செய்திகள் :

ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சம் சுற்றுலாவாசிகள் பயணம்

post image

புது தில்லி: நிகழாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்களும், 19,570 வெளிநாட்டவரும் சுற்றுலா சென்றுள்ளனா்.

கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 போ் உயிரிழந்தனா். இதையடுத்து அங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாதிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதலை தொடா்ந்து ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சரிந்தது, வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது குறித்து மத்திய அரசுக்குத் தெரியுமா என்று மக்களவையில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி எம்.பி. அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பினாா்.

இதற்கு மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ஜம்மு-காஷ்மீருக்கு ஆண்டுதோறும் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் புள்ளிவிவரத்தை பகிா்ந்தாா். அதன்படி நிகழாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்களும், 19,570 வெளிநாட்டவரும் சுற்றுலா சென்றுள்ளனா்.

ஜம்மு-காஷ்மீருக்கு சென்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

ஆண்டு உள்நாட்டுப் பயணிகள் வெளிநாட்டுப் பயணிகள்

2020 25,19,524 5,317

2021 1,13,14,920 1,650

2022 1,84,99,332 19,985

2023 2,06,79,336 55,337

2024 2,35,24,629 65,452

2025 95,92,664 19,570

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு நேருவே காரணம்! அமித் ஷா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு நேருவின் போர் கொள்கையே காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.மக்களவையில் நடைபெற்று வரும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்த விவாதத... மேலும் பார்க்க

வருகிறது செயற்கை தங்கம்! இனி தங்கம் விலை என்னவாகும்?

பெரும்பாலான வேதியியல் விஞ்ஞானிகளின் கனவாக இருப்பது செயற்கை தங்கம்தான். ஆனால் அது கனவாகவே இருந்துவிடுமா? நிஜமாகுமா என்ற கேள்விக்கு அமெரிக்க புத்தாக்க நிறுவனம் ஒன்று பதில் அளித்துள்ளது.நாள்தோறும் பலரும்... மேலும் பார்க்க

கோகோயின் உரை.. பாகிஸ்தானின் சார்பாகச் செயல்படுவதை நிரூபிக்கிறது: அஸ்ஸாம் முதல்வர்

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி கோகோயின் உரை அவர் பாகிஸ்தானின் சார்பாகச் செயல்படுவதை நிருப்பித்துள்ளதாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் ... மேலும் பார்க்க

தில்லிக்கு இன்று ரெட் அலர்ட்! தொடர் கனமழையால் விமான சேவைகள் பாதிப்பு!

தில்லியில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (ஜூலை 29) அம்மாநிலத்துக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், பருவமழை தொடங்கியது முதல், தொடர்... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத் தொகை கோரி 5.88 லட்சம் பேர் மனு! - தமிழக அரசு தகவல்

தமிழக அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் இதுவரை 12.65 லட்சம் பேர் மனு அளித்திருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துற... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்! அமித் ஷா

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தா... மேலும் பார்க்க