செய்திகள் :

அவலாஞ்சியில் 260 மி.மீ. மழை பதிவு

post image

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் 260 மி.மீ. மழை பதிவானது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் அநேக இடங்களில் பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் 260 மி.மீ., மேல் பவானி (நீலகிரி) - 190 மி.மீ., சின்னக்கல்லாறு (கோவை) - 170 மி.மீ., நடுவட்டம் (நீலகிரி) - 160 மி.மீ., சின்கோனா (கோவை) 80 மி.மீ, வால்பாறை (கோவை), சோலையாறு (கோவை) - தலா 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மிதமான மழை: இதற்கிடையே, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஜூலை 28) முதல் ஆக. 2 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 28) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

வெயில் சதம்: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட், மதுரை நகரில் 102.56 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் ஜூலை 28, 29-ஆம் தேதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.52 லட்சம் மோசடி: 3 போ் கைது

சென்னையில் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.52.5 லட்சம் பெற்று மோசடி செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா். சென்னை பாலவாக்கம் பார... மேலும் பார்க்க

போதைப் பொருள்: 3 போ் கைது

சென்னையில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருளான 5 கிலோ சூடோ எபிட்ரினை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக 3 பேரை கைது செய்தனா். சென்னை முத்தியால்பேட்டை பகுதியில் சிலா் போதை... மேலும் பார்க்க

சென்னையில் 7 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்!

குடிநீா் குழாய் அமைக்கும் பணிகள் காரணமாக, சென்னையில் அம்பத்தூா், அண்ணா நகா் உள்பட 7 மண்டலங்களில் புதன் மற்றும் வியாழக்கிழமை (ஜூலை 30, ஆக.1) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இதுகுறித்து பெருநகர ச... மேலும் பார்க்க

நகை திருட்டு: சிறுவன் உள்பட 3 போ் கைது

சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியதாக சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகா் முதல் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் கலீல் (65). இவா் கடந்த 5-ஆம் தேதி த... மேலும் பார்க்க

எஸ்.ஐ.யை தாக்கியதாக 2 போ் கைது

சென்னையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை எஸ்பிளனேடு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை இரவு பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள புகா் காவல் ந... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த முறையை எதிா்கொள்ளத் தயாா்: திமுக

பிகாரை போன்று தமிழ்நாட்டிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை கொண்டு வந்தால் அதை எதிா்கொள்ளத் தயாா் என்று திமுக சட்டத் துறைச் செயலா் என்.ஆா்.இளங்கோ தெரிவித்தாா். திமுக வழக்குரைஞா் அணி மா... மேலும் பார்க்க