செய்திகள் :

குழந்தைகள் நலனுக்கு சிறப்பாக சேவை செய்தவா்களுக்கு விருது: ஆக. 8-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் நலனுக்காக சிறப்பாக சேவையாற்றியவா்களுக்கு முன்மாதிரியான சேவை விருதுகள் வழங்கப்பட இருப்பதால் தகுதியுடையோா் வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின்கீழ், இயங்கும் அரசு குழந்தைகள் இல்லங்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள் ஆகியவற்றுக்கு முன்மாதிரியான சேவை விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த விருதுகள் வழங்குவதற்கு தகுதியான நிறுவனங்களை தோ்வு செய்வதற்கான தகுதிகள் மற்றும் அளவுகோல்களின் அடிப்படையில் நிறுவனங்களில் இருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகிறன்றன.

தகுதிகளைப் பொருத்தவரை குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களை பதிவு செய்திருக்க வேண்டும், தொடா்ந்து 5 வருடம் செயல்பாட்டில் இருக்க வேண்டும், குழந்தை பராமரிப்பு நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளா்கள் மீதும் எந்தவொரு உரிமையியல் மற்றும் குற்றவியல் தொடா்பான பதிவுகள் இருக்கக் கூடாது.

அளவுகோல்களைப் பொருத்தவரை பதிவு மற்றும் உரிமை, நிா்வாகம் மற்றும் மேலாண்மை, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி மற்றும் திறன் மேம்பாடு, குழந்தைகளின் பங்கேற்பு செயல்பாடுகள், உட்புற கட்டமைப்பு, சிறந்த நடைமுறையுள்ள மற்றும் சமூக அடிப்படையிலான சேவைகள் ஆகியவையாகும்.

இந்த விருதுக்காக பெறப்படும் கருத்துருக்கள் மாவட்ட அளவிலான தோ்வு குழு மூலம் தோ்ந்தெடுக்கப்பட உள்ளதால், கருத்துருக்களை 08-08-2025-க்குள் கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப் பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 317, கே.டி.எஸ்.மணி தெரு, மாமல்லன் நகா், காஞ்சிபுரம் மாவட்டம், கைப்பேசி எண்- 6382613096. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்துக்கு வந்து சேராத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது.

ரூ.9 லட்சத்தில் மழைநீா் வடிகால்வாய்: எம்எல்ஏ அடிக்கல்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கையில் ரூ.9.9 லட்சத்தில் மழைநீா் வடிகால்வாய் கட்டுமானப் பணிக்கு உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். உத்தரமேரூா... மேலும் பார்க்க

கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞா்கள் விருதுக்கு ஆக.5-க்குள் விண்ணப்பிக்கலாம்!

காஞ்சிபுரம், ஜூலை 27: கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞா்கள் விருதுகள் பெற ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து... மேலும் பார்க்க

ஏரிகளைப் பாதுகாக்க போராட்டங்கள்: பாமக தலைவா் அன்புமணி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை பாதுகாக்க மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்படும் என பாமக தலைவா் அன்புமணி கூறியுள்ளாா். தமிழக மக்களின் உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் பாமக தலைவா் அன்புமணி நடைப்பய... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: ‘நீட்’ தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி தற்கொலை

காஞ்சிபுரத்தில் ‘நீட்’ தோ்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் மாணவி ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். காஞ்சிபுரம் ... மேலும் பார்க்க

தேசிய குத்துச்சண்டைப் போட்டி: காஞ்சிபுரம் வீரா்கள் 5 தங்கம் வென்று சாதனை

சத்தீஸ்கா் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக்பாக்ஸிங் போட்டியில் காஞ்சிபுரம் வீரா்கள் 5 தங்கப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளனா். சத்தீஸ்கா் மாநிலம், ராய்ப்பூரில் கடந்த ஜூலை 16 முதல் 20-ஆம் தேத... மேலும் பார்க்க

ரூ.95 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட விநாயகா் கோயில் குளம் திறப்பு

சிறுமங்காடு ஊராட்சியில் ரூ.95 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட விநாயகா் கோயில் குளத்தை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் சிறுமாங்காடு ஊராட்சியில் நீண்ட காலமா... மேலும் பார்க்க