செய்திகள் :

கடைசி டெஸ்ட்டில் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும்: ஸ்டுவர்ட் பிராட்

post image

இந்தியாவுக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஜூலை 31) ஓவலில் தொடங்குகிறது.

ஆர்ச்சருக்கு ஓய்வளியுங்கள்

தொடரை வெல்வதற்கான முக்கியமான போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது குறித்து அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும். அவருக்கு ஓய்வு அளிக்கப்படாவிட்டால், அவரை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து அணியில் பார்க்க முடியாது. கடைசி டெஸ்ட் போட்டியில் கஸ் அட்கின்சன் விளையாடலாம் என நினைக்கிறேன். அவருக்கு எந்தவித பணிச்சுமையும் இருப்பதாக தெரியவில்லை. மேலும், வலுவான எதிரணியுடன் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் விளையாடியதில்லை என்றார்.

காயம் காரணமாக 4 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமலிருந்த ஜோஃப்ரா ஆர்ச்சர், லார்ட்ஸ் டெஸ்ட்டின் மூலம் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கினார். லார்ஸ்ட் டெஸ்ட்டில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜோஃப்ரா ஆர்ச்சர், மான்செஸ்டர் டெஸ்ட்டில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பிறகு, வருகிற நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. ஆஷஸ் தொடரை கருத்தில்கொண்டு, ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆஸி. ஆதிக்கம்..! சொந்த மண்ணில் மே.இ.தீவுகள் அணிக்கு தொடரும் சோகம்..!

Stuart Broad has said that fast bowler Jofra Archer should be rested for the final Test against India.

5-ஆவது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா? இல்லையா? - பயிற்சியாளர் பதில்

5-ஆவது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா? இல்லையா? என்பதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் பதில் அளித்துள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்ய கடைசி டெஸ்ட்டில் வெற்... மேலும் பார்க்க

கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் விலகல்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து சந்திரகாந்த் பண்டித் விலகியுள்ளார்கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு முன்பாக சந்திரகாந்த் பண்டித், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின... மேலும் பார்க்க

மறைப்பதற்கு ஒன்றுமில்லை, ஏமாற்றமடைந்தேன்; கடைசி டெஸ்ட்டில் இடம்பெறாதது குறித்து நாதன் லயன்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இடம்பெறாதது ஏமாற்றமளித்ததாக ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்... மேலும் பார்க்க

தொட்டாற்சிணுங்கி கம்பீர்..! மோதலில் ஈடுபட்ட கம்பீர் - ஓவல் திடலின் பிட்ச் மேற்பார்வையாளர்!

இந்திய அணியின் பயிற்சியாளர் ஓவல் திடலின் பிட்ச் மேற்பார்வையாளருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டது பேசுபொருளாகியுள்ளது. ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது... மேலும் பார்க்க

டாம் லாதம் விலகல்; டெஸ்ட் அணியின் கேப்டனாக மிட்செல் சாண்ட்னர் நியமனம்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான கேப்டனாக மிட்செல் சாண்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது... மேலும் பார்க்க

ஐசிசி தரவரிசை: ஸ்மிருதி மந்தனாவை முந்தி இங்கிலாந்து கேப்டன் முதலிடம்!

மகளிர் கிரிக்கெட் ஐசிசி தரவரிசையில் ந்தியாவின் ஸ்மிருதி மந்தனாவை முந்தி, இங்கிலாந்து கேப்டன் நாட் ஷிவர் பிரன்ட் முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய இந்திய மகளிரண... மேலும் பார்க்க