பாதிப்பு சரியாகும் என்பதற்கு அறிவியல்ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. தவிர, தலையில் இயற்கையாகச் சுரக்கும் எண்ணெய்ப் பசையையும் வெங்காயச் சாறு அகற்றிவிடும். அதனால், மண்டைப்பகுதி வறண்டு போகும். 

தலையில் இயற்கையான எண்ணெய்ப்பசை இருப்பதுதான் ஆரோக்கியமானது. அது குறைந்து வறண்டுபோகும்போது முடி வறண்டு உதிரும். கூந்தலின் கறுப்பு நிறம் மாறி, செம்பட்டையாவதற்கும், நரைப்பதற்கும்கூட இது காரணமாகலாம். 

வெங்காயத்தில் சல்ஃபர் எனப்படும் கந்தகச்சத்து அதிகமிருக்கும். சின்ன வெங்காயத்தை பச்சையாக அரைத்து அதை அப்படியே தலையில் தடவும்போது முடி மெலியும், உடையும். வெங்காயச் சாற்றைத் தலையில் தடவி, மணிக்கணக்கில் ஊறி, பிறகு குளிக்கும்போது, கொத்துக் கொத்தாக முடி உதிரும். அதன் கடுமையான கந்தகத்தன்மை, முடியின் ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல.

சின்ன வெங்காயத்தை பச்சையாக அரைத்து அதை அப்படியே தலையில் தடவும்போது முடி மெலியும், உடையும்.

சின்ன வெங்காயச் சாற்றையோ, விழுதையோ தலையில் தடவும்போது அளவுக்கதிக அரிப்பை உணர்வார்கள். சொரிந்து சொரிந்து மண்டைப்பகுதியே செதில் செதிலாகக் காணப்படும்.  வெங்காயத்தில் உள்ள அதிக கந்தகத்தன்மையின் காரணமாக, கண்களில் எரிச்சல், அரிப்பு, இமை முடிகள் உதிர்வது போன்றவையும் ஏற்படலாம்.

எனவே, இதுபோல கண்டது, கேட்டது, அடுத்தவர் செய்வது போன்ற விஷயங்களை அப்படியே கண்மூடித்தனமாக நம்பி பின்பற்றாமல், சரியான மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனை கேட்டு எதையும் செய்யுங்கள். கூந்தல் வளர்ச்சி என்பது ஆரோக்கியமான உணவுப்பழக்கம், ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை, சரியான தூக்கம் போன்றவற்றைப் பொறுத்தது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

விருதுநகர்: பிறக்கும்போது 680 கிராம் எடை; 76 நாட்கள் தீவிர சிகிச்சை; நலமுடன் வீடு திரும்பிய குழந்தை!

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், விருதுநகர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவருக்கு 6 மாதத்திலேயே பனிக்குடம் உடைந்து, பெண் குழந்தை பிறந்த... மேலும் பார்க்க

Doctor Vikatan: சளி பிடித்திருக்கும்போது சிக்கன் சூப்பும் நண்டு ரசமும் குடிப்பது சரியானதா?

Doctor Vikatan:சளி பிடித்திருந்தாலோ, உடல் அசதியாக இருந்தாலோ சிக்கன் சூப், சிக்கன் உணவுகள் சாப்பிடச் சொல்கிறார்களே.. அது சரியா?பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்கும... மேலும் பார்க்க

Doctor Vikatan: நாய் கடித்தால் உணவுக்கட்டுப்பாடு அவசியமா, அசைவ உணவைத் தவிர்க்க வேண்டுமா?

Doctor Vikatan:நாய் கடித்தால் உணவுக்கட்டுப்பாடு அவசியமா.... ஆங்கில மருத்துவரிடம் சிகிச்சை எடுத்தாலும், உணவு அலர்ஜி பற்றி விசாரிப்பது ஏன்... சிகிச்சை முடியும்வரை அசைவம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: சர்க்கரை நோயை சித்த மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியுமா?

Doctor Vikatan: சர்க்கரை நோயை சித்த மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியுமா? அது முழுமையான தீர்வாகஅமையுமா அல்லது அலோபதி மருந்துகள் தான் எடுக்க வேண்டுமா?-Fathima, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார்,... மேலும் பார்க்க

Doctor Vikatan: டிரெண்டாகும் ஃப்ரெஷ் மஞ்சள் சமையல்.. எந்த அளவு ஆரோக்கியமானது?

Doctor Vikatan:சமீபகாலமாக நிறைய வீடியோக்களில், ரீல்ஸில் மஞ்சள் கிழங்கை வைத்துச் செய்கிற உணவுகளைப் பார்க்கிறோம். ஃப்ரெஷ்ஷான மஞ்சளை வைத்து ஊறுகாய் முதல் ஜூஸ் வரை ஏதேதோ தயாரிக்கிறார்கள். மஞ்சளை தூளாக உபய... மேலும் பார்க்க

Doctor Vikatan: தலைவலிக்கு எடுக்கும் மாத்திரையே தலைவலியைத் தூண்டுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில வருடங்களாக ஒற்றைத் தலைவலி இருக்கிறது. எப்போதெல்லாம் தலை வலிக்கிறதோ, அப்போதெல்லாம் பெயின் கில்லர் எடுத்துக்கொண்டால்தான் வலி குறையும். இப்போது சில நாள்களாகமாத்திரை எடுத்... மேலும் பார்க்க