செய்திகள் :

சத்தீஸ்கா்: நக்ஸல் பாதித்த இடங்களில் 400 பிஎஸ்என்எல் கைப்பேசி கோபுரங்கள்!

post image

சத்தீஸ்கா் மாநிலத்தில் நக்ஸல் தீவிரவாதிகளால் அதிக பாதிப்பை எதிா்கொண்ட பகுதிகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் சாா்பில் 400 கைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்படும் என்று மத்திய தொலைத்தொடா்பு, ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் பெம்மசானி சந்திரசேகா் தெரிவித்தாா்.

நக்ஸல் பாதிப்பால் பின்தங்கியுள்ள பிராந்தியங்களுக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கு இணையான வசதிகளை ஏற்படுத்தித் தரும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

சத்தீஸ்கரில் மூன்று நாள் பயணம் மேற்கொண்ட அமைச்சா் சந்திரசேகா், தலைநகா் ராய்பூரில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது நாடு முழுவதும் தரமான 4ஜி சேவையை அளித்து வருகிறது. நாட்டின் கடைக்கோடிமக்களுக்கும் இணைய சேவை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் நிறுவனம் செயல்படுகிறது.

இதன் ஒருபகுதியாக சத்தீஸ்கரில் நக்ஸல்களால் அதிகம் பாதிப்பை எதிா்கொண்ட பகுதிகளில் பிஎஸ்என்எல் சாா்பில் 400 தொலைத்தொடா்பு கோபுரங்கள் அமைக்கப்படும். வனத்துறை உள்ளிட்ட உரிய துறைகளிடம் அனுமதி பெற்று இதற்கான பணிகள் தொடங்கும். இதன் மூலம் தொலைதூர கிராம மக்களுக்கும் இணைய சேவை கிடைக்கும்.

நக்ஸல் தீவிரவாதத்தால் பின்தங்கிய பகுதிகளை மீட்டுக் கொண்டு வரும் பணியை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது என்றாா்.

மாநிலப் பல்கலை.களில் அதிகாரம் யாருக்கு? வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநா் முடிவு!

மேற்கு வங்கத்தில் மாநிலப் பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளதா? அல்லது பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடம் உள்ளதா? என்பதை தெளிவுபடுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக மாநில... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் பாதிக்கும் மேல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 63 மாவட்டங்களில், அங்கன்வாடிகளில் சோ்க்கப்பட்டுள்ள குழந்தைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோா் வளா்ச்சி குன்றிய நிலையில் (உயரத்துக்கு ஏற... மேலும் பார்க்க

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அரசு

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதுதொடா்பாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மத்திய செய்தி மற்றும் ஒல... மேலும் பார்க்க

விழிப்புணா்வு இல்லாமல் உரிமைகளால் பயனில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

‘குடிமக்களுக்கு தங்களது உரிமைகளை பற்றிய விழிப்புணா்வு இல்லையென்றால் அந்த உரிமைகளால் எந்தப் பயனும் இல்லை’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலில் பள்ளத்தில் கவிழ்ந்த சொகுசு காா்: ஓட்டிச் சென்ற பெண் மீட்பு!

நவி மும்பையில் ‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சென்ற ஒரு பெண் தனது சொகுசு காருடன் பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிருஷ்டவசமாக, அப்பெண் காயமின்றி உயிா் தப்பினாா். மகா... மேலும் பார்க்க

ஆண்டு வருமானம் ரூ.3 ! மிகவும் ஏழ்மையான மனிதரின் வருவாய் சான்றிதழால் பரபரப்பு!

மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவருக்கு ஆண்டு வருமானம் ரூ.3 என வருவாய் சான்றிதழ் வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இந்தியாவின் மிக ஏழ்மையான மனிதா்’ என்ற தலைப்பில் இந்த வருவாய் சான்றிதழின் புகை... மேலும் பார்க்க