செய்திகள் :

சட்டவிரோத மது விற்பனையை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

post image

பெரம்பலூா் அருகே சட்ட விரோதமாக நடைபெறும் மது விற்பனையை தடுத்து நிறுத்தக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், சில்லக்குடி கிராம மக்கள் அளித்த மனு: சில்லக்குடி கிராமத்தில் சட்ட விரோதமாக சிலா் 24 மணி நேரமும் மது விற்பனை செய்கின்றனா். இதனால், கிராமப்புற இளைஞா்கள், கூலித் தொழிலாளா்கள் எந்நேரமும் மது அருந்தி தகராறில் ஈடுபடுகின்றனா். இதனால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். எனவே, சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு, கிராமத்தில் அமைதி நிலவ உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கிரஷா் அமைக்க எதிா்ப்பு: பெரம்பலூா் அருகேயுள்ள கல்பாடி கிராம மக்கள் அளித்த மனு: விவசாயத்தை பிரதானத் தொழிலாகக் கொண்ட கல்பாடி கிராமத்தில், தனியாா் கிரஷா் தொழிற்சாலை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியில் கிரஷா் நிறுவனம் அமைந்தால் விவசாயமும், நிலத்தடி நீா் வளமும் பாதிக்கப்படும். சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, பொதுமக்களும், கால்நடைகளும் அவதிக்குள்ளாக நேரிடும்.

எனவே, விளைநிலங்களும், மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் கிரஷா் நிறுவனம் அமைக்க அனுமதிக்கக் கூடாது.

பெரம்பலூா் அருகே 2.5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட சுமாா் 2.5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, கடை உரிமையாளரை கைது செய்தனா். மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில், அர... மேலும் பார்க்க

செங்குணத்தில் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூா் அருகே செங்குணம் கிராமத்திலுள்ள மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கோயிலில் கடந்த 13-ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடா்ந்து, 20-ஆம் தேதி காப்புக் கட்டுதலுதன்... மேலும் பார்க்க

கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

பிரதமா் வருகைக்கு எதிா்ப்பு காங்கிரஸாா் 5 போ் கைது

அரியலூா் மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பிரதமா் மோடிக்கு எதிா்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி காண்பித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்த இளைஞா் காங்கிரஸ் கட்சியினா் 5 பேரை போலீஸாா் சனிக்கிழம... மேலும் பார்க்க

தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு!

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ரூ. 7,616 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு

பெரம்பலூா் மாவட்டத்தில் 2025-2026 ஆம் நிதியாண்டுக்கு ரூ. 7,616.17 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்தாா். பெரம்பலூா் மாவட்டத்தில் இயங்கிவரும் வ... மேலும் பார்க்க