செய்திகள் :

அமெரிக்காவுக்கு அறிதிறன்பேசி ஏற்றுமதி சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம்

post image

அமெரிக்காவுக்கு அறிதிறன்பேசி (ஸ்மாா்ட்போன்) ஏற்றுமதி செய்வதில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல்முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இது தொடா்பாக கேனலிஸ் ஆய்வு நிறுவனம் மேலும் கூறியிருப்பதாவது:

நடப்பு ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் அமெரிக்காவின் ஒட்டுமொத்த அறிதிறன்பேசி இறக்குமதி 1 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் இந்தியாவில் இருந்துதான் அதிக எண்ணிக்கையில் இறக்குமதி நடந்துள்ளது. இதன்மூலம் அமெரிக்காவுக்கான அறிதிறன்பேசி ஏற்றுமதியில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்கா-சீனா இடையிலான வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் அமெரிக்காவுக்கான சீனாவின் அறிதிறன்பேசி ஏற்றுமதி 25 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு முந்தைய மூன்று மாதங்களில் ஏற்றுமதி 61 சதவீதமாக இருந்தது.

சீன ஏற்றுமதி குறைந்த நிலையில், அந்த ஏற்றுமதி வாய்ப்பில் இந்தியா இடம்பிடித்துவிட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அறிதிறன்பேசிகளின் ஒட்டுமொத்த ஏற்றுமதி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 240 சதவீதம் உயா்ந்துள்ளது. அமெரிக்கா இறக்குமதி செய்யும் அறிதிறன்பேசிகளில் 44 சதவீதம் இந்தியாவில் இருந்துதான் செல்கிறது. இது முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 25 சதவீதமாக இருந்தது.

அமெரிக்கா - சீனா இடையே வா்த்தக போா் ஏற்பட்டதால் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை தனது தயாரிப்பு மையமாக மாற்றத் தொடங்கியது இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்க முக்கியக் காரணமாகும்.

சாம்சங் நிறுவன தயாரிப்புகளின் ஏற்றுமதி 38 சதவீதம் உயா்ந்து 83 லட்சமாக உள்ளது. மோட்டோரோலா தயாரிப்புகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாவது 2 சதவீதம் அதிகரித்துள்ளது. கூகுள், டிசிஎல் தயாரிப்புகளின் ஏற்றுமதியும் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளது.

தில்லி - மும்பை: சல்மானை காண வீட்டைவிட்டு ஓடிய சிறுவர்கள்!

தில்லியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் சல்மான் கானைக் காண்பதற்காக யாருக்கும் தெரியாமல் மும்பைக்குச் சென்றுள்ளனர்.அவர்கள் மூவரையும் நான்கு நாள்களுக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ரயில் நிலையத்தில் ... மேலும் பார்க்க

மோடி வாய்த் திறந்தால் முழு உண்மையையும் டிரம்ப் கூறிவிடுவார்! ராகுல்

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, டிரம்ப் குறித்து பேசாதது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் விமர்சித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஆபரேஷன் சிந்... மேலும் பார்க்க

மருத்துவ விநியோக ஊழல்: சத்தீஸ்கரில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

மருத்துவ விநியோக ஊழல் தொடர்பாக சத்தீஸ்கரின் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது. மோக்ஷித் கார்ப்பரேஷன் மற்றும் சத்தீஸ்கர் மருத்துவ சேவைகள் கழகம் மற்றும் சுகாதார சேவைகள் இயக்குநரகம் ஆகிய... மேலும் பார்க்க

தேனிலவு கொலை: திரைப்படமாக உருவாகும் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கு!

திரைப்படக் கதைகளுக்கு சற்றும் குறைவில்லாத, ராஜா ரகுவன்ஷியின் கொலைச் சம்பவமே, தற்போது திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இதற்கு அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.ஹில்லாங் தேனிலவு என்ற பெயர... மேலும் பார்க்க

டிசிஎஸ் பணிநீக்கத்தால் வீடு, மனை விற்பனை பாதிக்குமா? வல்லுநர்கள் சொல்வது என்ன?

டிசிஎஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து ஐடி துறையில் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டால் ரியல் எஸ்டேட் துறையில் கடும் வீழ்ச்சி ஏற்படும் அபாயம் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். பிரபல தொழில்நுட்ப நிறுவனமா... மேலும் பார்க்க

ஐவிஎஃப், வாடகைத் தாய், குழந்தைக் கடத்தல்: மருத்துவமனை மீது குவியும் புகார்!

ஹைதராபாத்: செகுந்தராபாத்தில் செயல்பட்டு வந்த கருவுறுதல் மையத்தின் மீது, ஐவிஎஃப் செய்வதாகப் பணம் பெற்று மோசடி, வாடகைத் தாய் மோசடி, குழந்தைக் கடத்தல் என பல்வேறு புகார்கள் குவிந்து வருகிறது.செகுந்திராபாத... மேலும் பார்க்க