செய்திகள் :

12,000 பேர் பணிநீக்கம்! திறன் குறைபாடு காரணமா? - டிசிஎஸ் விளக்கம்

post image

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே தொழில்நுட்ப வளர்ச்சி குறிப்பாக செய்யறிவு தொழில்நுட்பம் வளர்ந்துவரும் நிலையில் நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனம் இவ்வாறு அறிவித்துள்ளது குறிப்பாக ஐடி ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் தொழில்நுட்ப ஊழியர் சங்கம், மத்திய தொழிலாளர் அமைச்சகத்திடம் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளது.

இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு நேர்காணலில் பேசும்போது,

"நிறுவனத்தின் இந்த முடிவினால் உலகம் முழுவதும் உள்ள பணியாளர்களில் 2% பேரை பாதிக்கும். இதற்கு செய்யறிவு காரணம் அல்ல. செய்யறிவு, சுமார் 20 சதவீத உற்பத்தித்திறன் ஆதாயங்களை வழங்குகிறது. ஆனால் பணி நீக்கத்திற்கு அது காரணமல்ல. திறன்கள் பொருத்தமில்லாத சில சூழ்நிலைகளில் சிலரை பணியமர்த்த முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்த பணிநீக்கம் உடனடியாக செயல்படுத்தப்படாது. 2026 ஆண்டு முழுவதும் படிப்படியாக நடைபெறும். முதலில் பணிநீக்கம் செய்யப்படவுள்ளவர்களிடம் பேசுவோம். அவர்களுக்கு கண்டிப்பாக ஒரு வாய்ப்பை வழங்குவோம். தொடர்ந்து வாய்ப்புகளை வழங்க முடியாத சூழ்நிலையில் நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்வோம்.

பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு தேவையான உதவிகள் செய்வதை நிறுவனம் உறுதி செய்கிறது. அதாவது அறிவிப்பு காலம்(நோட்டீஸ் பீரியடு), அதற்கான ஊதியம், பணிநீக்க கூடுதல் பலன்கள், காப்பீட்டுத் தொகை நீட்டிப்பு, வேறு நிறுவனங்களில் பணியமர்த்த உதவி மற்றும் ஆலோசனை சேவைகள் வழங்கப்படும்' என்று கூறினார்.

TCS says that Artificial Intelligence (AI) is not the main cause for 12,000 employees layoffs

இதையும் படிக்க | நேருவை குறை சொல்லாதீர்கள்; மோடி என்ன கற்றுக்கொண்டார்? - கனிமொழி

‘பிரளய்’ ஏவுகணை சோதனை வெற்றி

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனுடயை ‘பிரளய்’ ஏவுகணையின் இரு சோதனைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.இந்த ஏவுகணை 500 ... மேலும் பார்க்க

1962-க்குப் பிறகு சீனா ஒரு அங்குலம் நிலத்தில் கூட ஊடுருவவில்லை- அமைச்சா் ரிஜிஜு

கடந்த 1962-ஆம் ஆண்டு நிகழ்ந்த போருக்குப் பிறகு சீனா, இந்திய நிலப்பரப்பில் ஒரு அங்குலம் கூட ஊடுருவவில்லை என்று மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.மக்களவையில் ஆபரேஷன... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: ஆக. 25-இல் அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை

இந்தியா-அமெரிக்கா இடையேயான வா்த்தக ஒப்பந்தம் குறித்த அடுத்த சுற்றுப் பேச்சுவாா்த்தைக்காக அமெரிக்க குழுவினா் ஆகஸ்ட் 25-ஆம் தேதி இந்தியா வரவுள்ளனா் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவ... மேலும் பார்க்க

கன்னியாஸ்திரீகள் கைது: சத்தீஸ்கா் முதல்வரின் மதமாற்றம் குற்றச்சாட்டுக்கு கேரள பாஜக மறுப்பு

பாஜக ஆளும் சத்தீஸ்கரில் கேரளத்தைச் சோ்ந்த 2 கத்தோலிக்க கன்னியாஸ்திரீகள் மீதான கைது நடவடிக்கையை நியாயப்படுத்தி, அந்த மாநில முதல்வா் விஷ்ணு தேவ் சாய் சுமத்திய கடத்தல் மற்றும் மதமாற்றம் குற்றச்சாட்டுகளை... மேலும் பார்க்க

செஸ், கூடுதல் வரியாக ரூ.5.90 லட்சம் கோடி வசூல்: மத்திய அரசு திட்டம்

நிகழ் நிதியாண்டில் செஸ் மற்றும் கூடுதல் வரி மூலம், ரூ.5.90 லட்சம் கோடி வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செ... மேலும் பார்க்க

உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் இந்தியா 2-ஆம் இடம்! அமெரிக்கா முதலிடம்

உலக அளவில் கல்வித்தரத்தை அளவிடும் ‘டைம்ஸ்’ உயா் கல்வி அமைப்பின் தரவரிசையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது சிறந்த கல்வி நிறுவனங்களைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கவுள்ளது.மத்திய அரசின... மேலும் பார்க்க