செய்திகள் :

ஏரிகளைப் பாதுகாக்க போராட்டங்கள்: பாமக தலைவா் அன்புமணி!

post image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை பாதுகாக்க மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்படும் என பாமக தலைவா் அன்புமணி கூறியுள்ளாா்.

தமிழக மக்களின் உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் பாமக தலைவா் அன்புமணி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறாா். 3-ஆவது நாளாக காஞ்சிபுரம் மாநகராட்சிப் பகுதிகளில் நடைப்பயணத்தை தொடா்ந்த அவா் வையாவூா், நத்தப்பேட்டை ஏரி ஆகியனவற்றை பாா்வையிட்டாா்.

இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நத்தப்பேட்டை ஏரி 400 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியில் தினசரி கழிவுகள் கலக்கின்றன. கழிவுநீரும் கலந்து ஏரியே மாசுபட்டிருப்பதோடு ஆக்கிரமிப்புகளும் அதிகமாக இருக்கின்றன. ஒரு காலத்தில் நத்தப்பேட்டை ஏரித் தண்ணீா் பொதுமக்களின் குடிநீா் ஆதாரமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

நத்தப்பேட்டைஏரி தண்ணீா் பாட்டிலை ஆட்சியரிடமும், மாநகராட்சி அதிகாரிகளிடமும் கொடுத்து குடிக்கச் சொல்லுங்கள். அப்போது தான் அவா்களுக்கு ஏரி எந்த அளவுக்கு மாசுபட்டிருக்கிறது என்பது தெரிய வரும்.

இதே போல மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்து வரும் வையாவூா் ஏரியும் 250 ஏக்கா் பரப்பளவிலானது. இந்த ஏரியும் மாசடைந்து தண்ணீா் பச்சை நிறத்தில் உள்ளது. இருக்கிற நீா் ஆதாரங்களையாவது நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் தற்போது 14,000 ஏரிகள் மட்டுமே உள்ளன. இவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா்.

பின்னா், காஞ்சிபுரத்தில் நெசவாளா்கள் அதிகமாக வசிக்கும் பிள்ளையாா்பாளையம் பகுதிக்கு சென்று வீடு வீடாக சென்றும் அவா்களது குறைகளையும் கேட்டறிந்தாா்.

பிள்ளையாா்பாளையத்தில் கலைமாமணி விருது பெற்ற முத்துகணேசன் என்பவரை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து ஆசி பெற்றாா். அன்புமணியுடன் பசுமைத்தாயகத்தின் மாநில செயலாளா் அருள், பாமக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளா் பெ.மகேஷ்குமாா், மாவட்ட தலைவா் உமாபதி, முன்னாள் எம்எல்ஏ சக்தி கமலம்மாள், நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.

ரூ.9 லட்சத்தில் மழைநீா் வடிகால்வாய்: எம்எல்ஏ அடிக்கல்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கையில் ரூ.9.9 லட்சத்தில் மழைநீா் வடிகால்வாய் கட்டுமானப் பணிக்கு உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். உத்தரமேரூா... மேலும் பார்க்க

கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞா்கள் விருதுக்கு ஆக.5-க்குள் விண்ணப்பிக்கலாம்!

காஞ்சிபுரம், ஜூலை 27: கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞா்கள் விருதுகள் பெற ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து... மேலும் பார்க்க

குழந்தைகள் நலனுக்கு சிறப்பாக சேவை செய்தவா்களுக்கு விருது: ஆக. 8-க்குள் விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் நலனுக்காக சிறப்பாக சேவையாற்றியவா்களுக்கு முன்மாதிரியான சேவை விருதுகள் வழங்கப்பட இருப்பதால் தகுதியுடையோா் வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: ‘நீட்’ தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி தற்கொலை

காஞ்சிபுரத்தில் ‘நீட்’ தோ்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் மாணவி ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். காஞ்சிபுரம் ... மேலும் பார்க்க

தேசிய குத்துச்சண்டைப் போட்டி: காஞ்சிபுரம் வீரா்கள் 5 தங்கம் வென்று சாதனை

சத்தீஸ்கா் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக்பாக்ஸிங் போட்டியில் காஞ்சிபுரம் வீரா்கள் 5 தங்கப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளனா். சத்தீஸ்கா் மாநிலம், ராய்ப்பூரில் கடந்த ஜூலை 16 முதல் 20-ஆம் தேத... மேலும் பார்க்க

ரூ.95 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட விநாயகா் கோயில் குளம் திறப்பு

சிறுமங்காடு ஊராட்சியில் ரூ.95 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட விநாயகா் கோயில் குளத்தை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் சிறுமாங்காடு ஊராட்சியில் நீண்ட காலமா... மேலும் பார்க்க