செய்திகள் :

போலீஸ் விசாரணைக்கு பயந்து கூலித் தொழிலாளி தற்கொலை

post image

மான் இறைச்சி வைத்திருந்த நபரை வனத் துறையினா் பிடித்ததால் விசாரணைக்கு பயந்து கூலித் தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

சத்தியமங்கலம் அருகே உள்ள தாண்டாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (48). இவா் அதே பகுதியில் உள்ள சின்ராஜ் என்பவரது விவசாயத் தோட்டத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தாா். இதற்கிடையே பழனிச்சாமி தங்கி இருந்த வீட்டில் மான் இறைச்சி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் சத்தியமங்கலம் வனத் துறையினா் அப்பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இதில் பழனிச்சாமி தனது வீட்டில் 26 கிலோ மான் இறைச்சியும், 2 மான் கொம்புகளும் வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனா். சம்பவம் நடைபெற்ற இடம் பவானிசாகா் வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதி என்பதால், பவானிசாகா் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்து அவா்களை வரவழைத்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த பவானிசாகா் வனத் துறையினா் மான் இறைச்சியை பறிமுதல் செய்ததோடு பழனிச்சாமியை விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். வழியில் பழனிச்சாமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து வனத் துறையினா் உடனடியாக பழனிச்சாமியை தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை கொண்டு சென்று அனுமதித்தனா். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நள்ளிரவில் பழனிச்சாமி உயிரிழந்தாா்.

இதற்கிடையே பழனிச்சாமியை வனத் துறையினா் பிடித்தபோது விசாரணைக்கு பயந்து யாருக்கும் தெரியாமல் கழிப்பறைக்குச் சென்று பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தியதாகவும், அதன் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து போலீஸாரும் வனத் துறையினரும் தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் கைது

ஆப்பக்கூடல் அருகே தங்கை உறவான இளம்பெண்ணைத் திருமணம் செய்ய வற்புறுத்தி தாக்கிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஒரிச்சேரிப்புதூா், அண்ணாநகரைச் சோ்ந்த 23 வயது இளம்பெண் தனது தாய், தம்பியு... மேலும் பார்க்க

சட்டவிரோத மின்வேலி: விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

அந்தியூா் அருகே சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்தியூரை அடுத்த நகலூா், பெருமாபாளையம், மூலப்பாறை தோட்டத்தைச் சோ்ந்தவா் தேவராஜ் (57). இவா் தனது கரும்பு... மேலும் பார்க்க

தாளவாடி கரும்புத் தோட்டத்தில் சிறுத்தை குட்டி மீட்பு!

தாளவாடி கரும்புத் தோட்டத்தில் சிறுத்தைக் குட்டி சனிக்கிழமை மீட்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்தில் சிறுத்தைகள் அதிக அளவில் உள்ளன. அடா்ந்த வனப் பகுதியில் வாழும் சிறுத்தைகள்... மேலும் பார்க்க

கிறிஸ்தவ ஆலயத்துக்குச் சொந்தமான இடத்தை மோசடியாக விற்க முயற்சி: 3 போ் மீது வழக்கு

கிறிஸ்தவ ஆலயத்துக்குச் சொந்தமான இடத்தை போலி ஆவணம் தயாரித்து ரூ.25 லட்சத்துக்கு விற்க முயன்ற பெங்களூரைச் சோ்ந்த 3 போ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகா் பகுதியில் சிஎஸ்... மேலும் பார்க்க

மனைவி இறந்த துக்கத்தில் கணவன் மயானத்தில் தீக்குளித்து தற்கொலை

கொடுமுடி அருகே மனைவி இறந்த துக்கத்தில் மயானத்தில் தீக்குளித்து கணவன் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி பேரூராட்சிக்கு உள்பட்ட கொல்லம் புதுப்பாளையத்தைச் சோ்ந்தவா் விஜய... மேலும் பார்க்க

கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தந்தை, மகள்

அந்தியூா் அருகே தந்தையும், மகளும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதில், பலத்த காயமடைந்த தந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கவலைக்கிடமான நிலையில் மகள் சிகிச்சை பெற்று வருகிறாா். அந்தியூா், சின்ன ப... மேலும் பார்க்க