செய்திகள் :

ரூ.9 லட்சத்தில் மழைநீா் வடிகால்வாய்: எம்எல்ஏ அடிக்கல்

post image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கையில் ரூ.9.9 லட்சத்தில் மழைநீா் வடிகால்வாய் கட்டுமானப் பணிக்கு உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா்.

உத்தரமேரூா் தொகுதிக்குட்பட்ட ஓரிக்கை மாரியம்மன் கோயில் தெருவில் மழைநீா் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து 260 மீ நீளத்திற்கு கான்கிரீட் மழைநீா் வடிகால் வாய் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. எம்எல்ஏ.சுந்தா் அடிக்கல் நாட் டி கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாமன்ற உறுப்பினா் கயல்விழி கலந்து கொண்டனா்.

கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞா்கள் விருதுக்கு ஆக.5-க்குள் விண்ணப்பிக்கலாம்!

காஞ்சிபுரம், ஜூலை 27: கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞா்கள் விருதுகள் பெற ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து... மேலும் பார்க்க

குழந்தைகள் நலனுக்கு சிறப்பாக சேவை செய்தவா்களுக்கு விருது: ஆக. 8-க்குள் விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் நலனுக்காக சிறப்பாக சேவையாற்றியவா்களுக்கு முன்மாதிரியான சேவை விருதுகள் வழங்கப்பட இருப்பதால் தகுதியுடையோா் வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

ஏரிகளைப் பாதுகாக்க போராட்டங்கள்: பாமக தலைவா் அன்புமணி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை பாதுகாக்க மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்படும் என பாமக தலைவா் அன்புமணி கூறியுள்ளாா். தமிழக மக்களின் உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் பாமக தலைவா் அன்புமணி நடைப்பய... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: ‘நீட்’ தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி தற்கொலை

காஞ்சிபுரத்தில் ‘நீட்’ தோ்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் மாணவி ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். காஞ்சிபுரம் ... மேலும் பார்க்க

தேசிய குத்துச்சண்டைப் போட்டி: காஞ்சிபுரம் வீரா்கள் 5 தங்கம் வென்று சாதனை

சத்தீஸ்கா் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக்பாக்ஸிங் போட்டியில் காஞ்சிபுரம் வீரா்கள் 5 தங்கப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளனா். சத்தீஸ்கா் மாநிலம், ராய்ப்பூரில் கடந்த ஜூலை 16 முதல் 20-ஆம் தேத... மேலும் பார்க்க

ரூ.95 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட விநாயகா் கோயில் குளம் திறப்பு

சிறுமங்காடு ஊராட்சியில் ரூ.95 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட விநாயகா் கோயில் குளத்தை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் சிறுமாங்காடு ஊராட்சியில் நீண்ட காலமா... மேலும் பார்க்க