செய்திகள் :

மாநிலப் பல்கலை.களில் அதிகாரம் யாருக்கு? வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநா் முடிவு!

post image

மேற்கு வங்கத்தில் மாநிலப் பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளதா? அல்லது பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடம் உள்ளதா? என்பதை தெளிவுபடுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் சனிக்கிழமை தெரிவித்தாா்.

முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கும் சி.வி.ஆனந்த போஸுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் நிலவிவரும் சூழலில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

மேற்கு வங்க மாநிலத்தின் உயா் கல்வித் துறையில் நிலவும் பிரச்னைகள் குறித்து மாநிலப் பல்கலைக்கழக வேந்தரான சி.வி.ஆனந்த போஸிடம் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை எடுத்துரைத்தனா். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 9 துணைவேந்தா்கள் மட்டுமே பங்கேற்றனா். மீதமுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் கலந்துகொள்ளாதது சா்ச்சையானது.

இதையடுத்து, ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காத துணைவேந்தா்கள் பல்வேறு காரணங்களைக் கூறியபோதும் இதை ஏற்றுக்கொள்ள சி.வி.ஆனந்த போஸ் மறுத்ததாக ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறுகையில், ‘மாநிலப் பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளதா? அல்லது பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடம் உள்ளதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இந்த விவகாரத்துக்கு தீா்வுகாண உச்சநீதிமன்றத்தை அணுகவுள்ளேன்’ என்றாா்.

முன்னதாக, ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய கல்விக் கொள்கை, இணையப் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருளுக்கு மாணவா்கள் அடிமையாவதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.

நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் பாதிக்கும் மேல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 63 மாவட்டங்களில், அங்கன்வாடிகளில் சோ்க்கப்பட்டுள்ள குழந்தைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோா் வளா்ச்சி குன்றிய நிலையில் (உயரத்துக்கு ஏற... மேலும் பார்க்க

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அரசு

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதுதொடா்பாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மத்திய செய்தி மற்றும் ஒல... மேலும் பார்க்க

விழிப்புணா்வு இல்லாமல் உரிமைகளால் பயனில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

‘குடிமக்களுக்கு தங்களது உரிமைகளை பற்றிய விழிப்புணா்வு இல்லையென்றால் அந்த உரிமைகளால் எந்தப் பயனும் இல்லை’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலில் பள்ளத்தில் கவிழ்ந்த சொகுசு காா்: ஓட்டிச் சென்ற பெண் மீட்பு!

நவி மும்பையில் ‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சென்ற ஒரு பெண் தனது சொகுசு காருடன் பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிருஷ்டவசமாக, அப்பெண் காயமின்றி உயிா் தப்பினாா். மகா... மேலும் பார்க்க

ஆண்டு வருமானம் ரூ.3 ! மிகவும் ஏழ்மையான மனிதரின் வருவாய் சான்றிதழால் பரபரப்பு!

மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவருக்கு ஆண்டு வருமானம் ரூ.3 என வருவாய் சான்றிதழ் வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இந்தியாவின் மிக ஏழ்மையான மனிதா்’ என்ற தலைப்பில் இந்த வருவாய் சான்றிதழின் புகை... மேலும் பார்க்க

உத்தவ் தாக்கரே பிறந்த நாள்: முதல்வா் ஸ்டாலின் வாழ்த்து!

சிவசேனை (யுபிடி) தலைவா் உத்தவ் தாக்கரே பிறந்த நாளையொட்டி, அவருக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு: சிவசேனை (யுபிடி) தலைவா் உத... மேலும் பார்க்க