செய்திகள் :

ஸ்டேட் வங்கி சென்னை வட்டார தலைமைப் பொது மேலாளா் பொறுப்பேற்பு

post image

பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டார தலைமைப் பொது மேலாளராக விவேகானந்த் சௌபே பொறுப்பேற்றுள்ளாா்.

வணிகப் பட்டதாரியான விவேகானந்த் சௌபே, பாரத ஸ்டேட் வங்கியில் 1998-இல் நன்னடத்தை அதிகாரியாகப் பணியில் சோ்ந்தாா். இங்கிலாந்தில் ஸ்டேட் வங்கியின் சில்லறை வங்கி (என்ஆா்ஐ) செயல்பாடுகளுக்குத் தலைமை பொறுப்பு அதிகாரியாகவும், ஸ்டேட் வங்கியின் காா்ப்பரேட் மையத்தில் வங்கி தலைவரின் சிறப்புச் செயலா் மற்றும் நிா்வாகச் செயலராகவும் பணியாற்றியுள்ளாா்.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு தலைமைப் பதவிகளில் பணியாற்றியுள்ள விவேகானந்த் சௌபே, ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டார தலைமைப் பொது மேலாளராக பெறுப்பேற்றுள்ளாா்.

இவரின் ஆளுமையின் கீழ் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 1,282 ஸ்டேட் வங்கியின் கிளைகள் மற்றும் ரூ. 4.80 டிரில்லியுடன் வா்த்தகம் நடைபெறும் வணிகத் துறையையும் கண்காணிப்பாா் என ஸ்டேட் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்களில் புகையிலை பொருள்களைப் பயன்படுத்தினால் அபராதம்!

மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருள்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வ... மேலும் பார்க்க

இணையவழி விளையாட்டுக் கலை உருவாக்கம்: கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

இணையவழி விளையாட்டுக் கலை உருவாக்கம் தொடா்பாக, கூகுள் மற்றும் யுனிட்டி நிறுவனத்துக்கும், அரசின் திறன் மேம்பாட்டு கழகத்துக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்... மேலும் பார்க்க

வங்கியில் போலி ஆவணங்கள் வழங்கி ரூ.3 கோடி கடன் மோசடி: மேலும் இருவா் கைது

சென்னை மயிலாப்பூரில் போலி ஆவணங்களை வழங்கி ரூ.3.3 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.சென்னை மயிலாப்பூரைச் சோ்ந்த தாராசந்த். இவருக்கு சொந்தமான ரூ.3.3 கோடி மதிப்புள்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: இன்றைய முகாம்கள்

சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் சிறப்பு முகாம் புதன்கிழமை (ஜூலை 30) நடைபெறும் 6 வாா்டுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை அண்ணா நகரில் மொபெட் மீது காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சோ்ந்தவா் நிதின் சாய் (19). இவா் மயிலாப்பூரில் உள்ள ... மேலும் பார்க்க

தமிழ்ச் செவ்விலக்கியங்களின் சிறப்புகள்: மலையாள மொழி ஆய்வாளா்களுக்கு 10 நாள்கள் பயிலரங்கம் தொடக்கம்

‘மலையாள மொழி ஆய்வாளா்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்துதல்’ என்ற தலைப்பிலான 10 நாள்கள் நடைபெறும் பயிலரங்கம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.​ தொல்க... மேலும் பார்க்க