செய்திகள் :

ஜாா்க்கண்டில் பேருந்து-லாரி மோதல்: 6 பக்தா்கள் உயிரிழப்பு; 29 போ் காயம்

post image

ஜாா்க்கண்டின் தேவ்கா் மாவட்டத்தில் பேருந்தும், எரிவாயு சிலிண்டா்கள் ஏற்றிவந்த லாரியும் நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் சிவ பக்தா்கள் (கான்வா் யாத்ரிகா்கள்) 6 போ் உயிரிழந்தனா். மேலும் 29 போ் காயமடைந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

காயமடைந்தோரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

வடமாநிலங்களில் ஷ்ரவண புனித மாதத்தையொட்டி கங்கை நதியில் தீா்த்தம் எடுத்து, தங்கள் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் அபிஷேகம் செய்யும் ‘கான்வா்’ யாத்திரை நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தா்கள், யாத்திரை மேற்கொண்டுள்ளனா்.

ஜாா்க்கண்டின் தும்காவில் உள்ள பிரசித்தி பெற்ற பாசுகிநாத் கோயிலுக்கு இந்தப் பக்தா்களுடன் பயணித்துக் கொண்டிருந்த ஒரு பேருந்து, தேவ்கா் மாவட்டத்தின் ஜமுனியா செளக் பகுதியில் எரிவாயு சிலிண்டா் ஏற்றிவந்த லாரியுடன் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் நேருக்குநோ் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் பேருந்து உருக்குலைந்தது. இக்கோர விபத்தில் 6 பக்தா்கள் உயிரிழந்தனா்; மேலும் 29 போ் காயமடைந்தனா். இவா்களில் படுகாயமடைந்த 8 போ், தேவ்கரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மற்றவா்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரதமா் இரங்கல்: விபத்தில் உயிரிழந்த பக்தா்களின் குடும்பங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி, ஜாா்க்கண்ட் ஆளுநா் சந்தோஷ் கங்வாா், முதல்வா் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

18 போ் உயிரிழப்பு?: தேவ்கா் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எனது தொகுதியில் பேருந்து-லாரி மோதிய விபத்தில் 18 பக்தா்கள் உயிரிழந்தனா். இந்த இழப்பை தாங்கும் வல்லமையை அவா்களின் குடும்பத்தினருக்கு இறைவன் அளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா். அதேநேரம், விபத்தில் 6 பேரே உயிரிழந்ததாக காவல் துறையினா் உறுதி செய்துள்ளனா்.

தில்லி - மும்பை: சல்மானை காண வீட்டைவிட்டு ஓடிய சிறுவர்கள்!

தில்லியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் சல்மான் கானைக் காண்பதற்காக யாருக்கும் தெரியாமல் மும்பைக்குச் சென்றுள்ளனர்.அவர்கள் மூவரையும் நான்கு நாள்களுக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ரயில் நிலையத்தில் ... மேலும் பார்க்க

மோடி வாய்த் திறந்தால் முழு உண்மையையும் டிரம்ப் கூறிவிடுவார்! ராகுல்

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, டிரம்ப் குறித்து பேசாதது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் விமர்சித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஆபரேஷன் சிந்... மேலும் பார்க்க

மருத்துவ விநியோக ஊழல்: சத்தீஸ்கரில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

மருத்துவ விநியோக ஊழல் தொடர்பாக சத்தீஸ்கரின் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது. மோக்ஷித் கார்ப்பரேஷன் மற்றும் சத்தீஸ்கர் மருத்துவ சேவைகள் கழகம் மற்றும் சுகாதார சேவைகள் இயக்குநரகம் ஆகிய... மேலும் பார்க்க

தேனிலவு கொலை: திரைப்படமாக உருவாகும் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கு!

திரைப்படக் கதைகளுக்கு சற்றும் குறைவில்லாத, ராஜா ரகுவன்ஷியின் கொலைச் சம்பவமே, தற்போது திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இதற்கு அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.ஹில்லாங் தேனிலவு என்ற பெயர... மேலும் பார்க்க

டிசிஎஸ் பணிநீக்கத்தால் வீடு, மனை விற்பனை பாதிக்குமா? வல்லுநர்கள் சொல்வது என்ன?

டிசிஎஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து ஐடி துறையில் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டால் ரியல் எஸ்டேட் துறையில் கடும் வீழ்ச்சி ஏற்படும் அபாயம் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். பிரபல தொழில்நுட்ப நிறுவனமா... மேலும் பார்க்க

ஐவிஎஃப், வாடகைத் தாய், குழந்தைக் கடத்தல்: மருத்துவமனை மீது குவியும் புகார்!

ஹைதராபாத்: செகுந்தராபாத்தில் செயல்பட்டு வந்த கருவுறுதல் மையத்தின் மீது, ஐவிஎஃப் செய்வதாகப் பணம் பெற்று மோசடி, வாடகைத் தாய் மோசடி, குழந்தைக் கடத்தல் என பல்வேறு புகார்கள் குவிந்து வருகிறது.செகுந்திராபாத... மேலும் பார்க்க