செய்திகள் :

தினமும் கணவரை பொய் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தும் மனைவி - என்ன காரணம் கூறுகிறார் தெரியுமா?

post image

இங்கிலாந்தைச் சேர்ந்த டெபி என்ற பெண் தினமும் தனது கணவர் ஸ்டீவ் என்பவரை பொய் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தும் சம்பவம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஸ்டீவ் எதர்ச்சையாக ஒருமுறை, தான் உண்மையாக இருப்பதை நிரூபிக்க பொய் கண்டறியும் சோதனைக்கு தயார் என்று கூறியிருக்கிறார். ஸ்டீவ் சாதாரணமாக சொன்னதை, டெபி நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர் உடனடியாக ஒரு பொய் கண்டறியும் இயந்திரத்தை வாங்கி அதனை செயல்படுத்த முயற்சி செய்துள்ளார்.

Picture: Ken McKay

இதற்கு காரணம் என்ன?

தொலைதூர உறவு குறித்த பதற்றமும், கடந்த காலத்தில் அனுபவித்த வேதனையான அனுபவங்களும் இணைந்து டெபியை இவ்வாறு செய்ய தூண்டுவதாக அவர் கூறுகிறார். டெபியும் ஸ்டீவும் டேட்டிங் செய்ய தொடங்கியபோது, வெவ்வேறு நகரங்களில் வசித்திருக்கின்றனர்.

ஸ்டீவ் அவர்கள் உறவு உறுதியாவதற்கு முன், வேறு ஒரு பெண்ணுடன் சிறிது காலம் உறவில் இருந்ததாக டெபிக்கு தெரியவந்ததையடுத்து அவர் மீது சந்தேகம் கொள்ள தொடங்கியிருக்கிறார்.

அவர் ஸ்டீவின் வங்கி ஸ்டேட்மெண்ட், தொலைபேசி பதிவுகள் என அனைத்தையும் கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறார். ஒரு உள்ளாடை விளம்பரத்திற்கு ஸ்டீவ் கண் சிமிட்டினால் கூட, டெபி அவரை விசாரணை செய்வாராம்.

ஸ்டீவின் பொறுமையான மற்றும் அமைதியான அணுகுமுறை, இவர்களின் உறவை ஒன்றாக வைத்திருப்பதில் பெரும் பங்கு வகுத்திருக்கிறது. இருவரும் ஒருவரையொருவர் இயல்பாகவே நேசிக்க தொடங்கியுள்ளனர். டெபியும் மாற தொடங்கியிருக்கிறார்.

பொய் கண்டறியும் இயந்திரம், தினசரி பயன்பாட்டில் இருந்து, அரிதாக பயன்படுத்தப்படும் ஒரு கருவியாக மாறியது.

இது குறித்து டெபி கூறுகையில் ”பொறாமை எங்கள் உறவை கிட்டத்தட்ட அழித்துவிட்டது. ஆனால் எங்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது. பொய் கண்டறியும் இயந்திரம் கடந்த காலத்தில் இருந்திருக்கலாம், ஆனால் இனி அது எங்களின் எதிர்காலத்தை கட்டுப்படுத்தாது” என்று கூறியிருக்கிறார்.

சத்தீஷ்கர்: `விரும்பித்தான் சென்றோம்’ - பெண்கள் ; மதமாற்றம் செய்ய முயன்றதாக கன்னியாஸ்திரிகள் கைது

சத்தீஷ்கர் மாநிலம் துர்க் ரயில் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு கன்னியாஸ்திரிகள் மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாஸ்திரிகள் பிரீத்தி மற்றும் வந்தனா பிரான்சிஸ் மற்... மேலும் பார்க்க

கூகுள் மேப் போட்டு பயணம்; பாலத்தில் வேகமாக சென்ற கார், கடலுக்குள் விழுந்த சோகம்..

பொதுவாக வாகன ஓட்டிகள் தெரியாத ஒரு இடத்திற்கு செல்லும்போது கூகுள் மேப்பை பார்த்துக்கொண்டு செல்வது வழக்கம். ஆனால் சில நேரங்களில் இந்த கூகுள் மேப் தவறான வழியை காட்டிவிடுகிறது. இதனால் பல வாகனங்கள் குழி, ஆ... மேலும் பார்க்க

சஞ்சய் கபூரின் ரூ.30000 கோடி சொத்தில் கரிஷ்மா கபூர் குழந்தைகளுக்கு பங்கு கிடைக்குமா?

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த மாதம் 12-ம் தேதி அகால மரணம் அடைந்தார். அவர் லண்டனில் போலோ விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது வாயிக்குள் ஒரு த... மேலும் பார்க்க

மகாராஷ்டிராவில் பெண்களுக்கான Ladki Bahin திட்டத்தின் மூலம் ரூ.1500 வாங்கிய 14000 ஆண்கள்

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1500 வழங்கும் லட்கி பெஹின் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தேர்தல் நேரம் என்பதால் விண்ணப்பித்த அனைவரது வங்க... மேலும் பார்க்க

5 மாதங்களில் பிறந்த அபூர்வ குழந்தை; கின்னஸ் உலக சாதனையில் பதிவு - ஆச்சர்ய பின்னணி என்ன?

அமெரிக்காவின் அயோவா நகரில், 21 வாரங்கள் மட்டுமே வளர்ச்சி கண்ட ஒரு குழந்தை, தனது முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளது. இந்த குழந்தை, உலகின் மிக முன்கூட்டியே பிறந்த குழந்தையாக (World's Most Premature Baby) ... மேலும் பார்க்க

பொம்மையே வாழ்க்கை துணை... 4-வது பொம்மை குழந்தையை வரவேற்கும் இளைஞர் - பின்னணி என்ன?

கொலம்பியாவைச் சேர்ந்த கிறிஸ்டியன் மொன்டெனேக்ரோ, தனிமையில் இருந்து விடுபட, 2023 ஆம் ஆண்டு நடாலியா என்ற துணிப்பொம்மையுடன் உறவைத் தொடங்கினார். இவர்களுக்கு மூன்று பொம்மைக் குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவிக... மேலும் பார்க்க