செய்திகள் :

விமான விபத்து: தன்னைக் கேடயமாக்கி மகனைக் காத்த தாய்.. இப்போது தோல் கொடுத்து!

post image

ஏர் இந்தியா விமானம், பிஜே மருத்துவக் கல்லூரி மீது விழுந்தபோது, தன்னுடைய எட்டுமாதக் குழந்தை, தன்னையே கேடயமாக்கிக் கொண்டு பாதுகாத்தார் மணீஷா கச்சாடியா.

இப்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைக்கு, தீயில் கருகிய தோலுக்கு மாற்றாக, தன்னுடைய தோலை-க் கொடுத்து மீண்டும் தாயின் கருணைக்கு உதாரணமாக மாறியிருக்கிறார்.

கடந்த சில நாள்களாக பிள்ளைகளைக் கொல்லும் பெண்களின் செய்திகள் அதிகம் வைரலாக நிலையில், தற்போது மணீஷாவின் நெகிழ்ச்சியான கதை பலரையும் கண்கலங்க வைக்கிறது.

ஜூன் 12ஆம் தேதி நிகழ்ந்த இந்த மிகப் பயங்கர விபத்தில் உயிர் பிழைத்த ஒரு சிலரில் மணீஷாவும் அவரது மகனும் அடங்குவர். இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தீக்காயங்களுடன் போராடிய தன்னுடைய மகன் தயான்ஷ்-க்கு தனது தோலைக் கொடுத்திருக்கிறார் மணீஷா இருவரும் பூரண நலமடைந்து மருத்துவமனையில் இருந்த வீடு திரும்பியிருக்கிறார்கள்.

மணீஷாவின் கணவர் கபில், முதுகலை மருத்துவம் பயின்றுவிட்டு, அங்கு சூப்பர் ஸ்பெஷாலலிட்டி மாணவராகவும் மருத்துவராகவும் இருந்து வருகிறார். விபத்து நேரிட்டபோது, கபில் மருத்துவமனையில் பணியில் இருந்தார்.

ஒரு வினாடியில் அப்பகுதியே கரும்புகையால் மூடப்பட்டது. தன்னுடைய ஒரே நோக்கம் குழந்தையைக் காப்பாற்றுவது என்பது மட்டுமே மணீஷாவுக்கு அப்போது இருந்தது. குழந்தையைத் தூக்கிக் கொண்டு தன்னுடைய கைகளுக்குள் மறைத்தபடி வெளியே ஓடியிருக்கிறார். இருவரையும் மீட்டபோது மணீஷாவுக்கு 25 சதவீத காயமும், குழந்தைக்கு 36 சதவீத காயமும் இருந்தது.

குழந்தைக்கு ஏற்பட்ட காயத்தால் பலக்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. குழந்தையின் வயது காரணத்தால் உடல்நலம் தேறுவதில் பல சிக்கல்கள் இருந்தன. அவனது காயங்களை ஆற்ற தோல் தேவைப்பட்டது. அதனை அவரது தாயே கொடுத்தார். அவர் மீண்டும் ஒரு முறை தன் குழந்தையை பெற்றெடுத்தது போல் இருந்தது அப்போது என்கிறார்கள் மருத்துவர்கள்.

அவ்வளவு மோசமான விபத்திலிருந்து மீட்கப்பட்ட மிகக் குறைந்த வயது நபராக இந்தக் குழந்தை இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Manisha Khachatiya shielded her eight-month-old baby when an Air India plane crashed into PJ Medical College.

இதையும் படிக்க.. நீதி கிடைக்கும்வரை கவினின் உடலை வாங்க மாட்டோம்: பெற்றோர் திட்டவட்டம்

ஆபரேஷன் மகாதேவ்: பஹல்காம் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவர் கொலை

பஹல்காம் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஹாஸிம் மூஸா ஃபெளஜி, ஆபரேஷன் மகாதேவ் பெயரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் வெளியி... மேலும் பார்க்க

கர்னல் சோஃபியாவுக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து பேசாத ராஜ்நாத் சிங்: சு.வெங்கடேசன்

ஆபரேஷன் சிந்தூரில் முக்கியப் பங்காற்றிய கர்னல் சோஃபியாவுக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசாதது ஏன்? என மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். பஹ... மேலும் பார்க்க

மணிப்பூரில் தோண்டத்தோண்ட கிடைக்கும் ஆயுதங்கள்! பாதுகாப்புப்படை தீவிர சோதனை

மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சூரசந்த்பூர், கேங்க்போக்பி, பேர்ஸ்வால், டெங்க்நௌபால், சண்டெல் ஆகிய மலைப்பிரதேச மாவட்டங்களில் கடந்த சில ந... மேலும் பார்க்க

ஐபிஎல் கூட்ட நெரிசல்: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட பெங்களூரு காவல் ஆணையருக்கு மீண்டும் பணி! கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு காவல் ஆணையரை பணியிடைநீக்கம் செய்த உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக கர்நாடக அரசு திங்கள்கிழமை(ஜூலை 28) வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளது.ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக சாம்பியன் ... மேலும் பார்க்க

அமெரிக்காவின் தலையீடு இல்லை என திட்டவட்டமாக மறுக்கவில்லை: பிரியங்கா

ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாகக் கூறவில்லை என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட கால இ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி பேசவில்லை - ஜெய்சங்கர்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசவில்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு... மேலும் பார்க்க