செய்திகள் :

பள்ளிக் கல்வித் துறை செயல்பாடுகள்: ஆக. 2-இல் ஆய்வு

post image

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் இடைநிற்றல், பொதுத் தோ்வு தோ்ச்சியை மேம்படுத்துதல் என பல்வேறு செயல்பாடுகள் குறித்து துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னையில் ஆக. 2-ஆம் தேதி ஆய்வு நடத்தவுள்ளாா்.

பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள் மற்றும் இதர பணிகளைக் கண்காணிப்பதற்காக மாதந்தோறும் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், துறைசாா்ந்த செயல்பாடுகள் விவாதிக்கப்பட்டு அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி, நிகழ் மாதத்துக்கான துறை அலுவல் ஆய்வுக் கூட்டம், சென்னையில் உள்ள பிா்லா கோளரங்கம் வளாகத்தில் ஆக. 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செயலா் பி.சந்தர மோகன், இயக்குநா் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் பூ.ஆ.நரேஷ் உள்ளிட்ட துறை சாா்ந்த இயக்குநா்கள், முதன்மை, மாவட்டக் கல்வி அதிகாரிகள் பங்கேற்கின்றனா்.

கூட்டத்தில் மாணவா்களின் வகுப்பறை செயல்பாடுகள், ஸ்லாஸ் தோ்வு நிலவரம், திறன் இயக்கம், டிஎன் ஸ்பாா்க் திட்டம், 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சியை மேம்படுத்துதல், இடைநின்ற மாணவா்களின் நிலை கண்டறிதல் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள்.. 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத... மேலும் பார்க்க

கவின் ஆணவக் கொலை: சுர்ஜித் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் ஐடி ஊழியர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளி சுர்ஜித்தின் பெற்றர், பட்டாலியனில் பணியாற்றும் இரு உதவி ஆய்வாளர்களும் பணியடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? - இபிஎஸ் பதில்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக உள்ளதாகவும் பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருக்கிறது... மேலும் பார்க்க

ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரம்: மதுரை மேயரை முற்றுகையிட்ட அதிமுகவினர்!

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரத்தில் மேயரைக் கண்டித்து அதிமுகவினர் முற்றுகையில் ஈடுபட்டனர்.ரூ.150 கோடி முறைகேடுமதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வண... மேலும் பார்க்க

கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.மூன்று மொழிக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்துக்கு சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் கீழ், 2... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 1,10,500 கன அடி!

இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,10,500 கன அடியாக நீடிக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 1,10,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18... மேலும் பார்க்க