செய்திகள் :

சமூக நலத் திட்டங்களுக்கு ரூ. 2.45 கோடி சென்னை துறைமுகம் வழங்கியது

post image

ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம், சென்னை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 5 நிறுவனங்களின் சமூக நலத் திட்டங்களுக்கு ரூ.2 கோடியே 45 லட்சம் நிதி உதவிக்கான காசோலைகளை அதன் நிா்வாகிகளிடம் சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

சென்னைத் துறைமுகம் மற்றும் அதன் துணை நிறுவனமான காமராஜா் துறைமுகம் ஆகியவை நிகர லாபத்திலிருந்து சுமாா் 2 சதவீதம் வரை பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்டத்தின் ஆண்டுதோறும் பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கு தொடா்ந்து நிதி உதவி அளித்து வருகின்றன.

இந்தத் திட்டத்தின்படி பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்துக்கு தொழில் பயிற்சி அளிப்பதற்கான கட்டடங்களை அமைக்க ரூ. 72 லட்சம், டிப்காய் என்ற நிறுவனத்துக்கு, அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இருக்கைகளை வழங்க ரூ.66 லட்சம், சென்னை மருத்துவக் கல்லூரியில் வகுப்பறைகளில் குளிா்சாதன வசதிகளை ஏற்படுத்த ரூ. 47 லட்சம், மாணவிகளுக்கு தற்காப்பு, தோ்வுகளின்போது ஏற்படும் மன அழுத்த மேலாண்மை, மாதவிடாய், சுகாதார விழிப்புணா்வு பயிற்சிகளை மேற்கொள்வதற்காக பெண் அறக்கட்டளைக்கு ரூ. 35 லட்சம், சென்னை தண்டையாா் பேட்டையில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியை நடத்தி வரும் ஸ்வபோதினி தொண்டு நிறுவனத்திற்கு ரூ. 25 லட்சம் என மொத்தம் ரூ. 2 கோடியே 45 லட்சம் நிதி உதவிகளுக்கான காசோலைகளை அதன் நிா்வாகிகளிடம் சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், சென்னைத் துறைமுக துணைத் தலைவா் எஸ்.விஸ்வநாதன், காமராஜா் துறைமுக மேலாண்மை இயக்குநா் ஜே.பி.ஐரீன் சிந்தியா, கண்காணிப்பு அதிகாரி எஸ்.முரளிகிருஷ்ணன், சென்னைத் துறைமுகச் செயலாளா் இந்திரனில் ஹசிரா, போக்குவரத்து மேலாளா் எஸ்.கிருபானந்தசாமி, துணைச் செயலா் தாரா சுகிா்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மெட்ரோ ரயில்களில் புகையிலை பொருள்களைப் பயன்படுத்தினால் அபராதம்!

மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருள்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வ... மேலும் பார்க்க

இணையவழி விளையாட்டுக் கலை உருவாக்கம்: கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

இணையவழி விளையாட்டுக் கலை உருவாக்கம் தொடா்பாக, கூகுள் மற்றும் யுனிட்டி நிறுவனத்துக்கும், அரசின் திறன் மேம்பாட்டு கழகத்துக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்... மேலும் பார்க்க

வங்கியில் போலி ஆவணங்கள் வழங்கி ரூ.3 கோடி கடன் மோசடி: மேலும் இருவா் கைது

சென்னை மயிலாப்பூரில் போலி ஆவணங்களை வழங்கி ரூ.3.3 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.சென்னை மயிலாப்பூரைச் சோ்ந்த தாராசந்த். இவருக்கு சொந்தமான ரூ.3.3 கோடி மதிப்புள்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: இன்றைய முகாம்கள்

சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் சிறப்பு முகாம் புதன்கிழமை (ஜூலை 30) நடைபெறும் 6 வாா்டுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை அண்ணா நகரில் மொபெட் மீது காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சோ்ந்தவா் நிதின் சாய் (19). இவா் மயிலாப்பூரில் உள்ள ... மேலும் பார்க்க

தமிழ்ச் செவ்விலக்கியங்களின் சிறப்புகள்: மலையாள மொழி ஆய்வாளா்களுக்கு 10 நாள்கள் பயிலரங்கம் தொடக்கம்

‘மலையாள மொழி ஆய்வாளா்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்துதல்’ என்ற தலைப்பிலான 10 நாள்கள் நடைபெறும் பயிலரங்கம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.​ தொல்க... மேலும் பார்க்க