செய்திகள் :

கூகுள் மேப் போட்டு பயணம்; பாலத்தில் வேகமாக சென்ற கார், கடலுக்குள் விழுந்த சோகம்..

post image

பொதுவாக வாகன ஓட்டிகள் தெரியாத ஒரு இடத்திற்கு செல்லும்போது கூகுள் மேப்பை பார்த்துக்கொண்டு செல்வது வழக்கம். ஆனால் சில நேரங்களில் இந்த கூகுள் மேப் தவறான வழியை காட்டிவிடுகிறது. இதனால் பல வாகனங்கள் குழி, ஆறுகளில் விழுந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் உத்தரப்பிரதேசத்தில் கூகுள் மேப்பை பார்த்துக்கொண்டே வாகனம் ஓட்டிய மூன்று பேர் கால்வாயில் விழவேண்டிய நிலை ஏற்பட்டது.

இது போன்று மற்றொரு கார் உடைந்திருந்த மேம்பாலத்தில் ஏறி, ஆற்றுக்குள் விழுந்தது. இப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளது. மும்பையிலும் இப்போது அப்படி ஒரு சம்பவம் நடந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த ரஞ்சனா என்ற பெண் அதிகாலை நேரத்தில் பேலாப்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அவர் கூகுள் மேப் பார்த்துக்கொண்டே கார் ஓட்டினார்.

கூகுள் மேப் மேம்பாலம் ஒன்றின் வழியாக பாதையை காட்டியது. அப்பெண்ணும் மேப்பை பார்த்துக்கொண்டே காரை ஓட்டிக்கொண்டிருந்தார்.

கார் ஒரு மேம்பாலத்தில் ஏறிச்சென்றது. அந்த மேம்பாலத்தில் கார் சென்ற போது அது அங்குள்ள கடல் கழிமுகப்பகுதியில் போய் முடிந்தது. ஆனால் வேகமாக சென்று கொண்டிருந்ததால் அவரால் கார் கடலுக்குள் விழுவதை நிறுத்த முடியவில்லை.

கார் கடலுக்குள் விழுந்தவுடன் காரில் இருந்த பெண் உதவி கேட்டு கத்தினார். அப்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீரில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். அவருக்கு அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படவில்லை.

கடலில் இருந்து மீட்கப்படும் கார்

தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அப்பெண் ஓட்டிய காரை கிரேன் மூலம் கடலில் இருந்து வெளியில் எடுத்தனர். அப்பெண்ணின் கார் விழுந்த இடத்தில் படகுகள் வந்து செல்ல சிறிய துறைமுகம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் தடுப்பு சுவரை இடித்துக்கொண்டு கார் கடலுக்குள் விழுந்துவிட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து கூகுள் மேப்பை பார்த்து வாகனங்களை ஓட்டுபவர்கள் மிகவும் கவனத்துடன் ஓட்டும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்புதான் கேரளாவில் வயதான தம்பதி கூகுள் மேப்பை பார்த்துக்கொண்டே காரை ஓட்டிச்சென்றபோது அக்கார் கால்வாயில் சென்று விழுந்தது.

சஞ்சய் கபூரின் ரூ.30000 கோடி சொத்தில் கரிஷ்மா கபூர் குழந்தைகளுக்கு பங்கு கிடைக்குமா?

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த மாதம் 12-ம் தேதி அகால மரணம் அடைந்தார். அவர் லண்டனில் போலோ விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது வாயிக்குள் ஒரு த... மேலும் பார்க்க

மகாராஷ்டிராவில் பெண்களுக்கான Ladki Bahin திட்டத்தின் மூலம் ரூ.1500 வாங்கிய 14000 ஆண்கள்

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1500 வழங்கும் லட்கி பெஹின் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தேர்தல் நேரம் என்பதால் விண்ணப்பித்த அனைவரது வங்க... மேலும் பார்க்க

5 மாதங்களில் பிறந்த அபூர்வ குழந்தை; கின்னஸ் உலக சாதனையில் பதிவு - ஆச்சர்ய பின்னணி என்ன?

அமெரிக்காவின் அயோவா நகரில், 21 வாரங்கள் மட்டுமே வளர்ச்சி கண்ட ஒரு குழந்தை, தனது முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளது. இந்த குழந்தை, உலகின் மிக முன்கூட்டியே பிறந்த குழந்தையாக (World's Most Premature Baby) ... மேலும் பார்க்க

பொம்மையே வாழ்க்கை துணை... 4-வது பொம்மை குழந்தையை வரவேற்கும் இளைஞர் - பின்னணி என்ன?

கொலம்பியாவைச் சேர்ந்த கிறிஸ்டியன் மொன்டெனேக்ரோ, தனிமையில் இருந்து விடுபட, 2023 ஆம் ஆண்டு நடாலியா என்ற துணிப்பொம்மையுடன் உறவைத் தொடங்கினார். இவர்களுக்கு மூன்று பொம்மைக் குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவிக... மேலும் பார்க்க

’அமெரிக்காவை விட இந்தியாவில் தான்..’ கவனம் பெற்ற அமெரிக்க பெண்ணின் வீடியோ - பின்னணி என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த சமூக ஊடக பதிவாளர் கிறிஸ்டன் ஃபிஷர், இந்தியாவில் தனது அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்து பேசியிருக்கிறார். இந்தியாவில் தனது அன்றாட வாழ்க்கையையும் அனுபவங்களையும் சமூ... மேலும் பார்க்க

இங்கிலாந்து: திரையரங்கில் பவன் கல்யாண் திரைப்படக் காட்சி நிறுத்தம்: என்ன நடந்தது?

பவன் கல்யாண் நடித்த வரலாற்று காவிய திரைப்படமான ஹரி ஹர வீர மல்லு ஜூலை 26 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் அவரது ரசிகர் பட்டாளத்தால் பெரும் ஆரவாரத்தைப் பெற்றது. இந்த கொண்டாட்டங... மேலும் பார்க்க