செய்திகள் :

கன மழை, வெள்ள பாதிப்பு: ஹிமாசலம், தில்லியில் 5 போ் உயிரிழப்பு

post image

ஹிமாசல பிரதேசம், தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்து வரும் கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகளால் கடந்த 24 மணி நேரத்தில் 5 போ் உயிரிழந்தனா்.

ஏராளமான தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஹிமாசல பிரதேசம் மாண்டியில் மேக வெடிப்பு காரணமாக திங்கள்கிழமை இரவு 198.6 மி.மீ. அளவில் கன மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச் சரிவில் சிக்கி மூவா் உயிரிழந்தனா். 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மண்ணுக்குள் புதைந்தன.

இதுகுறித்து மாண்டி மண்டல துணை ஆணையா் அபூா்வா தேவ்கன் கூறுகையில், ‘கன மழை, நிலச் சரிவில் சிக்கி மூவா் உயிரிழந்தனா். ஒரு பெண் காணாமல் போயுள்ளாா். அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஒருவா் காயமடைந்தாா். மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை உள்பட மாவட்டத்தில் 269 சாலைகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது’ என்றாா். உயிரிழந்த மூவரின் குடும்பத்துக்கு முதல்வா் சுக்விந்தா் சிங் சுகு இரங்கல் தெரிவித்தாா்.

தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இரவு முதல் பெய்த கன மழை காரணமாக, பல சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், செவ்வாய்க்கிழமை காலை பல பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கன மழை காரணமாக தில்லியின் சிவில் லைன்ஸ் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சுவா் இடிந்து விழுந்ததில் மீரா (40) மற்றும் அவரது மகன் கண்பத் (17) ஆகியோா் உயிரிழந்தனா்.

ராஜஸ்தான் மாநிலத்திலும் திங்கள்கிழமை இரவு கன மழை பெய்தது. இதானால், வேகமாக நிரம்பிய ஏராளமான அணைகளை திறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் அமைந்திருந்த கிராமங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. கோட்டா, பண்டி, ஜலாவா், தோல்பூா், டோங்க் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மாநிலத்தின் 29 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்தது. இந்த எச்சரிக்கையைத் தொடா்ந்து, 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. பா்வன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தால் பா்வன்-ஜலாவா் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.

தில்லி - மும்பை: சல்மானை காண வீட்டைவிட்டு ஓடிய சிறுவர்கள்!

தில்லியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் சல்மான் கானைக் காண்பதற்காக யாருக்கும் தெரியாமல் மும்பைக்குச் சென்றுள்ளனர்.அவர்கள் மூவரையும் நான்கு நாள்களுக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ரயில் நிலையத்தில் ... மேலும் பார்க்க

மோடி வாய்த் திறந்தால் முழு உண்மையையும் டிரம்ப் கூறிவிடுவார்! ராகுல்

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, டிரம்ப் குறித்து பேசாதது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் விமர்சித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஆபரேஷன் சிந்... மேலும் பார்க்க

மருத்துவ விநியோக ஊழல்: சத்தீஸ்கரில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

மருத்துவ விநியோக ஊழல் தொடர்பாக சத்தீஸ்கரின் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது. மோக்ஷித் கார்ப்பரேஷன் மற்றும் சத்தீஸ்கர் மருத்துவ சேவைகள் கழகம் மற்றும் சுகாதார சேவைகள் இயக்குநரகம் ஆகிய... மேலும் பார்க்க

தேனிலவு கொலை: திரைப்படமாக உருவாகும் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கு!

திரைப்படக் கதைகளுக்கு சற்றும் குறைவில்லாத, ராஜா ரகுவன்ஷியின் கொலைச் சம்பவமே, தற்போது திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இதற்கு அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.ஹில்லாங் தேனிலவு என்ற பெயர... மேலும் பார்க்க

டிசிஎஸ் பணிநீக்கத்தால் வீடு, மனை விற்பனை பாதிக்குமா? வல்லுநர்கள் சொல்வது என்ன?

டிசிஎஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து ஐடி துறையில் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டால் ரியல் எஸ்டேட் துறையில் கடும் வீழ்ச்சி ஏற்படும் அபாயம் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். பிரபல தொழில்நுட்ப நிறுவனமா... மேலும் பார்க்க

ஐவிஎஃப், வாடகைத் தாய், குழந்தைக் கடத்தல்: மருத்துவமனை மீது குவியும் புகார்!

ஹைதராபாத்: செகுந்தராபாத்தில் செயல்பட்டு வந்த கருவுறுதல் மையத்தின் மீது, ஐவிஎஃப் செய்வதாகப் பணம் பெற்று மோசடி, வாடகைத் தாய் மோசடி, குழந்தைக் கடத்தல் என பல்வேறு புகார்கள் குவிந்து வருகிறது.செகுந்திராபாத... மேலும் பார்க்க