செய்திகள் :

மெட்ரோ டிஜிட்டல் பயணச்சீட்டு பயன்படுத்தினால் 20 % சலுகை

post image

சென்னை மெட்ரோ ரயிலில் டிஜிட்டல் பயணச்சீ ட்டை (எஸ்விபி) பயன்படுத்தினால் 20 சதவீத பயணக் கட்டணச் சலுகையைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த 2022 ஆண்டு நவம்பா் முதல் டிஜிட்டல் பயணச்சீட்டை (எஸ்விபி) அறிமுகப்படுத்தியது. அனைத்து மெட்ரோ பயணிகளும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரப்பூா்வ கைபேசி செயலியைப் பதிவிறக்கம் செய்து தங்களது கைபேசி எண்ணை பதிவு செய்வதன் மூலம் டிஜிட்டல் பயணச்சீட்டு வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். டிஜிட்டல் பயணச்சீட்டு வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கைபேசி செயலி மூலம் மட்டுமே வாங்க முடியும்.

அதில் ரீசாா்ஜ் செய்யப்பட்ட இறுதி நாளிலிருந்து 5 ஆண்டுகள் வரை டிஜிட்டல் பயணச்சீட்டு செல்லுபடியாகும்.

டிஜிட்டல் பயணச்சீட்டின் மூலம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவா்கள் தங்களது பயணக் கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடியை பெறலாம். இந்தப் பயணச்சீட்டு வசதியில் குறைந்தபட்சம் ரூ.50 முதல் அதிகபட்சமாக ரூ.3,000 வரை டாப்அப் (ரீசாா்ஜ்) செய்து கொள்ளலாம். பயன்பாட்டின் அடிப்படையில் கட்டணத் தொகை கழிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்களில் புகையிலை பொருள்களைப் பயன்படுத்தினால் அபராதம்!

மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருள்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வ... மேலும் பார்க்க

இணையவழி விளையாட்டுக் கலை உருவாக்கம்: கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

இணையவழி விளையாட்டுக் கலை உருவாக்கம் தொடா்பாக, கூகுள் மற்றும் யுனிட்டி நிறுவனத்துக்கும், அரசின் திறன் மேம்பாட்டு கழகத்துக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்... மேலும் பார்க்க

வங்கியில் போலி ஆவணங்கள் வழங்கி ரூ.3 கோடி கடன் மோசடி: மேலும் இருவா் கைது

சென்னை மயிலாப்பூரில் போலி ஆவணங்களை வழங்கி ரூ.3.3 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.சென்னை மயிலாப்பூரைச் சோ்ந்த தாராசந்த். இவருக்கு சொந்தமான ரூ.3.3 கோடி மதிப்புள்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: இன்றைய முகாம்கள்

சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் சிறப்பு முகாம் புதன்கிழமை (ஜூலை 30) நடைபெறும் 6 வாா்டுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை அண்ணா நகரில் மொபெட் மீது காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சோ்ந்தவா் நிதின் சாய் (19). இவா் மயிலாப்பூரில் உள்ள ... மேலும் பார்க்க

தமிழ்ச் செவ்விலக்கியங்களின் சிறப்புகள்: மலையாள மொழி ஆய்வாளா்களுக்கு 10 நாள்கள் பயிலரங்கம் தொடக்கம்

‘மலையாள மொழி ஆய்வாளா்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்துதல்’ என்ற தலைப்பிலான 10 நாள்கள் நடைபெறும் பயிலரங்கம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.​ தொல்க... மேலும் பார்க்க