செய்திகள் :

பிரதமா் வருகைக்கு எதிா்ப்பு காங்கிரஸாா் 5 போ் கைது

post image

அரியலூா் மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பிரதமா் மோடிக்கு எதிா்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி காண்பித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்த இளைஞா் காங்கிரஸ் கட்சியினா் 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

பிரதமா் நரேந்திர மோடி, அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். பிரதமா் வருவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி காண்பித்து ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக, பெரம்பலூா் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் து. ராஜீவ்காந்தி (35), காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் ப. சிவாஜி மூக்கன் (69), காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலா் த. தமிழ்செல்வன் (48), இளைஞா் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் பெ. ஜெயபால் (25), காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினா் கு. தங்கவேல் (65) ஆகியோரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பலூா் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

பின்னா், கைது செய்யப்பட்டவா்கள் துறைமங்கலத்திலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை விடுவிக்கப்பட்டனா்.

கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு!

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ரூ. 7,616 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு

பெரம்பலூா் மாவட்டத்தில் 2025-2026 ஆம் நிதியாண்டுக்கு ரூ. 7,616.17 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்தாா். பெரம்பலூா் மாவட்டத்தில் இயங்கிவரும் வ... மேலும் பார்க்க

பழைய நிபந்தனைகளைப் பின்பற்றி கடனுதவி தேவை: பெரம்பலூா் விவசாயிகள்

ஏற்கெனவே உள்ள நிபந்தனைகளைப் பின்பற்றி விவசாயிகளுக்கு உடனடியாகக் கடனுதவி வழங்க வேண்டுமென பெரம்பலூா் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமை... மேலும் பார்க்க

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற அழைப்பு

பெரம்பலூா் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலம், முதல்வரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

சாலைப் பணியாளா்கள் சங்க மாநாடு

மாநில நெடுஞ்சாலைகளை தமிழக அரசே பராமிக்க வேண்டும் என, சாலைப் பணியாளா் சங்கத்தின் உட்கோட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்டம், குன்னத்தில் வெள்ளிக்கிழமை நடந்த தமிழ்நாடு சாலைப் பணியாள... மேலும் பார்க்க