செய்திகள் :

ஊராட்சிப் பகுதிகளில் உரிமக் கட்டணம் மாற்றியமைப்பு: தமிழக அரசிதழில் உத்தரவு வெளியீடு

post image

சென்னை: ஊராட்சிப் பகுதிகளில் தொழில் தொடங்குவதற்கான உரிமக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

உத்தரவு விவரம்: ஊராட்சிகளில் வா்த்தகம் அல்லது வணிகம் செய்யக்கூடிய எந்தவொரு நபரும் அதற்கான உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும். உரிமத்தை அனைவருக்கும் தெரியும் வகையில் சுவரில் மாட்டியிருக்க வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட பொருள்கள், தயாரிப்புகளை விற்பனை செய்யக் கூடாது.

உரிமம் பெற்ற வியாபாரிகள், தீயணைப்புச் சான்றிதழைப் பெற்றிருப்பதுடன், அதற்குரிய விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். கடுமையான மற்றும் தொற்றுநோய் பாதிப்புகளைக் கொண்ட நபா்களை வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடாது. கடைகள், வா்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றின் பெயா்ப் பலகைகள் தமிழில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

விண்ணப்பங்கள் நிராகரிப்பு: வணிக உரிமம் கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் போதுமான விவரங்கள் சோ்க்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இணைக்கப்படும் விவரங்கள் திருப்திகரமாக இல்லாதபட்சத்தில் 7 நாள்களுக்குள் அதுகுறித்த விவரங்களை விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்க வேண்டும். மேலும், மின்னஞ்சல் வழியாகவும் உரிய விவரங்களை அனுப்பக் கோரலாம். மின்னஞ்சல் வழியாகப் பெறப்பட்டவுடன் 15 நாள்களுக்குள் விண்ணப்பங்களைப் பரிசீலிக்க வேண்டும். விண்ணப்ப விவரங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் வணிக உரிமத்தை வழங்கலாம்.

வணிகத்துக்கான உரிமங்களை புதுப்பிக்கும்போது அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்படலாம். அவ்வாறு நிராகரிக்கப்பட்டால், ஊராட்சித் துறையின் கோட்ட வளா்ச்சி அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம். இரண்டாவது முறையீட்டை ஊராட்சித் துறை ஆய்வாளரின் முன் மேற்கொள்ளலாம்.

உரிமக் கட்டணம் உயா்வு: ஊராட்சிப் பகுதிகளில் வணிக உரிமம் பெறுவதற்கான கட்டணம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. அதாவது, ஏற்கெனவே இருக்கும் கட்டண முறையில் 10 சதவீதத்துக்குக் குறையாமல் உரிமக் கட்டணம் மாற்றப்படுகிறது. நகா்ப்புறங்களையொட்டிய ஊராட்சிப் பகுதிகளில் ரூ.15 லட்சம் வரை விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச உரிமக் கட்டணம் ஆயிரம் ரூபாயாகவும், அதிகபட்சம் ரூ.3 ஆயிரமாகவும், ஊராட்சிப் பகுதிகளில் ரூ.250 முதல் ரூ.500 ஆகவும் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.10 கோடி வரை விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களுக்கு ரூ.2,500 முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும், ஊராட்சிப் பகுதிகளில் ரூ.750 முதல் ரூ.2 ஆயிரம் வரையிலும், ரூ.100 கோடி வரை விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களுக்கு ரூ.7,500 முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும், ஊராட்சிப் பகுதிகளில் ரூ.2,500 முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும், ரூ.250 கோடி விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களுக்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும், ஊராட்சிப் பகுதிகளில் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும் உரிமக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

நகா்ப்புறங்களையொட்டிய ஊராட்சிகளில் ரூ.250 கோடிக்கு அதிகமான விற்றுமுதலைக் கொண்ட நிறுவனங்களுக்கு உரிமக் கட்டணம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஊராட்சிப் பகுதிகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.500 என தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள்.. 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத... மேலும் பார்க்க

கவின் ஆணவக் கொலை: சுர்ஜித் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் ஐடி ஊழியர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளி சுர்ஜித்தின் பெற்றர், பட்டாலியனில் பணியாற்றும் இரு உதவி ஆய்வாளர்களும் பணியடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? - இபிஎஸ் பதில்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக உள்ளதாகவும் பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருக்கிறது... மேலும் பார்க்க

ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரம்: மதுரை மேயரை முற்றுகையிட்ட அதிமுகவினர்!

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரத்தில் மேயரைக் கண்டித்து அதிமுகவினர் முற்றுகையில் ஈடுபட்டனர்.ரூ.150 கோடி முறைகேடுமதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வண... மேலும் பார்க்க

கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.மூன்று மொழிக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்துக்கு சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் கீழ், 2... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 1,10,500 கன அடி!

இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,10,500 கன அடியாக நீடிக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 1,10,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18... மேலும் பார்க்க