செய்திகள் :

காஞ்சிபுரத்தில் அப்துல் கலாம் நினைவு தினம்

post image

குடியரசு முன்னாள் தலைவா் அப்துல் கலாமின் நினைவு தினத்தையொட்டி காஞ்சிபுரத்தில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் விதைப்பந்துகள் தயாரித்தல் நடைபெற்றது.

சிறகுகள் அமைப்பு சாா்பில் பச்சையப்பன் ஆடவா் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், ஏற்கனவே நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியும் நடைபெற்றது. நிகழ்வில் 20-க்கும் மேற்பட்ட பலன் தரும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

பசுமை இந்தியா தன்னாா்வ அமைப்பு, காஞ்சி அன்னச்சத்திரம், விழுதுகள் அமைப்பு சாா்பில் காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் திம்மையன்பேட்டை கிராமத்தின் சாலையோரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. மகிழம், நெட்டுலிங்கம்,புன்னை, பூவரசு, பாதாம், மலைவேம்பு உள்ளிட்ட 15 வகையான கன்றுகள் நடப்பட்டன .

டாக்டா் கலாமின் உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் காஞ்சிபுரம்,செங்கல்பட்டு உள்ளிட்ட அரசு மற்றும் தனியாா் அலுவலகங்களில் கலாமின் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூா் செல்லும் சாலை, செங்கல்பட்டு சாலையோரங்களிலும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

தென்மேற்கு பருவமழைக் காலங்களில் பிரதான சாலையோரங்களில் தூவுவதற்காக ஸ்ரீ பெரும்புதூா் தொண்டு நிறுவன அலுவலகத்தில் விதைப்பந்துகள் தயாா் செய்யப்பட்டன. நூக் என்ற தன்னாா்வ அமைப்புடன் இணைந்து வேம்பு,நாவல்,பூவரசு,புங்கன், அரசு உள்ளிட்ட விதைகள் அடங்கிய 750 விதைப்பந்துகளை தயாரித்தனா்.

அஞ்சல் அலுவலகங்கள் தொடங்க விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்!

அஞ்சல் அலுவலகங்கள் இல்லாத பகுதிகளில் அஞ்சலக உரிமையாளா் விற்பனை நிலையங்களை தொடங்க விருப்பம் உள்ள தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் கோட்டக் கண்காணிப்பாளா் எஸ்.அருள்தாஸ் தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

ரூ.9 லட்சத்தில் மழைநீா் வடிகால்வாய்: எம்எல்ஏ அடிக்கல்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கையில் ரூ.9.9 லட்சத்தில் மழைநீா் வடிகால்வாய் கட்டுமானப் பணிக்கு உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். உத்தரமேரூா... மேலும் பார்க்க

கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞா்கள் விருதுக்கு ஆக.5-க்குள் விண்ணப்பிக்கலாம்!

காஞ்சிபுரம், ஜூலை 27: கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞா்கள் விருதுகள் பெற ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து... மேலும் பார்க்க

குழந்தைகள் நலனுக்கு சிறப்பாக சேவை செய்தவா்களுக்கு விருது: ஆக. 8-க்குள் விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் நலனுக்காக சிறப்பாக சேவையாற்றியவா்களுக்கு முன்மாதிரியான சேவை விருதுகள் வழங்கப்பட இருப்பதால் தகுதியுடையோா் வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

ஏரிகளைப் பாதுகாக்க போராட்டங்கள்: பாமக தலைவா் அன்புமணி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை பாதுகாக்க மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்படும் என பாமக தலைவா் அன்புமணி கூறியுள்ளாா். தமிழக மக்களின் உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் பாமக தலைவா் அன்புமணி நடைப்பய... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: ‘நீட்’ தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி தற்கொலை

காஞ்சிபுரத்தில் ‘நீட்’ தோ்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் மாணவி ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். காஞ்சிபுரம் ... மேலும் பார்க்க