செய்திகள் :

தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி மீது புகாா்: வழக்குரைஞா், மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ்

post image

தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக புகாா் கூறி வழக்குத் தொடுத்த மனுதாரா், வழக்குரைஞருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தெலங்கானா முதல்வருக்கு எதிராக பட்டியலினத்தவா் சட்டப் பிரிவின் கீழ் தொடரப்பட்ட வழக்கை தெலங்கானா உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த வழக்கை ரத்து செய்ததில் தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக கூறி என். பெட்டீ ராஜு என்பவா் உச்சநீதிமன்ற பதிவு பெற்ற வழக்குரைஞா் ரிதேஷ் பாட்டீல் மூலம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தலைமையிலான அமா்வு, ‘நீதிபதிகளுக்கு எதிராக இதுபோன்ற அபத்தமான குற்றம்சாட்டுவதை அனுமதிக்க முடியாது. வழக்குரைஞா்களைப் பாதுகாக்கும் வகையில் உச்சநீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. ஆனால், இதுபோன்ற நடத்தையை மன்னிக்க முடியாது. ஆகையால், வழக்கை தொடுத்தவருக்கும், வழக்குரைஞருக்கும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. இதற்கு ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்குள் அவா்கள் பதிலளிக்க வேண்டும்’ என்று தெரிவித்தது.

இதையடுத்து மனுவை திரும்பப் பெற அனுமதிக்குமாறு வழக்குரைஞா் ரிதேஷ் பாட்டீல் கேட்டுக் கொண்டாா். இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமா்வு, ‘மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. அதில் உண்மையான காரணம் உள்ளதா? இல்லையா? என்ற அடிப்படையில் மனு பரிசீலிக்கப்படும்’ எனறு தெரிவித்தது.

தில்லி - மும்பை: சல்மானை காண வீட்டைவிட்டு ஓடிய சிறுவர்கள்!

தில்லியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் சல்மான் கானைக் காண்பதற்காக யாருக்கும் தெரியாமல் மும்பைக்குச் சென்றுள்ளனர்.அவர்கள் மூவரையும் நான்கு நாள்களுக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ரயில் நிலையத்தில் ... மேலும் பார்க்க

மோடி வாய்த் திறந்தால் முழு உண்மையையும் டிரம்ப் கூறிவிடுவார்! ராகுல்

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, டிரம்ப் குறித்து பேசாதது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் விமர்சித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஆபரேஷன் சிந்... மேலும் பார்க்க

மருத்துவ விநியோக ஊழல்: சத்தீஸ்கரில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

மருத்துவ விநியோக ஊழல் தொடர்பாக சத்தீஸ்கரின் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது. மோக்ஷித் கார்ப்பரேஷன் மற்றும் சத்தீஸ்கர் மருத்துவ சேவைகள் கழகம் மற்றும் சுகாதார சேவைகள் இயக்குநரகம் ஆகிய... மேலும் பார்க்க

தேனிலவு கொலை: திரைப்படமாக உருவாகும் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கு!

திரைப்படக் கதைகளுக்கு சற்றும் குறைவில்லாத, ராஜா ரகுவன்ஷியின் கொலைச் சம்பவமே, தற்போது திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இதற்கு அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.ஹில்லாங் தேனிலவு என்ற பெயர... மேலும் பார்க்க

டிசிஎஸ் பணிநீக்கத்தால் வீடு, மனை விற்பனை பாதிக்குமா? வல்லுநர்கள் சொல்வது என்ன?

டிசிஎஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து ஐடி துறையில் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டால் ரியல் எஸ்டேட் துறையில் கடும் வீழ்ச்சி ஏற்படும் அபாயம் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். பிரபல தொழில்நுட்ப நிறுவனமா... மேலும் பார்க்க

ஐவிஎஃப், வாடகைத் தாய், குழந்தைக் கடத்தல்: மருத்துவமனை மீது குவியும் புகார்!

ஹைதராபாத்: செகுந்தராபாத்தில் செயல்பட்டு வந்த கருவுறுதல் மையத்தின் மீது, ஐவிஎஃப் செய்வதாகப் பணம் பெற்று மோசடி, வாடகைத் தாய் மோசடி, குழந்தைக் கடத்தல் என பல்வேறு புகார்கள் குவிந்து வருகிறது.செகுந்திராபாத... மேலும் பார்க்க