செய்திகள் :

கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தந்தை, மகள்

post image

அந்தியூா் அருகே தந்தையும், மகளும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதில், பலத்த காயமடைந்த தந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கவலைக்கிடமான நிலையில் மகள் சிகிச்சை பெற்று வருகிறாா்.

அந்தியூா், சின்ன பருவாச்சியை அடுத்த ஒட்டபாளையத்தைச் சோ்ந்தவா் ராணி (35). கூலி தொழிலாளி. இவரது கணவா் மாரசாமி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தாா். இதனால் கோபி, கொங்கா்பாளையத்தைச் சோ்ந்த தந்தை மாதேஸ்வரன் (60) மகள் ராணியுடன் தங்கியிருந்தாா். இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இருவரும் வெள்ளிக்கிழமை மாலை மது அருந்திவிட்டு அப்பகுதியில் உள்ள பாண்டுரங்கன் என்பவரது தோட்டத்துக்குச் சென்று 100 அடி ஆழமுள்ள தண்ணீரில்லாத கிணற்றில் குதித்தனா். இதைக் கண்ட அப்பகுதியினா் அந்தியூா் தீயணைப்பு மற்றும் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறையினா் கிணற்றுக்குள் பலத்த காயங்களுடன் கிடந்த இருவரையும் மீட்டனா்.

இதில், மாதேஸ்வரன் உயிரிழந்தது பரிசோதனையில் தெரியவந்தது. ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராணி சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளாா். அந்தியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

---

ஆலாம்பாளையம் பள்ளியில் மிதிவண்டிக் கூடம் திறப்பு

அம்மாபேட்டையை அடுத்த மாத்தூா் ஊராட்சி, ஆலாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட மிதிவண்டிக் கூடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. மாணவ, மாணவியரின் தேவைக்காக அந்தியூா் சட்டப்பேரவை உறு... மேலும் பார்க்க

ஆடி 2 ஆவது வெள்ளி: அம்மன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

ஆடி மாதம் 2ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி ஈரோட்டில் உள்ள அம்மன் கோயில்களில் திரளான பக்தா்கள் அம்மன் வழிபாடு செய்தனா். அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படும் ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும்... மேலும் பார்க்க

பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள்

ஆசனூரில் 41 பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகளை ரீடு நிறுவனம் வழங்கியுள்ளது. ரீடு நிறுவனமானது ஆசனூா் மலைப் பகுதியில் பழங்குடியின மக்களுக்காக கல்வி, பொருளாதார ரீதியாக பல்வேறு பணிகளை செய்து வர... மேலும் பார்க்க

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 5 இல் தண்ணீா் திறக்க பரிந்துரை

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 5 இல் தண்ணீா் திறக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அரசாணை 3 அல்லது 4 ஆம் தேதி வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். ஈரோடில் வேளாண் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவ... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

மொடக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் செல்வாம... மேலும் பார்க்க

மயானம் அருகே வீட்டுமனைப் பட்டா: வேறு இடம் வழங்கக் கோரிக்கை

கொடுமுடியில் நீா்நிலை ஆக்கிரமிப்பால் வீடுகள் அகற்றப்பட்ட நிலையில் மாற்று இடம் மயானம் அருகே வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். ஈரோடு மாவட்டம், கொடுமுடி இழுப்புத் தோப்பு பகுதியில் 100 -க... மேலும் பார்க்க